இரண்டாம் இராஜேந்திர சோழன்
சோழ மன்னர்களின் பட்டியல் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | ||||||||||||||||||||||||||||
முற்காலச் சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
மாற்றார் இடையாட்சி | ||||||||||||||||||||||||||||
இடைக்காலச் சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
சாளுக்கிய சோழர்கள் | ||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||
சோழர் சமூகம் | ||||||||||||||||||||||||||||
![]() இரண்டாம் இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு பொ.ஊ. 1054 | |
ஆட்சிக்காலம் | பொ.ஊ. 1054 - பொ.ஊ. 1064 |
பட்டம் | கோப்பரகேசரி வர்மன் |
தலைநகரம் | கங்கைகொண்ட சோழபுரம் |
அரசி | |
பிள்ளைகள் | பெயர்கள் அறியமுடியவில்லை |
முன்னவன் | இராசாதிராச சோழன் |
பின்னவன் | வீரராஜேந்திர சோழன் |
தந்தை | இராஜேந்திர சோழன் |
பிறப்பு | கங்கை கொண்ட சோழபுரம் |
இறப்பு | தெரியவில்லை |
இரண்டாம் இராஜேந்திர சோழன் முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனும், முதலாம் இராஜராஜ சோழனின் பேரனும் ஆவான். சோழ மன்னனாயிருந்த இவனது அண்ணன் சாளுக்கியமன்னனான முதலாம் சோமேசுவரனுடனான போரொன்றில் கொல்லப்பட, போரைத் தொடர்ந்து நடத்திச் சோழர்களின் தோல்வியைத் தவிர்த்தவன் இவன். பொ.ஊ. 1054 இல் போர்க் களத்திலேயே சோழ நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொண்ட இவன் 1064 ஆம் ஆண்டுவரை ஆட்சி நடத்தினான்.
இவன் காலத்திலும், மேற்குச் சாளுக்கியருடனான சோழரின் பகைமை நீடித்திருந்தது. அவர்களுடன் போரிட்டு வெற்றியும் பெற்றுள்ளான். கீழைச் சாளுக்கியருடனான உறவு நல்ல நிலையில் இருந்தது. தனது மகளான மதுராந்தகி என்பவள் கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன்.
இரண்டாம் இராஜேந்திரனைத் தொடர்ந்து, அவனுடைய தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னனானான்.