சுரண்டை

ஆள்கூறுகள்: 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுரண்டை
சுரண்டை
இருப்பிடம்: சுரண்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் வீரகேரளம்புதூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

35,272 (2011)

1,357/km2 (3,515/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi)

132 மீட்டர்கள் (433 அடி)

இணையதளம் www.townpanchayat.in/surandai

சுரண்டை (Surandai), இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு 2008-ஆம் ஆண்டு சுரண்டை அரசுக் கலைக் கல்லூரியானது, தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது.

அமைவிடம்[தொகு]

சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

திருநெல்வேலி - 48 கிமீ சங்கரன்கோவில் - 30 கிமீ புளியங்குடி - 30 கிமீ பாவூர்சத்திரம் - 9 கிமீ கடையநல்லூர் - 15 கிமீ ஆலங்குளம் - 17கிமீ தென்காசி - 15 கிமீ.

போக்குவரத்து[தொகு]

திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019 ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ. கே. புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து சுரண்டை வழியாக சென்னை, ஊட்டி,திருப்பதி, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

மதுரை நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றபட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980களில் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திலையில் தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகத்து 24 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரில் 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E / 8.97; 77.4 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "சுரண்டை நகராட்சியின் முதல் தலைவர் யார்?". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Surandai Population Census 2011
  6. "Surandai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரண்டை&oldid=3930085" இலிருந்து மீள்விக்கப்பட்டது