26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2008 மும்பாய் தாக்குதல்கள்
2008 மும்பை தாக்குதல்கள் வரைபடம்
நாள்26 நவம்பர் 2008 – 29 நவம்பர் 2008 (இந்திய சீர் நேரம், ஒ.ச.நே + 05:30)
தாக்குதல்
வகை
குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு, பணயக்கைதிகள் நெருக்கடி[1], முற்றுகை
இறப்பு(கள்)சுமார் 166 (10 தீவிரவாதிகள் உட்பட)
காயமடைந்தோர்308 மேல்
தாக்கியோர்ஹபீஸ் முகமது சயீத் தலைமையில் லஷ்கர் ஈ தொய்பா[2].[3][4]

2008 மும்பை தாக்குதல்கள் இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில், இசுலாமியத் தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகும்.,[5][6][7] தாக்குதல் நடத்தியவர்கள் முன்னரே உளவு உதவிகளை பெற்றிருந்தனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப், தாக்குதல்கள் பாக்கித்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப்பட்டது என்று விசாரணையின் போது ஒப்புக்கொண்டார் . தாக்குதல்கள் 2008ஆம் ஆண்டு புதன் கிழமையான, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை, 29 வரை நீடித்தது; 164 பேர் கொல்லப்பட்டனர்; குறைந்தது 308 பேர் காயப்படுத்தப்பட்டனர்.

தாக்குதல்கள் தெற்கு மும்பையில் எட்டு இடங்களில் ஏற்பட்டது: சத்ரபதி சிவாஜி முனையம் ,தி ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் , தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை (பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை), நரிமன் ஹவுஸ் யூத சமூக கூடம், மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டிடத்தின் பின்னாலுள்ள வழிபாதை மற்றும் சேவியர் புனித கல்லூரி. மும்பை துறைமுகம பகுதி மஜகாணிலும் வில்லே பார்லேயில் ஒரு டாக்ஸியிலும் குண்டு வெடிப்புகள் நடந்தது . 28 நவம்பர் அதிகாலை , தாஜ் ஹோட்டல் தவிர அனைத்து தளங்களையும் மும்பை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தங்களது பாதுகாப்புக்குள் கொண்டுவந்தனர் . 29 நவம்பர், தேசிய பாதுகாப்புப் படை தாஜ் ஓட்டலில் ஆபரேஷன் பிளாக் டொர்னாடோ மூலமாக மீதமுள்ள தீவிரவாதிகளை அகற்றித் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

அஜ்மல் கசாப், தாக்குதல்கள் பாக்கித்தானைச் சார்ந்த தீவிரவாத அமைப்பாகிய லஷ்கர் இ தொய்பாவின் உறுப்பினர்களால் நடத்தப்பட்டது என்று கூறினான். இந்தியா, பாக்கிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் , மற்றும் ஐக்கிய நாடுகள் அவை இதை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றனர். இந்திய அரசாங்கம் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக அறிவித்தது .அவர்கள் பாகிஸ்தானிலிருந்தது கட்டுப்பாட்டுத்தபட்டனர் என்று தெரிவித்தது. சனவரி 7, 2009 அன்று, பாக்கிஸ்தான் தகவல் அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் அதிகாரப்பூர்வமாக அஜ்மல் கசாப் பாகிஸ்தானி தான் என்று ஏற்றுக்கொண்டார். மே 6 2010 அஜ்மல் கசாபுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்தும் 21 பெப்ரவரி 2011 இல் பம்பாய் உயர் நீதிமன்றமும் மற்றும் 29 ஆகஸ்ட் 2012 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

பின்னணி[தொகு]

11 ஜூலை 2006 இரயில் குண்டுவெடிப்பின் போது மும்பை மாஹிம் நிலையத்தில் சேதமடைந்த ரயில் பெட்டிகளில் ஒன்று

12 ஆம் மார்ச் 1993 நடந்த 13 ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகளுக்கு பிறகு பல குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. 1993ல் நடந்த குண்டுவடிப்புகளில் 257 பேர் மரணமடைந்தனர் மற்றும் 700 பேர் காயமடைந்தனர். 1993 தாக்குதல்கள், பாபர் மசூதி இடிப்பிற்கு பதிலடி கொடுக்க என நம்பப்படுகிறது. டிசம்பர் 6,2002 , காட்கோபர் நிலையம் அருகில் ஒரு பெஸ்ட் பஸ்சில் குண்டு வெடித்ததால் இருவர் பலியாகினர்; 28 பேர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பத்தாவது ஆண்டுவிழாவன்று நடைபெற்றது. 27 ஜனவரி 2003, மும்பை நகரத்தில் இந்தியாவின் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயின் விஜயத்திற்கு ஒரு நாள் முன் ஒரு சைக்கிள் குண்டு வைல் பார்லே நிலையம் அருகில் வெடித்தது. ஒருவர் கொல்லப்பட்டார் 25 பேர் காயம் அடைந்தனர். 13 மார்ச் 2003 அன்று, 1993 மும்பை குண்டுவெடிப்பின் பத்தாவது ஆண்டுவிழாவிற்கு மறுநாள், முலுண்டு ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டியில் குண்டு வெடித்தது.அதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர். 28 ஜூலை 2003 அன்று, காட்கோபர் நிலையம் அருகில் ஒரு பெஸ்ட் பஸ்சில் குண்டு வெடித்ததால் நால்வர் பலிஆகினர் 32 பேர் காயமடைந்தனர்.

25 ஆகஸ்ட் 2003, தெற்கு மும்பையில் இரண்டு குண்டுகள் வெடித்தன, ஒன்று கல்பாதேவியிலுள்ள சாவேரி பஜாரிலும் மற்றொன்று இந்தியா நுழைவாயிலின் அருகிலும் வெடித்தது. குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர். 11 ஜூலை 2006 , மும்பை புறநகர் ரயில் நிலையத்தில் 11 நிமிடங்களுக்குள் ஏழு குண்டுகள் வெடித்ததில் 22 வெளிநாட்டவர்கள் உட்பட 209 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்புகள் லஷ்கர் இ தொய்பா மற்றும் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்டது என மும்பை போலிசார் தெரிவித்தனர்.

தாக்குதல்கள்[தொகு]

26 நவம்பர் அன்று பத்து பேர் கொண்ட தீவிரவாத கும்பல் அதிவேக படகுகளில் கோலாபாவிற்கு அருகில் இரண்டு இடங்களில் வந்து இறங்கினர். இரண்டு மீனவர்கள் அன்னியர்களைப் பற்றி போலீஸிடம் புகார் கொடுத்தனர். அதனை விசாரிக்கும் நோக்கில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சத்ரபதி சிவாஜி முனையம்[தொகு]

சத்ரபதி சிவாஜி முனையத்தில் உள்ள புறநகர் முனை சுவர் மீது குண்டு குறிகள்

சத்ரபதி சிவாஜி முனையம் (CST) இரண்டு துப்பாக்கி ஏந்தியவர்களால் தாக்கப்பட்டது . அதனுள் ஒருவன் அஜ்மல் கசாப்; பின்னர் போலீசாரால் உயிருடன் பிடிக்கப்பட்டு நேரில் பார்த்தவர்களல் அடையாளம் காட்டப்பட்டவன். இருவரும் பயணிகள் மண்டபத்துள் நுழைந்து 21:30 மணியளவில் ஏகே-47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தினர். தாக்குதளில் 58 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 104 பேர் காயம் அடைந்தனர். 22:45 மணிக்கு அவர்களின் தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது . பாதுகாப்புப் படைகள் மற்றும் அவசரச் சேவைகள் விரைவில் வந்தன . இரண்டு துப்பாக்கி ஏந்தியவர்களும் தப்பிக்கும் போது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தாக்குதல்காரர்கள் ஒரு போலீஸ் நிலையத்தை கடந்து சென்ற போது போலீஸ் அதிகாரிகள் தாக்குதலை எதிர்கொள்ள அஞ்சி விளக்குகளை அணைத்துக் கதவுகளை அடைத்தனர். தாக்குதல்காரர்கள் பின்னர் நோயாளிகளை கொல்லும் நோக்கத்துடன் காமா மருத்துவமனை நோக்கி சென்றனர். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளியின் வார்டுகளை பூட்டினர் . போலீஸ் தலைமை அதிகாரி ஹேமந்த் கர்கரே தலைமையிலான மும்பை பயங்கரவாத எதிர்ப்பு அணி சத்ரபதி சிவாஜி முனையத்தில் தேடியதன் பின்னர் கசாப் மற்றும் கானை பிடிக்கும் நோக்கத்தில் களமிரங்கினர். கசாப் மற்றும் கான் மருத்துவமனைக்கு அடுத்த ஒரு வழிப்பாதையில் இருந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் மற்றும் போலீஸார் அதற்கு பதில் தாக்குதல் நடத்தினர். அப்பொழுது அவர்கள் நடத்திய துப்பாக்கி சூடில் கர்கரே , விஜய் சலச்கர் , அசோக் காம்தே மற்றும் ஒரு அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர். அதில் உயிர் பிழைத்த ஒரே அளான கான்ஸ்டபிள் அருண் ஜாதவும், காயம் அடைந்திருந்தார். கசாப் மற்றும் கான் போலீஸ் வாகனத்தை அபகரித்தனர். ஆனால் பின்னர் அதை கைவிட்டு, அதற்கு பதிலாக ஒரு பயணிகள் வாகனத்தை அபகரித்தனர். பின்னர் ஜாதவ் உதவி கோரியிருந்ததால், போலீஸ் உருவாக்கியிருந்த வழி மறிப்பில், சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து நடந்த ஒரு துப்பாக்கி சண்டையில் கான் கொல்லப்பட்டார் மற்றும் காயம் அடைந்த கசாப் பின்பு கைது செய்யப்பட்டார். ஒரு போலீஸ் அதிகாரி, துக்காராம் ஓம்பலே, கொல்லப்பட்டார்.

லியோபோல்ட் கஃபே[தொகு]

லியோபோல்ட் கஃபே, தெற்கு மும்பையில் கோலப காசெவேவில் (Colaba Causeway) உள்ள ஒரு பிரபலமான உணவகமாகும் . இதுவே முதலாவதாக தாக்கப்பட்ட இடமாகும். இரண்டு தீவிரவாதிகள் 26 நவம்பர் மாலை, கஃபேயின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர் . குறைந்தது 10 பேர் (சில வெளிநாட்டவர்கள் உட்பட) கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள், சம்பவம் நடந்த இடத்தை விட்டு தப்பி செல்லும் முயற்சியில், தெருவில் நுழைந்து துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர்.

டாக்சிகளில் நடந்த குண்டு வெடிப்புகள்[தொகு]

டைமர் குண்டுகள் கொண்டு, டாக்ஸிகள் இரண்டில், வெடிப்புகள் நடந்தன. முதலாவது குண்டு வெடிப்பு 22:40 மணிக்கு விலே பார்லேயில் நடந்தது. அதில் ஓட்டுனர் மற்றும் ஒரு பயணி கொல்லப்பட்டனர். இரண்டாவது வெடிப்பு 22:20 மற்றும் 22:25 இடையே வாடி பந்தரில் நடந்தது. டாக்சி டிரைவர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 15 பேர் காயமுற்றனர்.

தாஜ் மஹால் ஹோட்டல் மற்றும் ஓபராய்[தொகு]

சேதமடைந்த ஓபராய் ஹோட்டல்

இரண்டு விடுதிகள், தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர், ஓபராய், தீவிரவாதிகளால் குறி வைக்கப்பட்டன. முற்றத்தில் ஒன்று, லிஃப்ட்டில் இரண்டு, உணவகத்தில் மூன்று - மொத்தத்தில் ஆறு வெடிப்புகள் தாஜ் ஹோட்டலில் நடந்தன. மற்றும் ஓபராயில் ஒரு குண்டு வெடிப்பு நடந்தது. தாஜ் மஹால் விடுதியில், தீயணைப்பு வீரர்கள் ஜன்னல்கள் வழியாக ஏணிகளை கொண்டு 200 பணயக் கைதிகளை மீட்டனர். நவம்பர் 27 2008 அன்று காலையில் அனைத்து பணயக் கைதிகளை மீட்டதாகவும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் மகாராஷ்டிரா போலீஸ் தலைமை அதிகாரி குறிப்பிட்டதாக சிஎன்என் தொலைகாட்சி அறிவித்தது; எனினும், இன்னும் இரண்டு தீவிரவாதிகள் வெளி நாட்டவர் உற்பட பலரை பணயக் கைதிகளாக வைத்திருப்பதாக தெரியவந்தது.

தாஜ் விடுதி முதல் மாடியில் உள்ள வசாபி உணவகம் முற்றிலும் அழிக்கப்பட்டது.

தாக்குதலின் போது, இரு விடுதிகளும் அதிரடி படை வீரர்கள் மற்றும் கடல் செயல் வீரர்கள் (மார்கோஸ்) மற்றும் தேசியப் பாதுகாப்பு காவலர்களால் சூழப்பட்டது. தொலைக்காட்சி ஒளிபரப்பு பாதுகாப்புக் கருதி தடை செய்யப்பட்டது. நவம்பர் 29 அன்று பாதுகாப்பு படைகள் அதிரடியாக இரண்டு ஒட்டல்களுக்குள்ளும் நுழைந்து தாக்கினார்கள். அப்பொழுது ஒன்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் மீட்பு நடவடிக்கைகளின் போது குண்டால் தாக்கப்பட்ட மாண்டோ சுனில் யாதவ்வை மீட்கும் போது கொல்லப்பட்டார். 32 பணயக் கைதிகள் ஓபராய் விடுதியில் கொல்லப்பட்டனர்.

தாக்குதல்களின் போது சர்வதேச வர்த்தகதிற்கான ஐரோப்பிய நாடாளுமன்ற குழு பிரதிநிதிகள் பலர் தாஜ் மஹால் ஹோட்டலில் தங்கி இருந்தனர் . ஆனால் அவர்கள் யாரும் காயமடையவில்லை. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் (MEP) சஜ்ஜத் கரீம், ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின் எரிக்கா மான், ஸ்பானிய நாடாளுமன்ற உறுப்பினர் இக்னாசி கார்டன்ஸ் , பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் உறுப்பினர் சையத் கமால், போலாந்து நாட்டு உறப்பினர் ஜனவரி மாசில்ம், மாட்ரிட் நாட்டு ஜனாதிபதி எஸ்பெரான்ஸா அகுய்றே முதலியவர்கள் தப்பித்தனர்.

நரிமன் ஹவுஸ்[தொகு]

தாக்குதல்கள் நடந்ததன் ஒரு வாரம் பின்னர் நார்மன் ஹவுஸ் காட்சி.

நரிமன் ஹவுஸ், மும்பை சபாத் ஹவுஸ் கொலாபாவில் உள்ள யூத சமுக கூடம், இரண்டு தீவிரவதிகளால் தாக்கப்பட்டது. போலீஸ் அருகில் இருந்த கட்டிடங்களை காலி செய்து பின்னர் தாக்குதலை நடத்தினர். கமாண்டோக்கள் தில்லியிலிருந்து வந்தனர். ஒரு கடற்படை ஹெலிகாப்டர் வான்வழி ஆய்வு நடத்தியது. முதல் நாள் போது, 9 பணயக் கைதிகள் முதல் மாடியில் இருந்து மீட்கப்பட்டனர். மறு நாள், கமாண்டோக்கள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர் . நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, கமாண்டோ ஹவால்டர் கஜேந்தர் சிங் பிஷ்ட் மற்றும் இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ரப்பி கவரில் ஹோல்த்ழ்பெர்க் மற்றும் அவரது ஆறு மாத கர்ப்பமாக இருந்த மனைவி ரிவ்க ஹோல்த்ழ்பெர்க் மற்றும் நான்கு பணய கைதிகளும் கொலை செய்யப்பட்டனர்.

இந்திய உளவுத்துறை செய்தியின்படி, "யூதர்களின் உயிர் மற்றவர்கள் உயிரை காட்டிலும் 50 பங்கு மதிப்பு அதிகம்" என்று தாக்குதல் நடத்தியவர்களிடம் கூறப்பட்டிருந்தது. உடலில் இருந்த காயங்களின் தன்மை அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை தெரிவிக்கின்றது

தேசிய பாதுகாப்பு காவலர்கள்[தொகு]

1986 இல் இந்திய நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புப் படை சட்டத்தின் கீழ் அமைச்சரவை செயலகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு காவலர்கள் என்ற அமைப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது மத்திய ஆயுத போலீஸ் படையின் கீழ் முழுமையாக வேலை செய்கின்றது. தேசியப் பாதுகாப்பின் இரண்டாவது முக்கிய அங்கமாக திகழ்கின்றது. அவர்கள் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பதில் ஒரு முக்கிய பங்களித்துள்ளனர். தேசிய பாதுகாப்புப் படை அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட தீவிரவாத அமைப்புகளையும் முறியடித்துள்ளனர் . ஆசியாவிலேயே சிறப்பாகச் செயலாற்றும் அமைப்பாக திகழ்கின்றது.

தாக்குதல்களின் முடிவு[தொகு]

27 நவம்பர் காலை, தேசிய பாதுகாப்பு காவலர்கள் நரிமன் ஹவுஸ், யூத நலனுக்கான மையம் , ஓபராய் ஹோட்டல் முதலியவற்றை தங்கள் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் அவர்கள் தவறாக தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவரில் தீவிரவாதிகள் இல்லை என்று நம்பி, இராணுவத்தினர் பணயக் கைதிகள் மற்றும் விருந்தினர்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் நீக்கம் செய்யப்பட்டன. எனினும், பின்னர் செய்தி அறிக்கைகள் தாஜ் ஓட்டலில் வெடிப்புகளைக் கேட்டு, மேலும் இரண்டு அல்லது மூன்று தீவிரவாதிகள் இருப்பதகவும் துப்பாக்கிச்சூடு பரிமாறிக் கொள்வதாகவும் அறிவித்தனர். கீழ்த் தளத்தில் தீ பிடித்து புகை மேல் தளம் வரை பரவியது. தேசியப் பாதுகாப்புக் காவலர்களால் தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் இறுதி நடவடிக்கையாக 29 நவம்பர் 08:00 மணிக்கு மூன்று தீவிரவாதிகளைக் கொலை செய்து தாக்குதல்கள் முடிவுக்குக் கொண்டு வந்தனர். தேசியப் பாதுகாப்புக் காவலர்களால் ஒபிராயிலிருந்து 250 பேரும், தாஜிலிருந்து 300 பேரும் மற்றும் நரிமான் ஹவுசிலிருந்து 60 பேரும் மீட்கப்பட்டனர். மேலும், போலிசாரால் மும்பைத் துறைமுகத்தில் இருந்து ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டது.

பழி ஏற்பு[தொகு]

மும்பை தாக்குதல் பாக்கிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளால் திட்டமிட்டு இயக்கப்பட்டது. பயிற்சி பெற்ற, ஆயுதம் ஏந்திய பத்து இளம் ஆண்கள் நடத்திய மும்பை தாக்குதல் கைபேசிகள் மற்றும் VoIP களின் வழியாக பாக்கிஸ்தானிலிருந்து இயக்கப்பட்டது. ஜூலை 2009 பாகிஸ்தானிய அதிகாரிகள் கராச்சி மற்றும் தட்டாவில் உள்ள லஷ்கர் முகாம்களில் இருந்து தாக்குதல்கள் இயக்கபட்டன் என்று உறுதி செய்தனர். நவம்பர் 2009 இல், பாகிஸ்தான் அதிகாரிகள் திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தியதற்காக ஏழு பேரை கைது செய்தனர்.

மும்பை போலீஸ், சந்தேகத்தின்பேரில் இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட 37 நபர்களை சதியில் தொடர்பு இருப்பதாக அடையாளம் காட்டினர். அதில் இருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள். அக்டோபர் 2009 இல் அமெரிக்காவில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு மும்பை தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டனர். பாகிஸ்தானிய அமெரிக்கர் டேவிட் ஹெட்லி, தாக்குதளுக்கு முன் இந்தியாவிற்கு பல பயணங்கள் மேற்கொண்டு வீடியோ மற்றும் ஜி.பி.எஸ் தகவல்களை சேகரித்ததாக கண்டறியப்பட்டார்.

ஏப்ரல் 2011 இல், அமெரிக்காவில் தாக்குதல்களுக்காக சந்தேகத்தின் பேரில் நான்கு பாகிஸ்தான் ஆண்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. சஜித் மிர், அபு கஹபா , மசார் இக்பால், மற்றும் மேஜர் இக்பால், லஷ்கர் இ தொய்பா உறுப்பினர்கள் என்றும் தாக்குதலுக்கு பயிற்சி அளித்ததாகவும் நம்பப்படுகிறது.

பாக்கிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள்[தொகு]

பாக்கிஸ்தான் ஆரம்பத்தில் தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்க மறுத்தது. வங்காளம் மற்றும் இந்திய கிரிமினல்கள் தான் இந்த திட்டத்தை தீட்டியவர்கள் என்று குறிப்பிட்டது; இந்தியா மறுத்தது. மேலும் முதலில் இந்தியாவிடமிருந்து வேறு சில குண்டுவெடிப்புகள் பற்றிய தகவல் தேவை என்றும் பாக்கிஸ்தான் கூறியது. 7 ஜனவரி 2009 அன்று, பாகிஸ்தான் அதிகாரிகள், அஜ்மல் கசாப் ஒரு பாகிஸ்தானி என்று ஒப்புக்கொண்டனர் மற்றும் மூன்று பிற பாகிஸ்தானியர்களுக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்தது.

இந்திய அரசாங்கம் விசாரணைகள், ஆயுதங்கள், மற்றும் தாக்குதல்கள் போது நடந்த உரையாடல்களின் பதிவுகள் போன்ற இதர அரசாங்க சான்றுகளை பாகிஸ்தானிடம் வழங்கியது. மேலும், இந்திய அரசு தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிகரிகளின் ஆதரவும் இருந்திருக்க வேண்டும் என்று கூறியது. அக்குற்றச்சாட்டை, பாக்கிஸ்தான் மறுத்தது.

அமெரிக்க மற்றும் ஐ.நா.வின் வற்புறுத்தலால், பாக்கிஸ்தான் ஜமாத் உத் தாவாவின் சில உறுப்பினர்களை கைது செய்தது. அதன் நிறுவனரை குறுகிய காலத்திற்கு வீட்டு காவலில் வைத்தது. ஆனால் அவர் ஒரு சில நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார் என கண்டறியப்பட்டது. தாக்குதலுக்கு ஒரு ஆண்டு பின்னரும் மும்பை போலீசார், பாகிஸ்தானிய அதிகாரிகளிடமிருந்து ஒத்துழைப்பு இல்லை என்று புகார் செய்தனர். இதற்கிடையில், பாக்கிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்கள், கசாப் இருந்த கிராமத்தில் உள்ள மக்களை நேர்காணல் செய்ய விடாமல் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்ததாக கூறினர். உள்துறை அமைச்சர் சிதம்பரம், பாகிஸ்தானிய அதிகாரிகள் ஹெட்லி மற்றும் ராணா பற்றிய எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், ஆனால் எப்.பி. ஐ ஆதரவு அளிப்பதகவும் கூறினார்.

டேவிட் ஹெட்லியிடம் இந்தியா நடத்திய விசாரணையின் அறிக்கையை சுருக்கி உளவுத்துறை, அக்டோபர் 2010 இல் வெளியிட்டது. இந்த அறிக்கை, பாக்கிஸ்தானின் புலனாய்வு நிறுவனமான ஐஎஸ்ஐ, மும்பை உளவு பணிக்காக நிதி வழங்கியதன் மூலம் தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கியதாக கூறியது. லஷ்கர் எ தொய்பாவின் தலைமை இராணுவ தளபதியான, சகி-உர்-ரகுமான் லக்ஹ்விக்கும், ஐஎஸ்ஐகும் நெருக்கமான உறவு உள்ளதாக என்று ஹெட்லியின் அறிக்கையை வெளியிட்டது. அவர் "ஒவ்வொரு பெரிய நடவடிக்கையும் ஐஎஸ்ஐயின் நெருக்கமான ஒருங்கிணைப்புடனே செய்யப்படுகின்றது" என்றும் குற்றம் சாட்டினார்.

விசாரணை[தொகு]

போலீஸ் கொலாபா வெளியே தீவிரவாதிகளை தேடுகின்றனர்

விசாரணையின் படி, தாக்குதல்காரர்கள், அரபிக்கடல் வழியாக பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து பயணம் செய்து, இந்திய மீன்பிடி கப்பலான குபேரை கடத்தினர். நான்கு குழுவினரையும் கொலை செய்தனர், பின்னர் மும்பைக்கு பயணம் செய்ய கேப்டனை கட்டாயம் செய்தனர். கேப்டனை கொலை செய்த பின்னர், தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு ஊதி பெரிதாக்க வல்ல ரப்பர் படகு மூலம் மும்பையை அடைந்தனர். குபேர் கேப்டன் அமர் சிங் சொலான்கி, இதற்கு முன்னர் சட்டவிரோதமாக பாகிஸ்தான் கடலில் மீன் பிடித்ததற்காக, ஒரு பாகிஸ்தான் சிறையில் ஆறு மாதங்கள் இருந்தார்.

தாக்குதல்காரர்களுக்கு, படகின் மூலம் மும்பை வருவதற்கு முன்னராக, கராச்சி அருகே அஜிசபாத்யில் ஒரு பாதுகாப்பான இடத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பினரால் பயிற்சி அளிக்கப்பட்டது. டேவிட் ஹெட்லி லஷ்கர் ஈ தொய்பாவின் ஒரு உறுப்பினராக இருந்தார், மற்றும் 2002 மற்றும் 2009 ஆண்டுகளின் இடையே ஹெட்லி தனது வேலையின் ஒரு பகுதியாக விரிவான பயணம் மேற்கொண்டார். ஹெட்லி, சிறிய ஆயுதங்களைப் பற்றியும் கண்காணிப்பு முறைகளைப் பற்றியும் பயிற்சி பெற்று பலருடம் இணைப்புகள் ஏற்படுத்திக்கொண்டு, மும்பை தாக்குதலுக்கான இலக்குகளை நிர்ணயம் செய்தார். இந்த வேலைக்காக, மேஜர் இக்பால் என்றழைக்கப்படும் ஒரு ஐஎஸ்ஐ அதிகாரியிடமிருந்து 2006 ஆம் ஆண்டில் 25,000 டாலர்கள் பணத்தை பெற்றுக்கொண்டார். மேஜர் இக்பால் தாக்குதலுக்கான ஒரு தகவல் அமைப்பை ஏற்பாடு செய்து மற்றும் துப்பாக்கி ஏந்தியவர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லும் வழியை அறிவதற்காக தாஜ் மஹால் ஹோட்டலின் ஒரு மாதிரியையும் மேற்பார்வையிட்டார். இதை இந்திய அதிகாரிகளிடம் ஹெட்லி தனது வாக்குமூலத்தின் போது கூறினார். ஐஎஸ்ஐ இந்தியர்களை பணியமர்த்தி இந்திய துருப்புக்களின் நிலைகளையும் மற்றும் இயக்கங்களையும் கண்காணிக்க ஹட்லி உதவினார். அதே நேரத்தில், ஹெட்லி அமெரிக்க போதை தடுப்பு அமலாக்கும் துறைக்கு ஒரு தகவல் அளிப்பவராகவும் இருந்ததார். ஹெட்லியின் மனைவிகள், லஷ்கர் ஈ தொய்பாவிற்கும் ஹெட்லிக்கும் உள்ள தொடர்பு பற்றியும், குறிப்பாக அவர்களது சதி தாக்குதலுக்கு தாஜ் மஹால் ஓட்டல் இலக்காக இருக்கலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகளை எச்சரித்திருந்தனர்.

அமெரிக்க அதிகாரிகள், உள்நாட்டு புலனாய்வு சேவை (ஐஎஸ்ஐ) அதிகாரிகள் தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதாக நம்பினர்.

ஜூன் 2012 இல் சபயுத்தின் அன்சாரி அல்லது அபு ஹம்சா என்பவரை கைது செய்ததன் பிறகு வழக்கில் சதியை மேலும் தெளிவானது. அபு ஹம்சாவின் வாக்குமூலத்தின் படி, தாக்குதல்களை 2006 இல் இந்திய இளைஞர்களை பயன்படுத்தி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும்,ஏகே-47 மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள் தாக்குதல்களுக்கு முன்பே 2006 ஆம் ஆண்டு அவுரங்காபாத்தில் பிடிபட்டதால் இந்த சதி முறியடிக்கப்பட்டது. பின்னர், அபு ஹம்சா பாக்கிஸ்தானுக்கு தப்பி சென்று லஷ்கர் தளபதிகளுடன் சேர்ந்து, தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் இளைஞர்கள் பலரை தேடினார். செப்டம்பர் 2007 இல், பத்து பேர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். செப்டம்பர் 2008 இல், இவர்கள் கராச்சியில் இருந்து மும்பைக்கு வரும் பயண முயற்சி, கடலில் சுழல் நீர் காரணமாக கைவிடப்பட்டது. இவர்கள் நவம்பர் 2008 இல் இரண்டாவது முயற்சி செய்து, வெற்றிகரமாக இறுதி தாக்குதல்களை நிகழ்த்தினர். மூன்று பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகளுக்கு தாக்குதல், திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் தொடர்பு இருப்பதாக டேவிட் ஹெட்லி தனது விசாரணையின் போது கூறியதை அன்சாரி தனது வாக்குமூலத்தில் உறுதிபடுத்தினார். அன்சாரி கைதான பின்னர், பாக்கிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் 40 இந்தியர்கள் தாக்குதல்கள்களில் ஈடுபட்டனர் என்று தகவல் அளித்தது.

செயல்முறை[தொகு]

தாக்குதல்களை நடத்தியவர்கள் பல மாதங்களுக்கு முன்னதாகவே தாக்குதலை திட்டமிட்டு தாக்குதல் முடிந்தபின் மறைந்து பாதுகாப்பு படைகள் சென்ற பின்னர் மீண்டும் வெளிவர திட்டம் தீட்டினர். கசாப் குழு மும்பை வாசிகளிடமிரிந்து உதவி பெற்றதாக போலிசார்களிடம் கூறியதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. தாக்குதலை நடத்தியவர்கள் பயன்படுத்திய குறைந்தது மூன்று சிம் கார்டுகளை இந்திய வங்காள எல்லையில் வாங்கினர். அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியிலும் ஒரு சிம் அட்டை வாங்கப்பட்டது என்பதற்கான அறிக்கைகள் இருந்தன. பிப்ரவரி 2008 இல் கைது செய்யப்பட்ட இந்திய லஷ்கர் உறுப்பினர் அன்சாரி, நவம்பர் மும்பை தாக்குதலுக்கான இலக்குகளை தேடியதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர், போலீசார் சந்தேகத்தின் பேரில் காஷ்மீர், ஸ்ரீநகரில் இருந்து மிக்ஹ்டார் அகமது என்பவரையும், மற்றும் கொல்கத்தாவிலிருந்து தாசிப் ரஹ்மான் என்பவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரும் புது தில்லியில் ஒன்றும் கல்கத்தாவில் ஒன்றுமாக அந்த சிம் அட்டைகளை வழங்கினர்.

சீன அரசிற்கு சொந்தமான நொறின்கோ 86 வகை கையெறி குண்டுகள் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட இரத்த பரிசோதனைகளின் மூலம், அவர்கள் ஆற்றலை தக்க வைத்து கொள்ளவும் மற்றும் 50 மணி நேரம் தாக்குதல்கள் காலத்தில் விழித்திருக்கவும் கோக்கைன் மற்றும் எல்எஸ்டி போதை மருந்துகளை உட்கொண்டனர் என தெரியவந்தது. தாக்குதல் நடந்த இடங்களில் போலீசார் ஊசிகளை கண்டுபிடித்தனர். அவர்கள் ஸ்டெராய்டுகள் எடுத்து கொண்டதற்கான அறிகுறிகளும் இருந்தன. உயிர் தப்பிய துப்பாக்கி ஏந்திய நபர், தாக்குதல்களுக்கு முன் கட்டடங்களின் அமைவிடங்களை பரிச்சயப்படுத்திகொள்ள, கூகுள் எர்த் பயன்படுத்தியதாக கூறினார்.

பாதுகாப்பு படையினரால் ஒன்பது தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஒருவன் மட்டும் கைபற்றபட்டான். இவர்கள் இருபது வயதினர் என்றும் கருப்பு சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தனர் என்றும் சிரித்து கொண்டே மகிழ்ச்சியுடன் சுட்டனர் என்றும் சாட்சிகள் கூறுகின்றனர்.

தாக்குதலை நடத்தியவர்கள் சில பிரிட்டிஷார் என்று ஆரம்பத்தில் அறிவித்து, ஆனால் பின்னர் இந்திய அரசாங்கம் இதனை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. இதேபோல், துப்பாக்கி ஏந்தியவர்கள் 12 பேர் என்ற செய்தியும் மறுக்கப்பட்டது.

9 டிசம்பர், அன்று மும்பை போலீசாரால் அடையாளம் காட்டப்பட்ட 10 பாகிஸ்தானிய நபர்கள்: ஃபரித்கோட்டில் இருந்து அஜ்மல் அமீர், தேரா இஸ்மாயில் கானிலிருந்து அபு இஸ்மாயில் தேரா இஸ்மாயில் கான் , முல்டானிலிருந்து இருந்து ஹபீஸ் அர்ஷத் மற்றும் பாபர் இம்ரான், ஒகரவிலிருந்து ஜாவேத், நரோவளிலிருந்து சோயிப், பைசிலாபாத்திலிருந்து நழிஹ் மற்றும் நாசர் அறிப்வல்லவிலிருந்து அப்துல் ரகுமான் மற்றும் டிபல்பூர் தாலுகாவில் இருந்து ஃபஹாத் ஹுல்லஹ். தேரா இஸ்மாயில் கான் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ளது; மற்ற நகரங்களில் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ளன.

மும்பை 2008 தாக்குதலில் இறந்த ஒன்பது பாகிஸ்தான் துப்பாக்கி ஏந்தியவர்களின் உடல்கள் ஜனவரி 2010 இல் ஒரு ரகசிய இடத்தில் அடக்கம்செய்யப்பட்டது என்று 6 ஏப்ரல் 2010 அன்று, மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார். முஸ்லீம் மத குருமார்கள் தீவிரவாதிகளின் உடல்களை அவர்களின் புதை மைதானங்களில் புதைக்கப்பட அனுமதி மறுத்த நிலையில், மும்பை மருத்துவமனை சவக்கிடங்கில் உடல்கள் அதுவரை இருந்தன.

கைதுகள்[தொகு]

அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் கைது செய்த்யபட்ட தாக்குதல்காரன். அவன் தற்பொழுது சிறையில் உள்ளான். தாக்குதலுக்கான தயாரிப்பு, பயணம், மற்றும் இயக்கங்கள் பற்றிய தகவல்களை மும்பை போலீசார் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் இருந்து தெரிந்து கொண்டனர்.

மும்பை தாக்குதலின் பொழுது ஸ்பெயின் நாட்டின் VoIP தொலை பேசிகளை வாங்கியதற்காக ஜாவேத் இக்பால் என்பவரையும் பணம் பரிமாற்றத்திற்கு வசதி செய்துக்கொடுத்த ஹமாத் அமீன் சாதிக் என்பவரையும் கைது செய்ததாக 12 பிப்ரவரி 2009 அன்று, பாக்கிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தெரிவித்தார். கான் மற்றும் ரியாஸ் (முழு பெயர்கள் கொடுக்கப்படவில்லை) கைது செய்யப்பட்டனர். 21 நவம்பர் 2009 அன்று, இத்தாலியில் உள்ள ப்ரேச்சியா நகரில் (மிலன் நகருக்கு வட மேற்கில்) இரண்டு பாகிஸ்தானியர்கள் தாக்குதல்களுக்கு ஆதரவினை வழங்கியதர்க்காகவும், தவறான அடையாளத்தை பயன்படுத்தி இணைய தளத்தின் வழயாக 200 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக மாற்று செய்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டனர். இன்டர்போலினால் அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது . இது கடந்த ஆண்டின் தாக்குதலுக்கு பின்னர் வெளியிடப்பட்டது.

அக்டோபர் 2009 இல், டேவிட் கோல்மேன் ஹெட்லி, மற்றும் தஹவ்வூர் ஹுசைன் ராணா என்ற இரண்டு சிகாகோ நகரை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதற்காக, எப்.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானிய அமெரிக்கன் ஆன ஹெட்லி, 2008 மும்பை தாக்குதலுக்கான இடங்களை ஆய்வு செய்ததற்காக நவம்பர் 2009 இல் கைது செய்யப்பட்டார். ஹெட்லி ஒரு அமெரிக்க யூதரைப்போல் பாவித்தடோடு இல்லாமல் வங்காளத்தில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய குழுக்களோடு தொடர்பு உடையவர் எனவும் நம்பப்படுகிறது. 18 மார்ச் 2010 அன்று, ஹெட்லியை 12 குற்றங்களுக்காக விசாரணை செய்தபொழுது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

டிசம்பர் 2009 இல், எப்.பி.ஐ ஹெட்லியுடன் இணைந்து பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டதற்காக பாகிஸ்தானிய இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அப்துர் ரஹ்மான் ஹஷிம் சையத் என்பவரையும் குற்றம் சாட்டியது .

15 ஜனவரி 2010 அன்று, ஒரு வெற்றிகரமான நடவடிக்கையினால் அதிகாரிகள் ஹ்யூஜி இந்தியா நடவடிக்கைகளின் தலைவர் , 26/11 தாக்குதல்கள் முக்கிய பங்காற்றியவர் , மற்றும் மிகவும் வேண்டப்பட்ட தீவிரவாதியான ஷேக் அப்துல் க்வாஜாவை,ஸ்ரீலங்காவில் உள்ள கொழும்பிலிருந்து ஹைதெராபாத்கொண்டுவந்து கைது செய்தனர்.

25 ஜூன் 2012, தில்லி போலீசார், புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் தாக்குதலில் அதிகளவில் சந்தேகப்பட்ட நபரான சபயுட்டின் அன்சாரி அல்லது அபு ஹம்சா என்றழைக்கப்படுபவரை, கைது செய்தது. அவரது கைது கசாப் கைதிக்கு பிறகு வழக்கில் மிக முக்கியமான வளர்ச்சியாக கருதப்பட்டது. தில்லி பாதுகாப்பு அமைப்புகள் அவரை 3 ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தனர். அன்சாரி ஒரு லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதி மற்றும் 2008 ஆம் ஆண்டில் மும்பை தாக்குதலுக்கு காரணமான 10 பயங்கரவாதிகளுக்கு ஹிந்தி கற்றுக் கொடித்தவர் ஆவார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர், இந்திய அதிகாரிகளின் அதிகாரபூர்வமான கோரிக்கையின்படி, சவுதி புலனாய்வு அதிகாரிகள் அவரை இந்தியா அனுப்பி வைத்தனர்.

அன்சாரி கைதுக்கு பின்னர், விசாரணையின் பொழுது அவர் 2009 இல் மகாராஷ்டிரா அரசின் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மந்திரியான பௌஜியா கானின், பழைய உறுப்பினர் விடுதியில் ஒரு அறையில் ஒரு நாள் தங்கி இருந்தது தெரியவந்தது. எனினும் அமைச்சர் அவனுடன் தொடர்பு இருப்பதை மறுத்தார். உள்துறை அமைச்சர் சிதம்பரம், அன்சாரி பாக்கிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில், கட்டுப்பாட்டு அறையில் இருந்தார் எனவும் இது மாநிலத்தின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது என்றும் வலியுறுத்தினார். அன்சாரியின் விசாரணையின் பொழுது சஜித் மிர் மற்றும் ஒரு பாகிஸ்தான் இராணுவ அதிகாரி போலி பெயர்களில் கிரிக்கெட் பார்வையாளர்களாக தில்லி மற்றும் மும்பை இலக்குகளை ஆய்வு செய்ய பதினைந்து நாட்களுக்கு இந்திய பயணம் செய்தது தெரியவந்தது.

உயிரிழந்தோரும் உதவித்தொகையும்[தொகு]

குறைந்தது 166 பாதிக்கப்பட்டவர்கள் (பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர்) மற்றும் ஒன்பது தாக்குதல் காரர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களுள் 10 நாடுகளில் இருந்து 28 வெளிநாட்டவர்களும் இருந்தனர். ஒரு தாக்குதல்காரன் மட்டுமே கைப்பற்றப்பட்டான். இறந்த பிணையக் கைதிகளின் உடல்கள் சித்திரவதை அல்லது சிதைப்புக்கு உள்ளாகியிருந்தன. கொல்லப்பட்டவர்களில் பல குறிப்பிடத்தக்க தொழில் பிரமுகர்கள் மற்றும் செய்தித்துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்களாக இருந்தனர். மகாராஷ்டிரா அரசாங்கம் பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் தீவிரமாக காயமடைந்தவர்களுக்கும் உதவித்தொகையை அறிவித்தது. ஆகஸ்ட் 2009 இல், இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் ஓபராய் குழு, இந்திய பொது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து, தாஜ் மஹால் மற்றும் ட்ரிடென்ட் மீதான தாக்குதலுக்கு, காப்பீடு கணக்கில் ஒரு பகுதியாக சுமார் $ 28 மில்லியன் டாலர் பெற்றன.

பின்விளைவுகள்[தொகு]

தாக்குதல்கள் சில நேரங்களில் 9/11 தாக்குதல்கள் (மாட்ரிட்டில் 3/11 தாக்குதல் போல) என்றும் தாக்குதல்கள் தொடங்கிய நாளான 26 நவம்பர் 2008 ஆம் தேதியை குறிக்கும் வகையில் "26/11" என்று இந்தியாவில் குறிப்பிடப்படுகிறது. மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ள பிரதான் விசாரணை கமிஷன், நிகழ்வுகளுக்கு ஒரு ஆண்டு பிறகு சட்டமன்றத்தின் முன் ஒரு அறிக்கையை தயாரித்து தாக்கல் செய்தது. அந்த அறிக்கை "போர் போன்ற" தாக்குதல் எந்த போலீஸ் படையின் திறனையும் மிஞ்சியது என்றும் ஆனால் இந்த நெருக்கடியின் போது மும்பை தலைமை போலீஸ் கமிஷனர் ஹசன் கபோரின் தலைமையில் குறை கண்டது.

மகாராஷ்டிரா அரசு,கடலோர ரோந்து பணிக்காக 36 வேக படகுகள் மற்றும் அதே பணிக்காக பல ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டமிட்டது. "போர்ஸ் ஒன்" என்ற பயங்கரவாத எதிர்ப்பு படையை உருவாக்கவும் மும்பை போலீசாரிடம் தற்போது உள்ள அனைத்து ஆயுதங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சட்ட கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் எப்.பி.ஐ போல, பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய புலனாய்வு முகமை ஆகியவை தீவிரவாதத்திற்கு எதிரான போரை ஒருங்கிணைக்க விரைவில் அமைக்க வேண்டும் என்று கூறினார். அரசாங்கம் UAPA 2008 மூலம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை பலப்படுத்தியது. மேலும் மத்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி உருவாக்கப்பட்டது.

பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு இடையான உறவை இந்த தாக்குதல்கள் பாதித்தன. அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி (தற்போது இந்திய ஜனாதிபதி) இந்தியா தனது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க பாக்கிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான இராணுவ தாக்குதல்களை நடத்த கூடும் என்று அறிவித்தார். இரு நாடுகளுடன் அமெரிக்கா கொண்டிருந்த உறவுகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்க தலைமையிலான ஆப்கானிஸ்தானில் நேட்டோ போர், மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் முதலியவற்றிலும் பின் விளைவுகள் ஏற்பட்டன. எப்.பி.ஐ தலைவரான ராபர்ட் முல்லர், மும்பை பயங்கரவாத தாக்குதல் விசாரணை தொடர்பாக அமெரிக்க மற்றும் இந்திய உளவு இடையே "முன்னோடியில்லாத வகையில் ஒத்துழைப்பு" இருந்ததாக பாராட்டினார். இன்டர்போல் பொது செயலாளர் ரொனால்ட் நோபிள் இந்திய உளவுத்துறை அவர்களிடம் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

துருப்புக்கள் இயக்கம்[தொகு]

பாக்கிஸ்தான் ஒத்துழைக்க வில்லை என்றால், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த கூடும் என்று எண்ணி, தனது துருப்புகளை எல்லை நோக்கி நகர்த்தியது. பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், பாக்கிஸ்தானிய அரசாங்கம், எல்லையில் இருந்து படைகளை நகர்த்த தொடங்கியது.

எதிர்வினைகள்[தொகு]

மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் மெழுகுவர்த்தி நினைவு பிரார்த்தனை

இந்தியர்கள் தாக்குதலுக்கு தங்கள் அரசிய தலைவர்களின் திரனின்மையும் ஓரளவு காரணம் என்று விமர்சித்தனர். டைம்ஸ் ஆப் இந்தியா அதன் முன் பக்கத்தில் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்தது. மும்பையிலும் இந்தியாவிலும் பல அரசியல் மாற்றங்கள் மற்றும் பதவி விலகல்கள் நிகழ்ந்தன. உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல், பதவி விலகினர். முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் மற்றும் துணை முதல்வர் ஆர்.ஆர் பாட்டீல் தாக்குதலை பற்றிய சர்ச்சை காரணமாகவும் சேதம் அடைந்த தாஜ் மஹால் ஓட்டலை பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவிற்கு சுற்றி காட்டியதர்ககவும் பதவி விலகினார். பாலிவுட் நடிகர் அமீர் கான் போன்ற முன்னணி முஸ்லீம் பிரமுகர்கள் டிசம்பர் 9ஆம் நாளை துக்க நாளாக (ஈத் அல் அதா) அனுசரிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். வணிக நிருவனங்களும், சுய பாதுகாப்பு திறனை அதிகரித்து கொள்ள, போக்குவரத்தில் மாற்றங்கள் தேவை வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்தன. இந்த தாக்குதல்கள் இன்றைய இந்தியா குழுமத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" போன்ற பல இயக்கங்களை இந்தியா முழுதும் தூண்டிவிட்டது. தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக மெழுகுவர்த்திகள் மற்றும் செய்தி அட்டைகள் ஏந்தி இந்தியா முழுவதும் பல ஊர்வலங்கள் நடைபெற்றன. தில்லி கமாண்டோக்கள் தாக்குதல் நடந்த மூன்று இடத்தை வந்தடைய 10 மணி நேரம் எடுத்து கொண்டதால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்கள்.

தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர் ஹோட்டல் வெளியே குடிமக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்

பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் தாக்குதல்களை கண்டித்தும் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து கொண்டனர். உலகம் முழுவதும் பல முக்கிய பிரமுகர்கள் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். சமூக ஊடகங்கள் மற்றும் டுவிட்டர் பிளிக்கர் போன்ற இணைய தள சமூக வலைப்பின்னல் கருவிகள் பயன்பாட்டால் தாக்குதல் பற்றிய செய்திகள் எளிதில் பரவியதாக ஊடகங்கள் தெரிவித்தன. மேலும், பல இந்திய பதிவர்கள் மற்றும் விக்கிபீடியா, தாக்குதல்களை பற்றிய நேரடி விளக்கத்தை அளித்தன. தாக்குதல்கள் பற்றிய ஒரு வரைபடத்தை கூகுள் நிலப்படங்கள் பயன்படுத்தி ஒரு இணைய பத்திரிகையாளர் அமைத்தார். நியூயார்க் டைம்ஸ், ஜூலை 2009 அன்று, மிக நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் இதுவே என்று விமர்சித்தது.

நவம்பர் 2010 இல், மும்பை தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட அமெரிக்க குடும்பங்கள் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது சுஜா பாஷா மும்பை தக்துதல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்று புரூக்ளின், நியூ யார்க்கில் ஒரு வழக்கு தாக்கல் செய்தனர். 22 செப்டம்பர் 2011 அன்று, ஆப்கானிஸ்தான் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் மும்பை தாக்குதல் போலவே செல் தொலைபேசி பதிவுகள் வழியாக பாக்கிஸ்தான் காரணம் என்றறியப்பட்டது. விசாரணை நடந்து வருகின்றது.

விசாரணைகள்[தொகு]

கசாபின் விசாரணை[தொகு]

பல இந்திய வழக்கறிஞர்கள் கசாபிற்காக வாதாட விரும்பவில்லை என்பதால் கசாப் விசாரணை தாமதமானது. ஒரு மும்பை பார் அசோசியேஷன் அதன் உறுப்பினர்கள் யாரும் கசாப்பிறக்க வாதாட மாட்டார்கள் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. எனினும், இந்திய தலைமை நீதிபதி கசாப்பின் நியாயமான விசாரணைக்கு ஒரு வழக்கறிஞர் தேவை என்று கூறினார். கசாப்பிறக்க வாதாட ஒரு வழக்கறிஞர் முன் வந்தாலும் பின்பு மாற்றப்பட்டார். 25 பிப்ரவரி 2009, இந்திய விசாரணையாளர்கள் கொலை, சதி மற்றும் இந்தியாவிற்கு எதிராக போர் நடத்தியதர்க்காகவும், 11,000 பக்க அளவில் ஒரு குற்றப்பத்திரிகையை கசாப்பிற்கு எதிராக தாக்கல் செய்தனர். கசாப் விசாரணை 6 ஆம் மே 2009 அன்று தொடங்கியது. அவர் ஆரம்பத்தில் குற்றவாளி இல்லை என்று கெஞ்சினார்.ஆனால் பின்னர் 20 ஜூலை 2009 அன்று தனது குற்றத்தை ஒப்பு கொண்டார். அவர் ஆரம்பத்தில் தாக்குதலுக்கு மன்னிப்பு கோரியும் தனது குற்றங்களுக்கு மரண தண்டனை தேவைதான் என்றும் கூரினார். ஆனால் பின்னர் அவர் இந்த கூற்றுகளை பின்வாங்கி போலீஸ் சித்திரவதை காரணமாக தனது வாக்குமூலத்தை அளித்ததாகவும் மற்றும் கடற்கரையில் நடந்துகொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். நீதிமன்றம் அவரது மனுவை ஏற்று கொண்டது. தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை முழுமையாக இல்லாததால் விசாரணை தொடர்ந்தது.

3 மே 2010 அன்று கசாப் தனது அனைத்து 86 குற்றச்சாட்டுக்களுக்காகவும் தண்டிக்கப்பட்டார். அவர் நேரடியாக ஏழு பேரை கொன்றதற்காகவும், மூன்று நாள் பயங்கரவாத முற்றுகை போரில் பலியான 166 பேர் இறப்புக்களுக்கு காரணமாக இருந்ததர்ககவும் இந்தியாவுக்கு எதிராக போர் நடத்தியதற்காகவும் இரண்டு உயர்மட்ட போலீஸ் அதிகாரிகளின் கொலைக்கு சதி செய்ததர்க்காகவும் தண்டிக்கப்பட்டார். 6 மே 2010 அன்று, அவருக்கு தூக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், அவர் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு விடுத்தார். 21 பிப்ரவரி 2011 அன்று, மும்பை உயர் நீதிமன்றம், அவரது முறையீட்டை தள்ளுபடி செய்து கசாப்பின் மரண தண்டனையை உறுதி செய்தது .

29 ஆகஸ்ட் 2012 அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் கசாப் மரண தண்டனை உறுதிசெய்தது. நீதிமன்றம் காசாப்பிற்கு மரண தண்டனை விதிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று கூறியது. கசாப் செய்த முதன்மை குற்றம் இந்திய அரசுக்கு எதிராக் போர் நடத்தியதே. இந்த தீர்ப்பு 10 வாரங்கள் விசாரணைக்கு பிறகு அஃப்தாப் ஆலம் தலைமையிலான இரண்டு நீதிபதி உச்ச நீதிமன்றம் குழுவினால் முடிவு செய்யப்பட்டது. கசாபிற்கு ஒரு சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை மறுக்கப்பட்டது என்ற வாதங்களை குழு நிராகரித்தது.

பாக்கித்தானில் விசாரணைகள்[தொகு]

இந்திய மற்றும் பாகிஸ்தானிய போலீசார், மும்பை சதி பற்றிய விரிவான புகைப்படங்கள், தாக்குதல்காரர்களிடமிருந்து கிடைத்த பொருட்கள் மற்றும் டிஎன்ஏ ஆதாரங்களை கொண்டு மும்பை தாக்குதலை பற்றிய ஒரு விரிவான செய்தி அறிக்கையை பரிமாறிக்கொண்டனர். பாக்கிஸ்தான் போலீஸ் வங்கி கணக்குகள் மற்றும் பொருட்களுக்கு ஏற்பாடு செய்ததற்காக ஹம்மாத் அமின் சாதிக் என்ற ஹொமியோபதிக் மருந்தாளர் உட்பட ஏழு பேரை கைது செய்தது. நவம்பர் 2009 இல், இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங், பாக்கிஸ்தான் நீதி மன்றம், குற்றவாளிகளை நீதியின் பிடியில் கொண்டுவரப்படவில்லை என்று கூறினார். 26/11 முதல் ஆண்டு நினைவு நாளன்று பாகிஸ்தானிய பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் முறையாக லஷ்கர் தளபதி சகி உர் ரஹ்மான் லக்ஹ்வி உட்பட, குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் விசாரிக்கப்பட்டனர். எனினும் உண்மையான விசாரணை 5ஆம் மே 2012 அன்று தொடங்கியது. மும்பை தாக்குதல் வழக்கு விசாரணைகளை நடத்திய பாகிஸ்தான் நீதிமன்றம், 17 ஜூலை 2012 அன்று, நீதித்துறை குழுவின் அறிக்கையை எதிர்த்த லக்ஹ்வி தாக்கல் மனுவை ஒத்திவைத்தது. 17 ஜூலை 2012 அன்று, பாகிஸ்தான் நீதி குழுவின் கண்டுபிடிப்புகளை சாட்சியத்தின் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டது. எனினும், சாட்சிகள் குழு தனது ஆய்வை அனுமதிக்க ஒரு புதிய உடன்பாட்டை அடைந்தது என்றால், வழக்கு குழுவை மும்பை அனுப்ப தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கும் வகையில் இருப்பினும் இந்திய அரசு, பாகிஸ்தான் நீதி குழு சேகரித்த ஆதாரங்கள் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க போதுமானதாக இருக்கும் என்று நம்பியது. ஆகஸ்ட் 2012 இல், பாக்கிஸ்தான், லஷ்கர் இ தொய்பா தளபதி சகயுர் ரஹ்மான் லக்ஹ்வி உட்பட, குற்றம் சாட்டப்பட்ட ஏழு எதிரான ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் 26/11 வழக்கு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அவர்களது நீதிமன்ற கமிஷன் இரண்டாவது வருகை செய்ய அனுமதிக்க இந்திய அரசிடம் கேட்டு கொண்டது. இந்திய அரசு, பாக்கிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பை சட்ட நிபுணர்கள் ஆராய்ந்த பிறகே கோரிக்கைக்கு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று கூறியது.

அமெரிக்காவில் சோதனைகள்[தொகு]

இணை குற்றஞ்சாட்டினாரான தஹவ்வூர் ராணாவின் விசாரணையின் போது, சிகாகோ ஃபெடரல் நீதிமன்றத்தின் முன் தனது சாட்சியத்தில் லஷ்கர் இ தொய்பாவின் உறுப்பினரான டேவிட் ஹெட்லி (தாஉத் சயீத் கிலானி), அவரது ஐஎஸ்ஐ கையாளுநர் மேஜர் இக்பால் கொடுத்த கண்காணிப்பிற்கான இலக்குகளின் பட்டியலில், மும்பை சபாத் ஹவுஸ் சேர்க்கப்பட்டது என்றும் ஓபராய் ஹோட்டல் அப்பட்டியலில் முதலில் இல்லை என்றும் தெரிவித்தார். 10 ஜூன் 2011, தஹவ்வூர் ராணா, 2008 மும்பை தாக்குதல் சதி செய்ததில் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டாலும் வேறு இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

தாக்குதல்கள் நடந்த இடங்களில்[தொகு]

தாக்குதல் நடைபெற்ற இடம் நடைபெற்ற நேரம்
கொலாபா - லியோபோல்ட் கபே 21.15
நரிமன் ஹவுஸ் 21.20
சத்ரபதி சிவாஜி முனையம் - தொடர் வண்டி நிலையம் 21.24
தாஜ் மகால் ஓட்டல் 21.30
ஓபராய் டிரைடன்ட் ஓட்டல் 21.35
வில்லே பார்லே 21.55
காமா மருத்துவமனை 22.15
மெட்ரோ சினிமா 22.30
வாடி பண்டர் 22.45
கிர்காம் சௌபாதி 22.50

நினைவு நிகழ்ச்சிகள்[தொகு]

தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவு நாளன்று, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அஞ்சலி செலுத்தியது. மகாராஷ்டிரா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய பாதுகாப்பு படையான ஃபோர்ஸ் ஒன், நரிமன் பாயின்ட்டில் இருந்து செளபாட்டி வரை ஒரு அணிவகுப்பு நடத்தியது. மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் தாக்குதல்கள் ஏற்பட்ட பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அஞ்சலி வழங்கப்பட்டது. பாதுகாப்புப் படைகள் நரிமன் பாயின்ட்டில் இருந்து காண்பிக்கப்பட்டது.

27 நவம்பர் 2011 அன்று மாலை, ஒரு ஃபிளாஷ் கும்பல் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்சில் தோன்றியது. 200 பேர் கொண்ட இந்தக் கும்பல், தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கத்துடன் ரங் தே பசந்தி படத்தின் பாட்டிற்கு நடனமாடினார்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Magnier, Mark; Sharma, Subhash (27 November 2008). "India terrorist attacks leave at least 101 dead in Mumbai". Los Angeles Times: p. A1. http://articles.latimes.com/print/2008/nov/27/world/fg-mumbai27. பார்த்த நாள்: 28 November 2008. 
  2. Aquil, Asim (21 October 2012). "SaeedNotGuilty". Pakistan Ka Khuda Hafiz இம் மூலத்தில் இருந்து 1 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120601211652/http://www.pakistankakhudahafiz.com/2012/04/04/pakistan-foriegn-ministry-demands-proof-supporting-allegations-on-hafiz-saeed/#.UIOBYW83tEV. பார்த்த நாள்: 21 October 2012. 
  3. Somini Sengupta (6 January 2009). "Dossier From India Gives New Details of Mumbai Attacks". The New York Times இம் மூலத்தில் இருந்து 21 பிப்ரவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090221221025/http://nytimes.com/2009/01/07/world/asia/07india.html. பார்த்த நாள்: 14 February 2009. 
  4. Rahman, Maseeh (27 November 2008). "Mumbai terror attacks: Who could be behind them?". தி கார்டியன் (UK) இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081205134949/http://www.guardian.co.uk/world/2008/nov/27/mumbai-terror-attacks-india8. பார்த்த நாள்: 29 November 2008. 
  5. Friedman, Thomas (17 பிப்ரவரி 2009). "No Way, No How, Not Here". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2010-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100420080349/http://www.nytimes.com/2009/02/18/opinion/18friedman.html. பார்த்த நாள்: 17 மே 2010. 
  6. Indian Muslims hailed for not burying 26/11 attackers, Sify News, 19 பிப்ரவரி 2009, பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2011 {{citation}}: Check date values in: |date= (help)
  7. Schifrin, Nick (25 நவம்பர் 2009). "Mumbai Terror Attacks: 7 Pakistanis Charged – Action Comes a Year After India's Worst Terrorist Attacks; 164 Die.". ABC News. http://abcnews.go.com/International/mumbai-terror-attacks-pakistanis-charged/story?id=9176592. பார்த்த நாள்: 17 மே 2010. 

வெளி இணைப்புகள்[தொகு]