தேசிய புலனாய்வு முகமை (இந்தியா)
![]() | |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
---|---|
வலைத்தளம் | [1] |
தேசிய புலானாய்வு முகமை (National Investigation Agency, NIA) இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை விசாரணை மேற்கொள்ள இந்திய அரசால் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் புது தில்லி ஆகும். இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் என் ஐ ஏ செயல்படுகிறது.[1] இதன் தற்போதைய தலைமை இயக்குநர் திங்கர் குப்தா, இகாபா ஆவார். இதன் கிளைகள் நாடு முழுவதும் 14 நகரங்களில் உள்ளது.[2]
பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை விசாரணை செய்வதற்கு மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் தேசிய புலனாய்வு முகமை மசோதா திசம்பர் 16, 2008ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது.[3][4][5] இதன் முதல் தலைமை இயக்குனர் ஆர். வி. இராஜூ பணி ஓய்வு பெற்றதை அடுத்து எஸ். சி. சின்கா தலைமை இயக்குனராகப் பணியாற்றி வந்தார். தலைமை இயக்குனராக ஒய்.சி.மோடி 18.09.2017 முதல் பணியாற்றிவருகிறார்.
தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா 2019[தொகு]
தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா[6] நாடாளுமன்றத்தில் சூலை 2019-இல் நிறைவேற்றப்பட்டது. தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் வகையில், தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் ஏற்கனவே 2008-இல் திருத்தம் கொண்டு வரப்பட்டு தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சூலை 2019-இல் நிறைவேற்றப்பட்டுள்ளது.[7] தற்போது தீவிரவாத மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட வழக்குகளை மட்டும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆட்கடத்தல், கள்ள நோட்டு அச்சடித்தல், புழக்கத்தில் விடுதல் தொடர்பான குற்றங்கள், இணைய வழி தீவிரவாதம், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை போன்ற பல குற்றங்களை விசாரிக்கும் அதிகாரத்தை தேசிய புலனாய்வு முகமைக்கு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
நோக்கம்[தொகு]
தேசிய புலனாய்வு முகமை சிறந்த சர்வதேச தரங்களுடன் பொருந்தக்கூடிய ஒரு முழுமையான தொழில்முறை புலனாய்வு நிறுவனமாக செயல்படுவது. மிகவும் பயிற்சி பெற்ற, கூட்டாண்மை சார்ந்த பணியாளர்களை உருவாக்குவதன் மூலம் தேசிய அளவில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிற விசாரணைகளில் சிறந்த தரங்களை அமைப்பதை என் ஐ ஏ நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போதுள்ள மற்றும் சாத்தியமான பயங்கரவாத குழுக்கள்/தனிநபர்கள் தடுப்பை உருவாக்குவதை என் ஐ ஏ நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பயங்கரவாதம் தொடர்பான அனைத்து தகவல்களின் களஞ்சியமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செயல்பாடுகள்[தொகு]
- சமீபத்திய அறிவியல் புலனாய்வு முறைகளைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட குற்றங்களின் ஆழமான தொழில்முறை விசாரணை மற்றும் என் ஐ ஏ-வுக்கு ஒப்படைக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் கையாள்வதை உறுதிசெய்யும் வகையில் தரநிலைகளை அமைத்தல்.
- பயனுள்ள மற்றும் விரைவான சோதனையை உறுதி செய்தல்.
- மனித உரிமைகள் மற்றும் தனிநபரின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு முதன்மையான முக்கியத்துவம் அளித்து, இந்திய அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டங்களை நிலைநிறுத்தி, முற்றிலும் தொழில்முறை முடிவு சார்ந்த அமைப்பாக வளர்ச்சியடைதல்.
- வழக்கமான பயிற்சி மற்றும் சிறந்த நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளை வெளிப்படுத்துவதன் மூலம் ஒரு தொழில்முறை பணிக்குழுவை உருவாக்குதல்.
- ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றும் போது அறிவியல் மனப்பான்மை மற்றும் முற்போக்கான மனநிலையை வெளிப்படுத்துதல்.
- முகமையின் ஒவ்வொரு துறையிலும் நவீன முறைகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்.
- சட்ட விதிகளுக்கு இணங்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர்களுடன் தொழில்முறை மற்றும் நல்ல உறவுகளைப் பேணுதல்.
- பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதில் அனைத்து மாநிலங்களுக்கும் மற்ற விசாரணை நிறுவனங்களுக்கும் உதவுங்கள்.
- பயங்கரவாதம் தொடர்பான அனைத்து தகவல்களிலும் தரவு தளத்தை உருவாக்கி, கிடைக்கும் தரவு தளத்தை மாநிலங்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- பிற நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை ஆய்வு செய்தல் மற்றும் இந்தியாவில் இருக்கும் சட்டங்களின் போதுமான தன்மையை தவறாமல் மதிப்பீடு செய்தல் மற்றும் தேவையான போது மாற்றங்களை முன்மொழிதல்.
- தன்னலமற்ற மற்றும் அச்சமற்ற முயற்சிகள் மூலம் இந்திய குடிமக்களின் நம்பிக்கையைப் பெறுதல்.
கிளைகள்[தொகு]
என் ஐ ஏ தலைமையிடம் புது தில்லியில் உள்ளது. நாடு முழுவதும் 14 நகரங்களில் இதன் கிளைகள் உள்ளது.
- என் ஐ ஏ ஐதராபாத்
- என் ஐ ஏ குவகாத்தி
- என் ஐ ஏ கொச்சி
- என் ஐ ஏ லக்னோ
- என் ஐ ஏ மும்பை
- என் ஐ ஏ கொல்கத்தா
- என் ஐ ஏ ராய்ப்பூர்
- என் ஐ ஏ ஜம்மு
- என் ஐ ஏ சண்டிகர்
- என் ஐ ஏ ராஞ்சி
- என் ஐ ஏ சென்னை
- என் ஐ ஏ இம்பால்
- என் ஐ ஏ பெங்களூரு
- என் ஐ ஏ பாட்னா
என் ஐ ஏ சிறப்பு நீதிமன்றங்கள்[தொகு]
என் ஐ ஏ வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 45 சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளது.[8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ NIA ORGANISATIONAL CHART 2016
- ↑ NIA Branch Offices
- ↑ Finally, govt clears central terror agency, tougher laws
- ↑ "Cabinet clears bill to set up federal probe agency". 2013-05-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Govt tables bill to set up National Investigation Agency
- ↑ The National Investigation Agency (Amendment) Bill, 2019
- ↑ தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதா -நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றம்
- ↑ NIA SPECIAL COURTS