29 செப்டம்பர் 2008 மேற்கு இந்திய குண்டுவெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
29 செப்டம்பர் 2008 மேற்கு இந்திய குண்டுவெடிப்புகள்
இடம்மகாராஷ்டிரம், குஜராத்
நாள்செப்டம்பர் 29 2008
21:30 (UTC+05:30)
தாக்குதல்
வகை
குண்டு வெடிப்புகள்
ஆயுதம்குண்டுகள்
இறப்பு(கள்)8
காயமடைந்தோர்80[1]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
தெரியாது

29 செப்டம்பர் 2008 மேற்கு இந்திய குண்டுவெடிப்புகள் இந்தியாவின் குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் மாநிலங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புகளை குறிக்கும். மொத்தத்தில் மூன்று குண்டுகள் வெடித்து 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரத்தின் மாலேகான் நகரத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் மோதசா நகரில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தின் ஒரு நாள் முன்பு அகமதாபாத் நகரில் 17 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "5 killed, 80 injured in blasts in Gujarat, Maharashtra towns". Press Trust of India. 2008-09-29 இம் மூலத்தில் இருந்து 2020-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200526072137/http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/A2DA77A4E3D5B230652574D3006A4602?OpenDocument%2F. பார்த்த நாள்: 2008-09-29.