நவம்பர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
|||
வரிசை 67: | வரிசை 67: | ||
[[பகுப்பு:நவம்பர்]] |
[[பகுப்பு:நவம்பர்]] |
||
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
18:02, 1 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 15 (November 15) கிரிகோரியன் ஆண்டின் 319 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 320 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1505 - போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப்படைத் தளபதி வில்லியம் ஷேர்மன் அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம் நோக்கி நகர்ந்தார்.
- 1889 - பிரேசில் குடியரசாகியது. இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.
- 1926 - என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.
- 1941 - நாசி ஜெர்மனியில் சில உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் வதைமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: சொலமன் தீவுகளில் குவாடல்கனல் என்ற இடத்தில் ஜப்பானியப் கடற்படையுடன் இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள் வெற்றி பெற்றன.
- 1943 - நாசி ஜெர்மனியில் அனைத்து ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக வதமுகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
- 1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
- 1949 - நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
- 1966 - ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
- 1969 - வியட்நாம் போர்: வாசிங்டன் டிசியில் 250,000-500,000 பேர் போருக்கெதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
- 1970 - சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.
- 1971 - இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற single-chip microprocessor ஐ வெளியிட்டது.
- 1978 - டிசி-8 ரக தனியார் பயணிகள் விமானம் கொழும்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
- 1983 - வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை அங்கீகரித்தது.
- 1988 - சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற பூரான் விண்ணோடம் தனது முதலாவது கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.
- 1988 - பாலஸ்தீன நாடு பாலஸ்தீன தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.
- 1990 - அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
- 2002 - ஹூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
- 2000 - இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
- 2007 - வங்க தேசத்தில் கிளம்பிய பெரும் சூறாவளியினால் 5,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1738 – வில்லியம் எர்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1822)
- 1877 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1945)
- 1887 – ஜோர்ஜியா ஓ'கீஃப், அமெரிக்க ஓவியர் (இ. 1986)
- 1891 – இர்வின் ரோமெல், செருமானிய இராணுவ அதிகாரி (இ. 1944)
- 1901 – பு. இரா. புருடோத்தமர், தமிழ், வைணவ அறிஞர் (இ. 1976)
- 1914 – வி. ஆர். கிருஷ்ணய்யர், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி (இ. 2014)
- 1923 – ராதா பர்னியர், சென்னை பிரம்மஞானசபை தலைவி (இ. 2013)
- 1933 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (இ. 1987)
- 1947 – மால்கம் ரஞ்சித், இலங்கை கத்தோலிக்கக் கருதினால்
- 1986 – சானியா மிர்சா, இந்திய டென்னிசு வீராங்கனை
- 1991 – சைலீன் வூட்லி, அமெரிக்க நடிகை
இறப்புகள்
- 1280 – பெரிய ஆல்பர்ட், செருமானிய இறையியலாளர், மெய்யியலாலர் (பி. 1193)
- 1630 – யோகான்னசு கெப்லர், செருமானிய வானியலாளர் (பி. 1571)
- 1908 – டோவாகர் சிக்சி, சீனப் பேரரசி (பி. 1835)
- 1917 – எமில் டேர்க்கேம், பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1858)
- 1937 – ஜெய்சங்கர் பிரசாத், இந்திய எழுத்தாளர் (பி. 1889
- 1949 – நாராயண் ஆப்தே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1911)
- 1949 – நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910)
- 1959 – சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய இயற்பியலாளர் (பி. 1869)
- 1982 – வினோபா பாவே, இந்திய காந்தியவாதி (பி. 1895)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (பாலத்தீனம்)
- மர நாள் (இலங்கை)
- குடியரசு நாள் (பிரேசில்)