வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் செப்டெம்பர் 2008
- செப்டம்பர் 30: ராஜஸ்தானில் சாமுண்டா தேவி மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 177 பேர் இறந்தனர். (ராய்ட்டர்ஸ்), (தினமலர்)
- செப்டம்பர் 29: மேற்கு இந்தியாவில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 8 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்தனர். (டைம்ஸ் ஒப் இந்தியா)
- செப்டம்பர் 28:
- கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் மதுரையைச் சேர்ந்த மீனவர் கொல்லப்பட்டார். (தட்ஸ்தமிழ்)
- சீனாவின் மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற சென்ஷோ 7 விண்கலம் பாதுகாப்பாக திரும்பி வந்தது. (சின்குவா)
- செப்டம்பர் 27:
- சென்ஷோ 7 விண்கலத்தில் இருந்து சீன வீரர் ஜாய் ஜுகாங் வெளியே வந்து விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார். (சிஎன்என்)
- இந்தியாவின் தலைநகர் தில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்தனர். (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இராணுவத் தளம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- செப்டம்பர் 26: உக்ரைனிய சரக்குக் கப்பல் ஒன்று சோமாலியாவின் கடல் எல்லைக்குள் கடற்கொள்ளைக்க்காரர்களினால் கைப்பற்றப்பட்டது. ரஷ்யா தனது படைகளை சோமாலியா நோக்கி அனுப்பியுள்ளது. (New York Times)
- செப்டம்பர் 25:
- சீனா தனது சென்ஷோ 7 என்ற விண்கலத்தை மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு அனுப்பியது. முதற்தடவையாக தனது வீரரை விண்ணில் நடக்க வைக்க சீனா திட்டமிட்டுள்ளது. (சீன வானொலி)
- தென்னாபிரிக்க சட்டமன்றம் கலேமா மொட்லாந்தேயை புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்துள்ளது. (பிபிசி)
- செப்டம்பர் 24: ஜப்பானிய அமைச்சரவை டாரோ ஆசோவை புதிய பிரதமராக தேர்வு செய்துள்ளது. (ஏபி)
- செப்டம்பர் 23:
- ஜெனீவாவில் இயங்கும் பெரும் ஹாட்ரான் மோதியில் காந்தம் இயங்க மறுத்ததால் மோதி இடைநிறுத்தப்பட்டது. (பிபிசி)
- பின்லாந்தில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 11 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- செப்டம்பர் 21: இஸ்ரேல் பிரதமர் எகூட் ஒல்மேர்ட் தமது பதவியில் இருந்து விலகினார். (ஏபி)
- செப்டம்பர் 20:
- சீனாவின் சென்சென் நகரில் இரவி விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 43 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாதில் "மேரியாட்" விடுதி மீது நடந்த தானுந்து குண்டுவெடிப்பில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 100 பேர் படுகாயம் அடைந்தனர். (ஏபி)
- ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டதை அடுத்து தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி பதவி விலகுவதற்கு உடன்பட்டார். (ராய்ட்டர்ஸ்)
- செப்டம்பர் 18: யெமெனில் தலைநகரம் சனாவில் அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். (அல்-ஜசீரா)
- செப்டம்பர் 17:
- இலங்கை, தெகிவளையில் மூன்று தமிழ் இளைஞர்களும் அவர்களது நண்பர்களான இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் அவர்கள் பயணம் செய்த வாகனத்தோடு கடத்தப்பட்டனர். (தமிழ்வின்)
- சூரியக் குடும்பத்தில் ஐந்தாவது குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஹவுமெயா என்ற கிரேக்கக் கடவுளின் பெயர் வைக்கப்பட்டது. (ஐஏயு)
- தாய்லாந்தின் புதிய பிரதமராக சொம்ச்சாய் வொங்சவாட் தெரிவூ செய்யப்பட்டார். (ஏஎஃப்பி)
- செப்டம்பர் 14: ரஷ்யாவில் பேர்ம் நகரில் விமானம் ஒன்று யூரல் மலைகளில் மோதியதில் அதில் பயணம் செய்த 88 பேரும் கொல்லப்பட்டனர். (யாஹூ! செய்திகள்)
- செப்டம்பர் 13:
- தில்லியில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 90 பேர் படுகாயம் அடைந்தனர். (தட்ஸ்தமிழ்)
- சூறாவளி ஐக் டெக்சாசின் கல்வெஸ்டன் நகரில் 2ம் கட்டப் புயலாகத் தரை தட்டியது. (புளூம்பேர்க்)
- சீனாவில் சான்சி மாகாணத்தில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 254 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- செப்டம்பர் 12: லொஸ் ஏஞ்சலீஸ் நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- செப்டம்பர் 11:
- சிம்பாப்வே அதிபர் ரொபேர்ட் முகாபேயுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் உடன்பாட்டைத் தாம் எட்டியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் சுவாங்கிராய் அறிவித்தார். (பிபிசி)
- இந்தோனீசியாவில் 6.6 அளவு நிலநடுக்கமும் ஜப்பானில் 7.2 அளவு நிலநடுக்கமும் பதியப்பட்டன. (பிபிசி)
- இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஹரோகார் ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் 40 பேர் காணாமல் போயினர். (ஏபி)
- செப்டம்பர் 10:
- 27 கிமீ நீளமான சுரங்கப் பாதையைக் கொண்ட பெரும் ஹாட்ரான் மோதியில் அடிப்படைத் துகள்கள் முதற்தடவையாக வெற்றிகரமாக அனுப்பப்பட்டன. (பிபிசி)
- வட கொரியாவின் அதிபர் கிம் ஜொங்-இல் கடும் சுகவீனமுற்றிருப்பதாக தென் கொரியாவின் யொன்ஹாப் செய்தி நிறுவனம் அறிவித்தது. (ஏஎஃப்பி)
- செப்டம்பர் 8:
- ராஜர் ஃபெடரர் அமெரிக்க திறந்த டென்னிஸ் போட்டி வெற்றிக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாக வென்றார். (ஈஎஸ்பிஎன்)
- சூறாவளி ஐக் கியூபாவைத் தாண்டியபோது அதன் சீற்றம் 2ன் கட்டப் புயலாகக் குறைந்தது. (ஏபி)
- செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க திறந்த டென்னிஸ் போட்டி வெற்றிக் கிண்ணத்தை மூன்றாவது தடவையாக வென்று, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தர ஆட்டக்காரராக மீண்டும் தெரிவானார். (நியூயோர்க் டைம்ஸ்)
- செப்டம்பர் 7:
- சூறாவளி ஐக் கரிபியனில் டேர்க்ஸ் கைக்கசில் தீவுகளில் 80 விழுக்காட்டு வீடுகளை சேதப்படுத்தியது. (தி ஆஸ்திரேலியன்)
- கனடாவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அக்டோபர் 14 இல் தேர்தல் நடைபெறுமென பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்தார். (பிபிசி)
- பிரம்மபுத்திரா ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் 24 பேர் கொல்லப்பட்டனர். 2.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர். (டைம்ஸ் ஒப் இந்தியா)
- செப்டம்பர் 6:
- வடக்கு கெய்ரோவில் மண்சரிவு காரணமாக பல வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் 18 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- சூறாவளி ஹன்னா ஐக்கிய அமெரிக்காவில் வட கரோலினாவுக்கும் தென் கரோலினாவுக்கும் இடையில் தரை தட்டியது. (ஏஎஃப்பி)
- பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிஃப் அலி சர்தாரி தெரிவு செய்யப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
- செப்டம்பர் 5:
- கரிபியன் தீவான எயிட்டியில் சூறாவளி ஹன்னாவின் தாக்கத்தில் சிக்கி 500 பேர் இறந்தனர். (ராய்ட்டர்ஸ்)
- ஐரோப்பிய ஒன்றியத்தின் ரொசெட்டா விண்கலம் 2867 ஸ்டெயின்ஸ் என்ற சிறுகோளை அண்டிச் சென்றது. (பிபிசி)
- செப்டம்பர் 3:
- அரிசோனாவின் செனட்டர் ஜோன் மக்கெயின் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)
- கரிபியன் தீவான எயிட்டியில் சூறாவளி ஹன்னாவினால் விளைந்த வெள்ளப்பெருக்கினால் 26 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ரசா கிலானியின் தானுந்து மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. கிலானி காயமேதுமின்றி உயிர் தப்பினார். (தட்ஸ்தமிழ்)
- இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்: இந்தியா அணு சோதனை நடத்தினால் அணுசக்தி ஒப்பந்தம் முடிவுக்கு வரும், இது போல பல்வேறு நிபந்தனைகள் உள்ளிட்ட ஒரு ரகசிய கடிதத்தை சட்டமன்றத்துக்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் 8 மாதங்களுக்கு முன்பு அனுப்பியுள்ளார் என்று தெரியவந்தது. தட்ஸ்தமிழ் (வாஷிங்டன் போஸ்ட்)
- செப்டம்பர் 2:
- தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஒருவர் கொல்லப்பட்டு, 43 பேர் காயமடைந்ததை அடுத்து பிரதமர் சமாக் சுந்தரவேஜ் பாங்கொக் நகரில் அவசரகால நிலையை அறிவித்தார். (பிபிசி)
- சூறாவளி குஸ்டாவ் வெப்பவலய புயலாக தணிந்தது. (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- செப்டம்பர் 1:
- ஒரிசாவில் இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரங்களில் 558 வீடுகளும் 17 கிறிஸ்தவ தேவாலயங்களும் எரிக்கப்பட்டன. (டைம்ஸ் ஆஃப் இந்தியா)
- காலை 10:30 மணி நேரத்தில் சூறாவளி குஸ்டாவ் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 2ம் கட்டப் புயலாக தரை தட்டியது. லூசியானா, மிசிசிப்பி, அலபாமா ஆகிய மாநிலங்களின் தெற்கு பகுதிகள் பாதிக்கப்பட்டன. சிஎன்என்
- ஜப்பானியப் பிரதமர் யாசுவோ ஃபுக்குடா பதவியிலிருந்து விலகினார். பிபிசி