திருப்பணமூர் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பணமூர், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், திருப்பனமூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். திருப்பணமூரும்-கரந்தையும் இரட்டைக் கிராமங்கள் ஆகும். இது காஞ்சிபுரத்திலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கரந்தைக்கு அருகில் திருப்பணமூரில் கல்வெட்டுக்கள் கொண்ட சமணக் கோயில்கள் உள்ளது. இவ்வூரில் பிறந்த அபிநந்தன் எனும் இந்திய வான்படையின் அதிகாரி 2021-இல் வீர் சக்கரம் விருது பெற்றவர். [1]மேலும் அபிநந்தனின் தந்தையும், இந்திய வான்படையின் ஏர் மார்ஷலாக இருந்து ஓய்வு பெற்றவருமான சிம்மக்குடி வர்த்தமான் திருப்பணமூரில் பிறந்தவராவார்.

திருப்பணமூர் கிராமத்தில் சமண சமயத் தீர்த்தங்கரர் புஷ்பதந்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள்ளது.[2][3] இவ்வூர் சமணத் துறவியும், அறிஞருமான அகலங்கரின் பிறப்பிடமாகும். இவ்வூரில் தர்ம சாகர், சுதர்ம சாகர், கஜபதி சாகர் ஆகிய சமணத் துறவிகள் சல்லேகனை செய்து முக்தி பெற்றனர்.

கரந்தை திகம்பர சமணக் கோயில் வளாகம்
திருப்ப்பணமூர் திகம்பர சமணக் கோயில்

சிறப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பணமூர்_கிராமம்&oldid=3834834" இலிருந்து மீள்விக்கப்பட்டது