சோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காடுகள் கிழக்கு இந்தியாவில் உள்ள வெப்பவலய வறண்ட அகன்ற இலைக் காட்டுச் சூழலியல் பகுதி ஆகும். இது ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கிய சோட்டா நாக்பூர் மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது. இக்காடு வரண்டது முதல் ஈரலிப்பானது வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. சில பகுதிகளில் மூங்கில், மற்றும் புதர்களைக் கொண்ட புல்வெளிகளும் காணப்படுகின்றன. வங்காளப் புலிகள், ஆசிய யானைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள் இங்கே காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]