தானரூபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானரூபி கருநாடக இசையின் 6 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 6 வது இராகத்திற்கு தனுகீர்த்தி என்ற பெயர்.[1][2]

இலக்கணம்[தொகு]

தானரூபி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி111 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம11 ரி1
  • இந்து என்று அழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை. [3]

சிறப்பு அம்சங்கள்[தொகு]

  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் ரகுப்பிரியா (42) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
  • ஜன்ய இராகங்கள் கிடையாது.

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி சிதம்பர நடராஜமூர்த்திம் முத்துசுவாமி தீட்சிதர் மிச்ர ஏக
கிருதி வா வேலவா வா கோடீஸ்வர ஐயர் ஜம்ப
கிருதி சிறீ ராமா ஸதா பஜேஹம் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி

மேற்கோள்கள்[தொகு]

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  3. Shree Muthuswami Dikshitar Keerthanaigal, by A Sundaram Iyer, Music Book Publishers, Mylapore, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானரூபி&oldid=3800861" இலிருந்து மீள்விக்கப்பட்டது