ஜாலவராளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாலவராளி இராகம் கருநாடக இசையின் 39வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 39வது இராகத்திற்கு தாலிவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

ஜாலவராளி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம21 ரி1
  • ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 3 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் கானமூர்த்தி (03) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி அனாத ரக்ஷகா கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி மாதவ தய்ய மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாலவராளி&oldid=1553962" இலிருந்து மீள்விக்கப்பட்டது