மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | சூலை 6, 1930 |
| பிறப்பிடம் | சங்கரகுப்தம், ஆந்திரப் பிரதேசம் |
| இசை வகை(கள்) | கருநாடக இசை |
| தொழில்(கள்) | கருநாடக இசை பாடகர் |
| இசைத்துறையில் | 1945 - இந்நாள் வரை |
மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (பிறப்பு ஜூலை 6, 1930) தமிழ்நாட்டில் வாழும் ஒரு கருநாடக இசை மேதை. புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களில் இன்று வாழும் ஞானிகளில் ஒருவர். இவர் பாடகர் மட்டும் அல்லாமல், ஒரு பாடல் இயற்றுநர் (வாக்கேயக்காரர்) மற்றும் இசைக்கருவி வல்லுனர்.
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
முரளிகிருஷ்ணா சிறு வயதிலேயே இசை மேதை எனப் பெயர் பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்தன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என்றழைக்கப்பட்டார்.
இவர் 72 மேளகர்த்தா உருப்படிகள் உருவாக்கம் செய்திருக்கிறார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.
விருதுகள் [தொகு]
- சங்கீத கலாநிதி விருது, 1978; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 2002