உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் கால்ஸ்வர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோன் கல்ஸ்வோதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜான் கால்ஸ்வர்தி
பிறப்பு14 ஆகத்து 1867
Kingston upon Thames
இறப்பு31 சனவரி 1933 (அகவை 65)
இலண்டன்
பணிநாடகாசிரியர், எழுத்தாளர், புதின எழுத்தாளர், prose writer
விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
கையெழுத்து
ஜான் கால்ஸ்வர்தி

ஜான் கால்ஸ்வர்தி (John Galsworthy, ஆகத்து 14, 1867 - சனவரி 31, 1933) நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவலாசிரியர். சட்டம் கற்ற இவர் அதில் ஆர்வமில்லாது தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1897 இல் தனது முதற் சிறுகதைத் தொகுப்பைப் புனைபெயரில் வெளியிட்டார். பின்னர் நாடகங்களும் நாவல்களும் எழுதினார். 1932 இல் நோபல் பரிசு பெற்ற இவரது நாவல்கள் சில திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன.

சமூக செய்திகளுடன் நாடகங்கள் மற்றும் புதினங்களை எழுதுவதோடு, விலங்கு நலன் முதல் சிறைச் சீர்திருத்தம், தணிக்கை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் வரை பலவிதமான காரணங்களுக்காக கால்ஸ்வொர்த்தி தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். பலரால் தீவிரவாதியாகப் பார்க்கப்பட்டாலும், அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதும் ஆதரிக்காமலும் இருந்து வந்தார். அவரது நாடகங்கள் பெரிதாகப் பேசப்படாமல் இருந்து வந்தாலும், அவரது புதினங்கள் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டு வந்துள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கால்ஸ்வர்தி&oldid=4185465" இலிருந்து மீள்விக்கப்பட்டது