எயுஜேனியோ மொண்டாலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எயுஜேனியோ மொண்டாலே
Eugenio Montale
மொண்டாலே
மொண்டாலே
பிறப்பு(1896-10-12)அக்டோபர் 12, 1896
ஜெனோவா, இத்தாலி
இறப்புசெப்டம்பர் 12, 1981(1981-09-12) (அகவை 84)
மிலான், இத்தாலி
தொழில்கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்துக்கான நோபல் பரிசு
1975

எயுஜேனியோ மொண்டாலே (Eugenio Montale, அக்டோபர் 12, 1896 – செப்டம்பர் 12, 1981) என்பவர் இத்தாலியக் கவிஞரும், 1975 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஆவார்.

இத்தாலியின் ஜெனோவா நகரில் பிரந்தவர் எயுஜேனியோ. 29வது அகவையிலேயே தனது முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டார். பார்மா இராணுவப் பள்ளியில் பயிற்சியில் இருந்த போது முதலாம் உலகப்போரில் கலந்து கொள்ள போர்முனைக்கு அனுப்பப்பட்டார். சிறிது காலம் போரிட்ட பின்பு 1920 ஆம் ஆண்டில் சொந்த ஊர் திரும்பினார்.

அக்காலத்தில் தமது நாட்டில் எழுந்த பாசிச இயக்கத்தை அவர் எதிர்த்தார். பல மாத இதழ்களில் கவிதைகளை எழுதினார். பல ஆங்கிலக் கவிதைகளை இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்தார். 1928 ஆம் ஆண்டில் புளோரன்சு நூல்நிலையத்திற்குத் தலைவரானார். 1938 ஆம் ஆண்டில் பாசிச அரசால் அவரது பதவி பறிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு முதல் 1981 இல் இறக்கும் வரை மிலானில் வசித்து வந்தார். அங்கிருந்து வெளிவந்த நாளிதழ் ஒன்றின் இலக்கியப் பகுதிக்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். மிலான், (1961), கேம்பிரிட்ஜ் (1967) ரோம் (1967) பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியுள்ளன. 1975 ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எயுஜேனியோ_மொண்டாலே&oldid=3354897" இலிருந்து மீள்விக்கப்பட்டது