யசுனாரி கவபட்டா
Jump to navigation
Jump to search
யசுனாரி கவபட்டா | |
---|---|
![]() | |
பிறப்பு | 11 சூன் 1899 ஒசாக்கா |
இறப்பு | 16 ஏப்ரல் 1972 (அகவை 72) ஸுஷி |
பணி | எழுத்தாளர், கவிஞர் |
பாணி | புதினம் |
விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Officier des Arts et des Lettres, Person of Cultural Merit |
யசுனாரி கவபட்டா (川端 康成 Kawabata Yasunari, சூன் 11, 1899 - ஏப்ரல் 16, 1972) நோபல் பரிசு பெற்ற யப்பானிய நாவலாசிரியர் ஆவார். சாகாவில் பிறந்த இவர் சிறுவயதிலேயே நெருங்கிய உறவினர்கள் அனைவரையும் இழந்தவர். செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். 1968 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் யப்பானியரானார். யப்பானிய இலக்கியங்களை ஆங்கிலத்துக்கும் பிற மேலைத்தேய மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பதில் குறிப்பிடத்தக்க ஊக்குவிப்பாளராக இருந்தார். 1972 இல் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் எதுவும் தெளிவாகத் தெரியவரவில்லை.