ஆத்தூர் (தூத்துக்குடி)
| ஆத்தூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| வட்டம் | திருச்செந்தூர் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | க. இளம்பகவத், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
11,910 (2011[update]) • 471/km2 (1,220/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 25.26 சதுர கிலோமீட்டர்கள் (9.75 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/authoor |
ஆத்தூர் (ஆங்கிலம்:Athur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] இது தூத்துக்குடியிலிருந்து 23 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆறுமுகநேரியில் உள்ள ஆறுமுகநேரி தொடர்வண்டி நிலையம்யாகும்.
மக்கள் தொகையியல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,047 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 11,910 ஆகும்[5]
25.26 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 37 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
விவசாயம், நீர் மற்றும் இயற்கை வளங்கள்
[தொகு]ஆத்தூர் பலர் வெற்றிலை, வாழை மற்றும் அரிசி விவசாயிகள். ஆத்தூரில் உற்பத்தியாகும் வெற்றிலையின் தரம் தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்றது. இந்த நகரத்தைச் சுற்றி ஓடும் தாமிரபரணி நதியால் ஆத்தூர் மேலும் புகழ் பெற்றது. இந்நதி, இப்பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பாசனத்திற்காக பெரும்பான்மையான நீரை வழங்குகிறது.[5]
ஆத்தூர் ஒரு பசுமையான நகரம். இது நெற்கிழங்குகள் மற்றும் வாழை மரங்களால் சூழப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி இப்பகுதியின் வழியாக ஓடி, ஒரு பக்கத்தில் பெரிய ஏரியாக உருவாகிறது. இதனால் இந்த நகரம் முக்கியமான பார்வையாளர்களை ஈருக்கும் இடமாக மாறியுள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ 5.0 5.1 பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ 6.0 6.1 ஆத்தூர் பேரூராட்சியின் இணையதளம்