திருவரகுணமங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவரகுணமங்கை (நத்தம்)
புவியியல் ஆள்கூற்று:8°38′13″N 77°55′27″E / 8.637065°N 77.924149°E / 8.637065; 77.924149
பெயர்
புராண பெயர்(கள்):திருவரகுணமங்கை
பெயர்:திருவரகுணமங்கை (நத்தம்)
அமைவிடம்
ஊர்:நத்தம்
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:விஜயாசனப் பெருமாள்
தாயார்:வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார்
தீர்த்தம்:அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:விஜயகோடி விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இறைவர்: கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள். இறைவி: வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார். தீர்த்தம்: அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியன: இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது.[1] இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரகுணமங்கை&oldid=3532069" இலிருந்து மீள்விக்கப்பட்டது