வேலூர் மாநகராட்சி
வேலூர் | |
— மாநகராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ் நாடு |
மாவட்டம் | வேலூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி |
மேயர் | திரு.பி. கார்த்திகேயன் |
மக்களவைத் தொகுதி | வேலூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | வேலூர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
வேலூர் மாநகராட்சி. இந்தியா துணைக் கண்டத்தின் தமிழ்நாடு மாநிலத்தின் மாவட்டமான வேலூர், மாநகராட்சி அமைப்பாக, 1866 இல் உருவாக்கப்பட்ட நகர மேம்பாட்டு சட்டம் 1865, இன்படி, ஆகஸ்டு 1,2008[1] முதல், வேலூர் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி, மேயர், துணை மேயர் உள்ளிட்ட 48 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. காட்பாடி பேரூராட்சி வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டடது.இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 100 கோடி ரூபாய் ஆகும்.
வரலாறு[தொகு]
வேலூர் நகராட்சி மன்றம், 1920[1] இல் எம்.டி.எம். சட்டம் 1920 -இன் படி அன்றைய காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டது. அதன் பின் இரண்டாம் நிலை நகராட்சியாக 1947[1] யிலும், பின் முதனிலை நகராட்சியாக 1979[1] யிலும் உயர்த்தப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் இதன் நகராட்சி அமைப்புகளுக்குள் உள்ளடங்கிய நகரப் பகுதிகளாக கோட்டை, அடவாநந்தல், பெரிபேட்டை, வேலப்பாடி, சலவன்பேட்டை, தொட்டப்பாளையம், அருகந்தம்பூண்டி, கொசப்பேட்டை, கவரைப்பேட்டை, பொறுப்பங்காடி (கமிசரி பசார்) மற்றும் சங்கரன்பாளையம் போன்றவையிருந்தன. 2011-க்குப் பின்னர், காட்பாடி, வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
வெளி இணைப்புக்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 வேலூர் மாநகராட்சியை பற்றி- மாநகராட்சி இணையம்பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 20-04-2009