திரிபுர உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிபுர உபநிடதம்
தேவநாகரிत्रिपुरा
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புTripurā
உபநிடத வகைShakta[1]
தொடர்பான வேதம்இருக்கு வேதம்[2]
அத்தியாயங்கள்1
பாடல்களின் எண்ணிக்கை16[3]
அடிப்படைத் தத்துவம்சாக்தம், வேதாந்தம்[4]

திரிபுர உபநிடதம் ( Tripura Upanishad ) (சமக்கிருதம்: त्रिपुरा उपनिषद्) என்பது இந்து சமயத்தின் இடைக்கால சிறிய உபநிடதமாகும். [5] சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்த உரை சாக்த உபநிடதமாக வகைப்படுத்தப்பட்டு இருக்கு வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] இது, ஒரு உபநிடதமாக, இந்து சமயத்தின் தத்துவக் கருத்துக்களை முன்வைக்கும் வேதாந்த இலக்கியத் தொகுப்பின் ஒரு பகுதியாகும். [6]

உபநிடதம் திரிபுரசுந்தரி தேவியை பிரபஞ்சத்தின் இறுதி சக்தியாக வைக்கிறது. [7] அவள் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனுக்கும் மேலாக உயர்ந்த உணர்வு என்று விவரிக்கப்படுகிறாள். [8] இந்த உரை சாக்த பாரம்பரியத்தின் முக்கியமான நூல்களில் ஒன்றாகும். மேலும் வேலை, வழிபாடு மற்றும் ஞானத்தின் மூன்று சாலைகளைக் குறிக்கும் திரிபுரம் (அதாவது "மூன்று நகரங்கள்") கோட்பாட்டிற்கு குறிப்பிடத்தக்கது. [7]

சாக்த தந்திரம் பற்றிய உரை மற்றும் ஆசிய வரலாற்று ஆய்வுகள் இயக்குநர் தக்ளஸ் புரூக்ஸ் இந்த உரையைப் பற்றி கூறும்போது "நாம் காணக்கூடிய சாக்த தாந்த்ரீகத்தின் சாக்த தந்திர பாரம்பரியத்தில் உள்ள ஒவ்வொரு முக்கிய தலைப்பையும் இதன் 16 வசனங்களாக வடித்துள்ளது. [9] ஸ்ரீவித்யா யந்திரத்தை தியானத்திற்கான ஒரு வழிமுறையாக உரை வழங்குகிறது. [7] இந்த உரை சக்தி தந்திர பாரம்பரியத்தை வேத பண்புக்கூறாக இணைக்கிறது.[10] இருப்பினும் இந்த இணைப்பு அறிஞர்களால் எதிர்க்கப்பட்டது. [11] [12]

பல சாக்த உபநிடதங்களில் உள்ளதைப் போலவே, இந்த உரையிலும் உள்ள தத்துவங்கள், சாக்தாத்வைதவாதம் (அதாவது, மதமற்ற சக்தியின் பாதை) எனப்படும் இந்து தத்துவத்தின் சாங்கியம் மற்றும் அத்வைத வேதாந்தப் பள்ளிகளின் ஒத்திசைவு என்று இந்து மத அறினரான ஜூன் மெக்டேனியல் கூறுகிறார். [13]

உள்ளடக்கம்[தொகு]

உரை ஸ்ரீ சக்ரத்தைக் குறிப்பிடுகிறது.[7]

முக்கிய உரை 16 வசனங்களைக் கொண்டுள்ளது. இந்த எண் 16 தந்திர பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஸ்ரீவித்யா பள்ளியின் மூல மந்திரம் அல்லது மூல மந்திரத்தின் பதினாறு பாடக் கட்டமைப்பை உருவாக்குகிறது.[14] முக்கிய செய்தி அதன் 15 வசனங்களில் அடங்கியுள்ளது. அதில் பதினாறாவது வசனம் இணைக்கப்பட்டுள்ளது. யந்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்தைப் போலவே, பதினாறாவது எழுத்து அதன் முக்கிய பதினைந்து கூறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உபநிடதத்தின் கட்டமைப்புக் கலை கூறுகள் ஸ்ரீவித்யா மந்திரத்தின் கட்டமைப்பை பிரதிபலிக்கின்றன.[15]

இதனையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Warrier 1967, ப. 41–53.
  2. 2.0 2.1 Tinoco 1996, ப. 88.
  3. Narayanaswami 1999.
  4. Mahadevan 1975, ப. 238–239.
  5. Mahadevan 1975, ப. 234–239.
  6. Muller 1879.
  7. 7.0 7.1 7.2 7.3 Mahadevan 1975, ப. 235.
  8. Brooks 1990, ப. 155–156.
  9. Brooks 1990, ப. xvi.
  10. Dasgupta 1996, ப. 3.
  11. Brooks 1990, ப. xiii–xiv, xvi, 21.
  12. Urban 1997.
  13. McDaniel 2004, ப. 89–91.
  14. Brooks 1990, ப. 76.
  15. Brooks 1990, ப. 76–77.

உசாத்துணை[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுர_உபநிடதம்&oldid=3871660" இலிருந்து மீள்விக்கப்பட்டது