கும்பகோணம் மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் முகப்பு

கும்பகோணம் மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேட்டுத்தெருவில் உள்ள சிவன் கோயிலாகும். [1]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் லிங்கத்திருமேனியாக உள்ளார். அவர் விசுவநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். மூலவர் சன்னதியின் வடப்புறம் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது.

பிற தெய்வங்கள்[தொகு]

மூலவருக்கு முன்பாக உள்ள முன் மண்டபத்தில் வலது புறம் விநாயகர் உள்ளார். இடது புறம் சுப்பிரமணியர் உள்ளார். இக்கோயிலில் நவக்கிரக சன்னதியும், ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

விநாயகர் சிறப்பு[தொகு]

இங்குள்ள இவ்விநாயகர் செங்கழுநீர் விநாயகர் என அழைக்கப்படுகிறார். [2]விசுவநாதசுவாமி கோயில் என்பதைவிட செங்கழூநீர் விநாயகர் கோயில் என்றே உள்ளூரில் இக்கோயிலை அழைக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
  2. அருள்மிகு செங்கழுநீர் விநாயகர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்