இஷ்டகா மடம், கும்பகோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இஷ்டகா மடம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இஷ்டகா மடம் கும்பகோணத்தில் இருந்த மடங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் இம் மடம் இருந்ததற்கான சான்றுகள் தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.

இருப்பிடம்[தொகு]

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மடங்களில் ஒன்றாக இஷ்டகா மடம் குறிப்பிடப்பட்டுள்ளது.

15ஆம் நூற்றாண்டு[தொகு]

இந்த மடம் கும்பகோணத்தில் கி.பி.15ஆம் நூற்றாண்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இம்மடத்தைச் சேர்ந்த ஸ்ரீபுருஷோத்தமபாரதி ஸ்ரீபாதங்கள் என்பவர் நன்னிலம் வட்டம் கூத்தாநல்லூரில் உள்ள சரசுவதி தேவிக்குக் கொடையளித்துள்ளார்.[1] கூத்தாநல்லூர் என்று தற்போது அழைக்கப்படும் இக்கூத்தனூரே ஒட்டக்கூத்தர் ஊர் என்ற ஒரு கருத்தும் உண்டு.

தற்போதைய நிலை[தொகு]

கும்பகோணத்தில் சங்கர மடம், மௌனசுவாமி மடம்,வீர சைவ மடம் மற்றும் விஜேந்திரசுவாமி மடம் ஆகிய மடங்கள் தற்போது உள்ளன. இஷ்டகா மடம் இருந்ததற்கான சான்று தற்போது கும்பகோணத்தில் எங்கும் காணப்பெறவில்லை.

மேற்கோள்[தொகு]

  1. கும்பகோணம் இஷ்டகா மடம், மகாமகம் 1992 சிறப்பு மலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஷ்டகா_மடம்,_கும்பகோணம்&oldid=2947128" இலிருந்து மீள்விக்கப்பட்டது