பயனர் பேச்சு:Sengai Podhuvan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
→தற்காவல்: புதிய பகுதி |
|||
வரிசை 210: | வரிசை 210: | ||
[[File:Wikipedia Autopatrolled.svg|right|100px]] |
[[File:Wikipedia Autopatrolled.svg|right|100px]] |
||
வணக்கம். உங்கள் கணக்கு '''[[விக்கிப்பீடியா:தற்காவல்|தற்காவல்]]''' என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் [[:en:Wikipedia:New pages patrol/patrolled pages|சுற்றுக்காவலுக்கு]] உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 16:31, 15 அக்டோபர் 2015 (UTC) |
வணக்கம். உங்கள் கணக்கு '''[[விக்கிப்பீடியா:தற்காவல்|தற்காவல்]]''' என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் [[:en:Wikipedia:New pages patrol/patrolled pages|சுற்றுக்காவலுக்கு]] உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 16:31, 15 அக்டோபர் 2015 (UTC) |
||
* எளியேன் கட்டுரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினைத் தக்கவைத்துக்கொள்வது என் கடமை. வழங்கியவரை வணங்கிப் போற்றுகிறேன். --[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 01:52, 16 அக்டோபர் 2015 (UTC) |
01:52, 16 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
|
சங்கநூல் சொல்லடைவு
- 'சங்கநூல் சொல்லடைவு' [1] நூலின் மூன்று தொகுதிகள் என்னிடம் இருந்தன. அவற்றின் உதவியைக் கொண்டே கட்டுரைகளை எழுதிவந்தேன. அவற்றை இப்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் வாயிலாக உலகுக்கு அளித்துள்ளேன. எல்லாரும் பயனபடுத்திக்கொண்டு முதல்-நிலை மேற்கோள் சான்றுகளுடன கட்டுரைகளை உருவாக்கலாம். இதனால பிறர் எழுதியுள்ள சங்ககால வரலாற்றில் காணப்பட்டும் செயதிகளாகிய இரண்டாம்-நிலைச் சான்றுகளின் வன்மை மென்மைகளை எல்லாரும் மதிப்பட இயலும். பயன்படுத்திக்கொண்டு தமிழுக்கு ஆக்கம் சேர்ப்போம். தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைய தள வெளியீடுகளைப் பயன்படுத்திக்கொண்டு தெளிவு பெறுவோம்.
- ↑ Index des mots de la literature tamoule ancienne, PUBLICATIONS DE L’INSTITUT FRANCAIS D’INDOLOGIE N0.37. PONDICHERY: INSTITUT FRAFRANCAIS D’INDOLOGIE. 1967.
--Sengai Podhuvan (பேச்சு) 22:56, 2 சூலை 2013 (UTC)
பயனர் பாராட்டு
ஒரே பயனர் குறித்த தொடர் பாராட்டை, பல்வேறு பேச்சுப் பக்கங்களில் தெரிவிப்பதற்குப் பதில் பயனரின் பேச்சுப் பக்கத்திலேயே குறிப்பிடலாமே? விக்கிப்பீடியா:விக்கியன்பு மூலம் ஒரு பதக்கம் அளிப்பது கூட சிறப்பாக இருக்கும். அதே போல் ஒரே மாதிரியான சிக்கலையும் ஒரு பகுப்பின் பேச்சுப் பக்கத்திலோ பயனரின் பேச்சுப் பக்கத்திலோ இட்டு கவனம் ஈர்க்க முனையலாம். நன்றி.--இரவி (பேச்சு) 07:15, 6 மார்ச் 2013 (UTC)
- அன்புப் பெருந்தகை இரவி! யாரைப் பாராட்டுவது, யாரை விடுவது? எல்லாரும் உதவுகிறார்கள். எல்லாரும் நல்லவர்கள். எல்லாரும் பாராட்டுக்கு உரியவர்கள். எறும்பும் தன் கையால் எண்சாண். எளியேன் ஒரு சிற்றெறும்பு. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 10:27, 6 மார்ச் 2013 (UTC)
- பிரபாகரனின் நேற்றைய தொகுப்புகள் தொடர்பாக உங்கள் தொடர் பாராட்டுகளைக் குறித்துச் சொன்னேன். நன்றி :) --இரவி (பேச்சு) 12:33, 6 மார்ச் 2013 (UTC)
நிர்வாகப் பெருமக்களுக்கு வேண்டுகோள்
நிர்வாகிகள் குண்டு போட அன்று.
கூட்டாகத் தமிழை வளர்க்க.
புதியவர்களுக்கு ஊக்கம் தந்து உதவி செய்ய.
subject தொடர்பு இல்லாத இடங்களில் விளக்கம் கேளுங்கள்.
தெரிந்து எழுதும் எளியவர்களைப் புண்படுத்தாதீர்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 20:38, 13 மார்ச் 2013 (UTC)
- [இணைப்புக் கருவி] போல நல்ல பணிகளைச் செய்யுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 20:52, 13 மார்ச் 2013 (UTC)
தமிழுக்கு நாம்
- தன்முனைப்பு வேண்டாம். விட்டுக் கொடுப்போம். ஒன்றுபடுவோம். ஒத்துழைப்போம்.
- எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.
- வல்லவனுக்கு வல்லவன் உண்டு.
- என் கை என் கண்ணைக் குத்தாது. தன்னை அறியாமல் தடுமாறிக் குத்திவிடும். அப்படித்தான் சிலர்.
- அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 19:27, 23 மே 2013 (UTC)
காணிக்கை
- எளியேனுக்கு 2013 விக்கியேனியா கருத்தரங்கம் செல்ல முழு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
- இது ஒரு நல்வாய்ப்பு.
- "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்."
- வரவேற்றவர் நற்கீரன்
- சங்க காலப் புலவர்கள் கட்டுரையில் தலைப்புப் பிரிப்பு செய்து வழிகாட்டியவர் கனகசீர்
- விக்கியில் அடிக்குறிப்பு இடக் கற்றுத்தந்த இறைவன் பாலா.
- பகுப்புக் குறிப்பு சேர்க்கக் கற்றுக்கொடுத்த இறைவன் தென்காசியார்.
- இவர்களுக்கு இந்த நல்வாய்ப்பைக் காணிக்கை ஆக்கி நிறைவடைகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:59, 27 மே 2013 (UTC)
- சங்கத்துக்கும் இணையத்தும் பாலம் அமைத்தவர் நீங்கள். வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 19:27, 27 மே 2013 (UTC)
- உங்கள் பயணம் சிறப்படைய வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:11, 27 மே 2013 (UTC)
- பயணம் வெற்றிகரமாய் அமைய வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:03, 30 மே 2013 (UTC)
மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்
வணக்கம், Sengai Podhuvan!
நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
--இரவி (பேச்சு) 07:17, 2 சூன் 2013 (UTC)
- தங்கள் வாழ்த்துக்கு நன்றி. இலக்கைக் கட்டிக் காக்க முயல்வேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 07:24, 2 சூன் 2013 (UTC)
சங்ககாலச் சோழர் / முற்காலச் சோழர்கள்
வணக்கம், சங்ககாலச் சோழர், முற்காலச் சோழர்கள் ஆகிய கட்டுரைகளை ஒன்றான இணைப்பது பொருத்தமா? அவ்வாறாயின் இணைத்தலுக்கான வார்ப்புருவை இட்டுவிடுங்கள். நன்றி. --Anton (பேச்சு) 03:54, 14 சூலை 2013 (UTC)
- இரண்டு கட்டுரைகளையும் சீர்தூக்கிப் பாருங்கள். சங்ககால வரலாற்றை முழுமையாக ஆராய்ந்த முன்னோர்களின் கருத்து அடங்கிய சங்ககாலச் சோழர்கள் கட்டுரை வேண்டுமா வேண்டாமா? வேண்டும் என்றால் எழுதவிடுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 06:25, 14 சூலை 2013 (UTC)
1, 2, 3, 4, 5, 6 ஆம் நூற்றாண்டுகள் (பகுப்பு:கால வரிசைப்படி தமிழ் நூல்கள்)
ஆகப் பழைய காலத் தமிழ் நூல்கள் சங்க இலக்கிய நூல்கள் என்ற வகைக்குள் அடங்குகின்றன. சங்க காலம் கிபி 3 நூற்றாண்டு வரை எனில், துல்லியமாக சில குறிப்பிட்ட நூல்களின் காலம் அறியக் கூடியதாக உள்ளதா. எ.கா கிபி 1, 2, 3 காலப் பகுதியில் தோன்றிய நூல்கள். கிபி 4, 5 நூற்றாண்டுகளில் (களப்பிரர் ஆட்சியில்) சில நூல்கள், குறிப்பாக சமண நூல்கள் எழுந்ததாக அறிகிறோம். அவை பற்றி குறிப்புக்கள் எதோனும் கிடைக்கிறதா. கிபி 6 நூற்றாண்டு பக்தி இலக்கிய தொடக்க காலம், இந்த நூற்றாண்டைச் சார்ந்த நூல்கள் எதுவும் உள்ளனவா. அறிய ஆவல். நன்றி. --Natkeeran (பேச்சு) 03:58, 7 ஆகத்து 2013 (UTC)
விரைவில் விளக்குகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:34, 13 ஆகத்து 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:57, 27 அக்டோபர் 2013 (UTC)
- என்கடன் பணிசெய்து கிடப்பதே
- இளைஞர்கள் ஏற்றம் பெறவேண்டும் --Sengai Podhuvan (பேச்சு) 17:42, 27 அக்டோபர் 2013 (UTC)
உச்சைனி
ஐயா, தாங்கள் எழுதிவரும் உச்சைனி என்ற ஊர் ஏற்கனவே உஜ்ஜைன் என்று பரவலாக அறியப்பட்ட ஊர் என நினைக்கிறேன். அங்கு இதன் வரலாற்றுப் பெயர் என்று உட்தலைப்பில் எழுதுதல் சிறப்பாக இருக்குமா? சிறப்பெனில் ஒரே பக்கத்தில் எழுதுங்கள். --நீச்சல்காரன் (பேச்சு) 18:37, 30 அக்டோபர் 2013 (UTC)
நன்றி. பழைய கட்டுரையுடன் இணைத்துவிடுகிறேன். உற்றுழி உதவி என்பது இதுதான். தங்கள் அரவணைப்பு தொடரட்டும். --Sengai Podhuvan (பேச்சு) 18:53, 30 அக்டோபர் 2013 (UTC)
சங்ககால மலர்கள்
வணக்கம், சங்ககால மலர்கள் பற்றிய கட்டுரைகளுக்கு நன்றி. சில கட்டுரைகளில் பெயர் மலர் பற்றியிராது தாவரம் பற்றி இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன். எடுத்துக்காட்டடாக தாழை மலர் என்றில்லாது தாழை. ஆனால் வழிமாற்று இருக்கட்டும். 99 கட்டுரைகளையும் மேம்படுத்துகிறேன். ஏதும் ஐயம் இருப்பின் கட்டுரைப் பேச்சுப்பக்கத்திலோ அல்லது இங்கேயோ குறிப்பிடுவேன். {{சங்ககால மலர்கள்}} என்ற வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். இதனை சங்ககால மலர்கள் உட்பட்ட தேவையான கட்டுரைகளில் பயன்படுத்தலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:58, 20 சனவரி 2014 (UTC)
- மிகச் சிறந்த பணி. செய்யுங்கள். இப்படித்தான் தமிழ்-விக்கியின் தரம் மேம்பட வேண்டும். --117.193.211.154 07:08, 20 சனவரி 2014 (UTC)
வர்மம்
வர்மம் கட்டுரையில் உள்ள தற்காப்புக் கலை பற்றிய கருத்துக்களை வர்மக்கலை கட்டுரைக்கு நகர்த்திவிட்டு, வர்மம் என்றால் என்ன, வரலாறு, வர்ம மருத்துவம், தற்காப்பு பற்றிய விடயங்களை வர்மம் கட்டுரையில் எழுதலாமா எனப்பாருங்கள். இதுவும் உதவலாம்: [வர்மம்] --Anton·٠•●♥Talk♥●•٠· 03:24, 29 சனவரி 2014 (UTC)
- en:Pressure point இக்கட்டுரை வர்மம் பற்றியது. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:27, 29 சனவரி 2014 (UTC)
நல்ல தொண்டு.
சாத்தன் கட்டுரையை மேற்கோள் காட்டி அவரது கருத்துக்களைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்தலாம்.
செய்யுங்கள். --Sengai Podhuvan (பேச்சு) 04:49, 29 சனவரி 2014 (UTC)
மயிலையார் - பகவான் புத்தர் வாழ்க்கை வரலாறு
பகவான் புத்தர் வாழ்க்கை வரலாறு என்னும் நூலை மயிலை சீனி. வேங்கடசாமி எழுதினாரா? அந்த நூல் இங்கு உள்ளது. [1] எனக்குத் தெரிந்து அவர் இப்படி நூல் எழுதியதாகத் தெரியவில்லை. அந்த தளம் கொடுத்தத் தகவலை உறுதிப்படுத்துமாறு வேண்டுகிறேன். நீங்கள் மயிலையாரிடம் உடன் இருந்து சில உதவிகளைச் செய்ததாக தென்காசிக்காரன் சொன்னான். ஐயத்தை தெளிவுப்படுத்தவும்.--நக்கீரன் (பேச்சு) 11:32, 10 பெப்ரவரி 2014 (UTC)
ஆகிய நூல்கள் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி எழுதியவை.
- இவரது இல்லத்தில் இவருடன் பல நாள் பல மணி நேரம் தங்கி இவர் அரசுக்கு அளித்த தமிழக வரலாற்றுக் கட்டுரைகளை நேரில் பேசிச் செப்பம் செய்திருக்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 12:42, 10 பெப்ரவரி 2014 (UTC)
ஆகா. நக்கீரனார் மிகத் தீவிரமாக களத்தில் சான்று சரிபார்க்க இறங்கி விட்டார் போலும். மகிழ்ச்சி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:09, 12 பெப்ரவரி 2014 (UTC)
அர் விகுதியுடன் ஒற்று
[2] பாண்டியர்த் துறைமுகங்கள் த் ஒற்று தவறானது என்பதற்கு ஏதோ இலக்கண விதி என்னிடம் முன்பு கூறியிருந்தீர்கள். அதை தேடிப்பார்த்து கிடைக்காததால் மீண்டும் அது என்ன விதி எனக் கூறுமாறு வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:09, 12 பெப்ரவரி 2014 (UTC)
திடுத்த வரலாற்றில் இருந்து கண்டுவிட்டேன் நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:10, 12 பெப்ரவரி 2014 (UTC)
கட்டுரை-தொகுத்தல்
பார்க்க: பயனர் பேச்சு:Sengai Podhuvan/கட்டுரை-தொகுத்தல். நன்றி.--Kanags \உரையாடுக 06:50, 25 பெப்ரவரி 2014 (UTC)
ஏறு என்பதற்கு கட்டுரைகளில் மாறுபட்ட பொருட்கள்
ஏறு என்பதற்கு கட்டுரைகளில் மாறுபட்ட பொருட்கள்
குட்டுவர் கட்டுரையில் குட்டுவர் ஏறு எனப் போற்றப்படும் பொறையனை குட்டுவனை என்றான் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனில் பஞ்சவர் ஏறு என்று குறிப்பிடப்படும் பெருவழுதி பஞ்சவரை வென்றவனா? ஏறு என்றால் வெல்தல் என்பது பொருளா? அல்லது அந்த குலத்தைச் சேர்ந்தவன் என்பது பொருளா?--நக்கீரன் (பேச்சு) 21:08, 27 பெப்ரவரி 2014 (UTC)
விளக்கம்
- படை குடி கூழ் அமைச்சு, நட்பு, அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்பது திருக்குறள் இங்கு ஏறு என்றால் சிங்கம்
- பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம்(மாடு), கடல்வாழ் சுறா ஆகியவற்றில் ஆண்பால் விலங்கை ஏறு என்பர். - தொல்காப்பியம் மரபியல் நூற்பா 40, 41, 42
- ஏறுகோள் - காளைப்போர். ஆண்பெற்றத்தோடு போரிடுதல்
இவற்றை எண்ணுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 21:32, 1 ஏப்ரல் 2014 (UTC)
நீங்கள் மேற்கூறியது நான் அறிந்ததே. ஆனால் அதை நான் கேட்கவில்லையே.
- பஞ்சவர் ஏறு - பஞ்சவரில் (பாண்டியரின் பெயர்) ஏறு போன்றவன்.
- குட்டுவர் ஏறு - குட்டுவரில் (சேரரின் பெயர்) ஏறு போன்றவன்.
இப்படித்தானே பொருள் வரும். பஞ்சவர் ஏறு என்று குறிப்பிடப்படும் பெருவழுதி பாண்டியரில் ஏறு போன்றவன் என்றால் குட்டுவர் ஏறு என்று குறிக்கப்படும் சேரல் மட்டும் எப்படி குட்டுவனை அழித்தவன் ஆவான்? இதுதான் என் குழப்பத்துக்கு காரணம்.--நக்கீரன் (பேச்சு) 11:23, 2 ஏப்ரல் 2014 (UTC)
குட்டுவருள் ஏறு போன்றவன் - என்று திருத்திவிடுங்கள். நன்றி --Sengai Podhuvan (பேச்சு) 11:46, 2 ஏப்ரல் 2014 (UTC)
நடுகள்
வணக்கம். பார்க்கவும்: பேச்சு:நடுகல் (வெல்லாளன் கோட்டை).
- நடுகல் (வெல்லாளன் கோட்டை) இக்கட்டுரையில் ’கடுவன்’ என்றால் ஆண்குரங்கு என்று விளக்கம் தந்திருக்கிறீகள். எங்கள் ஊர்ப் பேச்சு வழக்கில் (கயத்தாறு, கழுகுமலை) ஆண்பூனையைக் கடுவன் என்றழைப்போம் என்பதையும், புலி பூனையினத்தைச் சேர்ந்தது என்பதையும் உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:50, 1 ஏப்ரல் 2014 (UTC)
நடுகல்
தங்கள் கருத்து கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆண்குரங்கைக் குறிக்கும் என்பதற்கான சான்றும் குறிக்கப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 21:15, 1 ஏப்ரல் 2014 (UTC)
புறம்
வணக்கம், ஆ.வி.யில் Puram என்ற கட்டுரையினை எழுதியுள்ளேன். இதில் மாற்றங்கள் தேவையென்றால் செய்துவிடுங்கள். புறப்பொருள் கட்டுரையில் இருந்த புறப்பொருள் வெண்பாமாலை 12 எனப் பகுத்துக் காட்டுகிறது என்பதற்கேற்ப அங்கும் ஓர் வரி இணைத்துள்ளேன். ஆயினும் எனக்கு புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் 12 புறத்திணைகளும் தெரியாது. புறம் பற்றி த.வி.யிலும் கட்டுரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி. --AntonTalk 07:53, 15 ஏப்ரல் 2014 (UTC)
நன்றி
அரிய பணிகள் பதக்கம் | ||
தமிழ் விக்கிப்பீடியா புலவர் கால மன்னர் கட்டுரையின் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 20:17, 26 ஏப்ரல் 2014 (UTC) |
- பயனுணர்ந்த பண்புடையாளர் வழங்கிய பதக்கம். பாடு பெற்றேன். பணிவுடன் ஏற்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 22:07, 27 ஏப்ரல் 2014 (UTC)
கட்டுரையை விரிவாக்க உதவி தேவை
வணக்கங்க, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் மடைப்பள்ளி, மூவாதியார், பெயர் உரிச்சொல் ஆகிய கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 12:31, 16 மே 2014 (UTC)
- இயன்றது செய்து கட்டுரைகளைத் தக்கவைத்துள்ளேன். --Sengai Podhuvan (பேச்சு) 07:24, 18 மே 2014 (UTC)
- மிகச் சிறப்பாக விரிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றிங்க !--இரவி (பேச்சு) 07:40, 21 மே 2014 (UTC)
தொல்காப்பிய பண்டை உரைகளின் ஓலைச்சுவடிகள் படி(தி)க்கப்பட்ட காலங்கள் பற்றிய பட்டியல் தேவை
- இளம்பூரணர்-எழுத்து, சொல், பொருளதிகாரத்திற்கு
- பேராசிரியர்- பொருளதிகாரத்திற்கு
- சேனாவரையர்- சொல்லதிகாரத்திற்கு
- நச்சினார்க்கினியர்
- தெய்வச்சிலையார்
- கல்லாடனார்
மேலுள்ளவற்றுக்கு காலம் தந்தால் நல்லது. கலாடனார் உரை கண்டறியப்படவில்லை என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:35, 24 அக்டோபர் 2014 (UTC)
- தேடுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 19:48, 24 அக்டோபர் 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
வணக்கம் Sengai Podhuvan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
- இன்னும் ஒரு சில தொகுப்புகள் மட்டும் செய்தாலேயே இத்திட்டப் பணியின் இலக்குக் கோட்டான மாதம் 100 தொகுப்புகளை எட்டி விடுவீர்கள். இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளதால், இதனைக் கருத்தில் கொண்டு இலக்குக் கோட்டை எட்ட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 02:03, 30 சனவரி 2015 (UTC)
மங்கலம்
மங்கலம் என்பது ஒரு பொருளா? அது எப்படி? யாரால் கூறப்பட்டது?--Kanags \உரையாடுக 11:34, 21 சனவரி 2015 (UTC)
- மங்கலம் தரும் பொருள் எனக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 11:56, 21 சனவரி 2015 (UTC)
தானியங்கி வரவேற்பு
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:33, 7 மே 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு
வணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 7 சூலை 2015 (UTC)
- விக்கியில் பதிவேற்றத்தக்க தமிழ் இலக்கியச் செய்திகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.
- எடுத்துக்கொண்டுள்ள பணி இன்றியமையாதது
- ஓரளவேணும் முடிந்த பின்னர் தொடர்வேன்.
- அது விக்கி எனக்கு அளித்துள்ள பேறு.
- இப்போது மாரத்தான் போட்டியில் இளைஞர்கள் ஓடட்டும் --Sengai Podhuvan (பேச்சு) 05:26, 8 சூலை 2015 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
நீங்கள் பங்களித்த சசிவர்ண போதம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 13, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கொல்லிப்பாவை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 27, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த அட்டாங்கயோகம் (நூல்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 3, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த பெண்ணைநதிப் புராணம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 24, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த அயிரி ஆறு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூலை 8, 2015 அன்று வெளியானது. |
செய்திகளை முன்னிலை அறிமுகத்துக்குக் கொண்டுவந்த ஆட்சிப் பெருமகனார்க்கு எளியேன் வணக்கம் --Sengai Podhuvan (பேச்சு) 22:10, 19 சூலை 2015 (UTC)
தற்காவல்
வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 16:31, 15 அக்டோபர் 2015 (UTC)
- எளியேன் கட்டுரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினைத் தக்கவைத்துக்கொள்வது என் கடமை. வழங்கியவரை வணங்கிப் போற்றுகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 01:52, 16 அக்டோபர் 2015 (UTC)