குல்தீப் நய்யார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்தீப் நய்யார்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை [1]
பதவியில்
1997–2003
தொகுதிநியமிப்பு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-08-14)14 ஆகத்து 1923
சியால்கோட், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
(தற்கால பஞ்சாப், பாக்கித்தான்)
இறப்பு23 ஆகத்து 2018(2018-08-23) (அகவை 95)
தேசியம்இந்தியர்
கல்விமெடில் இதழியல் பள்ளி
வேலைவிரகர், இதழாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தூதர்

குல்தீப் நய்யார் (14 ஆகத்து 1923 - 23 ஆகத்து 2018) இந்தியாவின் குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளர் மற்றும் சிண்டிகேட்டட் கட்டுரையாளர். இடதுசாரிப் பார்வை கொண்ட அரசியல் விமர்சகர்.

துவக்கக் கால வாழ்க்கை[தொகு]

நய்யார் சியால்கோட்டில் 14 ஆகஸ்ட் 1923 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் குர்பாக்சு சிங் மற்றும் பூரன் தேவி ஆவர். இவர் துவக்கக் கல்வியை சியால்கோட்டிலுள்ள கன்டா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவர் சியால்கோட்டிலுள்ள முர்ரே கல்லூரியிலும், அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள மெடில் இதழியல் கல்லூரிகளிலும் பயின்றார்.[2] புதுதில்லியில் தங்கியிருந்த காலத்தில், மக்களவை உறுப்பினரான மௌலானா ஹஸ்ரத் மொஹானியைச் சந்தித்தார். அவர், குல்தீப்பை ஆங்கிலத்தில் எழுத தூண்டினார்; உருது பத்திரிக்கையாளராக இருப்பதில் பயனில்லை, ஆகவே ஆங்கிலத்தில் பணியைத் தொடர வற்புறுத்தினார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

குல்தீப் நய்யார் உருது பத்திரிக்கையாளராக தன் பணியைத் துவக்கினார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

நூல் விவரத் தொகுப்பு[தொகு]

குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள்:துணைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 23 August 2018.
  2. "Hall of Achievement: Kuldip Nayar". Archived from the original on 14 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்தீப்_நய்யார்&oldid=3550750" இலிருந்து மீள்விக்கப்பட்டது