நிம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிம்பா என்பவர் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் குறிக்கப்படும் நபர் ஆவார். இவர் லவோதிக்கேயா திருச்சபையினை சேர்ந்தவர். இவர் வீட்டில் ஆதி திருச்சபை கூடி இறைவேண்டலில் ஈடுபட்டதாக புனித பவுல் குறிக்கின்றார்.[1] இவரின் பெயருக்கு நீரணங்கு என்பது பொருள். இப்பெயர் நிம்பாதோரஸ் என்னும் பெயரின் சுருக்கமாக இருக்கலாம். தமிழ் பொது மொழிபெயர்ப்பு விவிலியத்தில் இவர் பெண்பாலில் குறிக்கப்பட்டாலும் இவரின் பெயரின் ஒலியழுத்தத்தை வைத்து இவரை ஆணாக கூட குறிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Colossians 4:15
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிம்பா&oldid=1730935" இலிருந்து மீள்விக்கப்பட்டது