நல்ல கள்வன்
நல்ல கள்வன் (Penitent thief) அல்லது மனம் மாறிய கள்வன் என்பவர் லூக்கா நற்செய்தியில் பெயர் குறிப்பிடப்படாமல், சிலுவையில் இயேசு கிறித்துவின் இரு பக்கத்திலும் அறையப்பட்ட கள்வர்களுள் ஒருவராவார். பாரம்பரியப்படி இவரின் பெயர் புனித தீஸ்மாஸ் ஆகும்.[1][2][3][4] இவர் சிலுவையில் தன் பாவங்களுக்காக மனம் வருந்தி இயேசுவிடம் மன்னிப்பு பெற்று விண்ணகம் சென்றார் என்பது விவிலிய அடிப்படையில் கிறித்தவ நம்பிக்கை ஆகும்.
விவிலியத்தில்
[தொகு]இயேசுவோடு அவரின் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை சிலுவைகளில் அறைந்தார்கள் என விவிலியம் கூறுகின்றது. (Matthew 27:38, Mark 15:27-28, Luke 23:33, John 19:18),
இந்நிகழ்வை மாற்கு, ஏசாயா 53:12இல் உள்ள மறைநூல் வாக்கு நிறைவேறியதாக கூறுகின்றார். மத்தேயு இரண்டு கள்வர்களுமே இயேசுவை பழித்துரைத்ததாக கூறுகின்றார் (Matthew 27:44). ஆயினும் லூக்கா பின்வருமாறு இன்நிகழ்வை விவரிக்கின்றார்:
39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், 'நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று' என்று அவரைப் பழித்துரைத்தான். 40 ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, ' கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். 41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே! ' என்று பதிலுரைத்தான். 42 பின்பு அவன், ' இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும் ' என்றான். 43 அதற்கு இயேசு அவனிடம், ' நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ' என்றார். 23:39-43

மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lawrence Cunningham, A brief history of saints (2005), page 32.
- ↑ Gabra, Gawdat (2009). The A to Z of the Coptic Church. Lanham, MD: Scarecrow Press. p. 120. ISBN 9780810870574.
- ↑ Ehrman, Bart; Plese, Zlatko (2011). The Apocryphal Gospels: Texts and Translations. New York: Oxford University Press. p. 582. ISBN 9780199732104.
a man named demas.
- ↑ Matthew 27:38; Mark 15:27–28,32; Luke 23:33; John 19:18