நான்கு நற்செய்தியாளர்கள்
Jump to navigation
Jump to search
நான்கு நற்செய்தியாளர்கள் என்பவர்கள் கிறித்தவ மரபில் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நால்வரைக்குறிக்கும். இவர்கள் நால்வரும் இயேசுவின் வரலாற்றை விவரிக்கும் பின்வரும் புதிய ஏற்பாட்டின் நான்கு நற்செய்திகளின் ஆசிரியர்களாகக்கருதப்படுகின்றனர்:
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய முதல் மூன்று நூல்களும் தமக்குள் மிகப் பெரும் அளவில் ஒத்திருப்பதால்,இவை ஒத்தமை நற்செய்திகள் என்று அழைக்கப்படுகின்றன. மரபுப்படி இவர்களைப்பற்றியத்தகவல்கள்:
- மத்தேயு – வரி வசூளிப்பவராக இருந்தவர். இயேசுவின் அழைப்பை ஏற்று அவரின் சீடராகவும் பின்னர் திருத்தூதர்களுள் ஒருவராகவும் இருந்தவர்,
- மாற்கு – இவர் பேதுருவின் சீடர்,
- லூக்கா – இவர் ஒரு மருத்துவர். இவர் தனது நற்செய்தியினையும் திருத்தூதர் பணிகள் நூலினையும் தியோபில் என்பவருக்காக எழுதியதாக இவரே குரிக்கின்றார். இவர் திருத்தூதர் பவுலின் நண்பர்.
- யோவான் – இவர் சீடரும் திருத்தூதர்களுள் ஒருவரும் ஆவார். இவரே மிக இளைய திருத்தூதர் என்பர்.
இயேசுவின் நற்செய்தியினை வெளிப்படுத்து நூல்களை இவர்கள் எழுதியதால் நற்செய்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.[1]
பிரான்சின் பட்டத்து அரசிபிரித்தானியின் ஆனின் (1477-1514) நான்கு நற்செய்தியாளர்களின் ஓவியம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The good news of Jesus Christ, the Son of God." Mark 1:1