பாரதிதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 88: வரிசை 88:
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.


1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.<ref name="auto"/>
1969: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.<ref name="auto"/>


== பாரதிதாசனின் ஆக்கங்கள் ==
== பாரதிதாசனின் ஆக்கங்கள் ==

01:22, 29 ஏப்பிரல் 2021 இல் நிலவும் திருத்தம்

பாரதிதாசன்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
பிறப்புசுப்புரத்னம்
(1891-04-29)ஏப்ரல் 29, 1891
புதுவை, இந்தியா
இறப்புஏப்ரல் 21, 1964(1964-04-21) (அகவை 72)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
புனைபெயர்பாரதிதாசன்
தொழில்தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
தேசியம்இந்தியர்
கல்விபுலவர்
கல்வி நிலையம்கல்வே கல்லூரி, புதுவை
காலம்20ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
வகைதமிழிலக்கியம் - கவிதை, நாடகம், கட்டுரை, கதை
கருப்பொருள்இனமானம், அரசியல்
இலக்கிய இயக்கம்திராவிட இயக்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பாண்டியன் பரிசு
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது
துணைவர்பழநி அம்மையார்
பிள்ளைகள்சரசுவதி.கண்ணப்பன்
வசந்தா.தண்டபாணி
இரமணி.சிவசுப்ரமணியன்
மன்னர் மன்னன்
கையொப்பம்

பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

புரட்சிக்கவி பாரதிதாசன், ஏப்ரல் 29, 1891 ஆம் ஆண்டு புதுவையில் செங்குந்தர் கைக்கோள முதலியார்[1] மரபில், பெரிய வணிகராயிருந்த, கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும், தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலேயே, கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும், முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின், இரண்டாண்டில், கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவர் அரசினர் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும், நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை, அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்களுக்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில், விருந்துக்குப் பின், சி. சுப்பிரமணிய பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருந்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே, அவரை, பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. ஆயினும் அதற்குமுன்பே அவர் பாரதியாரைச் சந்தித்திருப்பது பாரதியார் தாமே எழுதின தராசு என்ற தொடரில் பாரதிதாசனைப் பெயர் சுட்டாமே ஒரு கைக்கோளச் சாதித் தமிழ்க்கவிராயர் தம்மிடம் வந்து எங்கெங்குக் காணினும் சக்தியடா- தம்பி ஏழு கடல் அவள் மேனியடா!" என்று ஒரு பாடலைப்பாடிக் காட்டியதாகக் கூறியிருப்பது இவரே அந்தக் கவிராயர் என்று உறுதிப்படுத்துகிறது.[2]

"தன் நண்பர்கள் முன்னால் பாடு" என்று பாரதி கூற, பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து, இரண்டு பாடல்களைப் பாடினார். இவரின் முதற் பாடல், பாரதியாராலேயே 'சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது' என்றெழுதப்பட்டு, 'சுதேசமித்திரன்' இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில், "கண்டழுதுவோன்", "கிறுக்கன்", "கிண்டல்காரன்", "பாரதிதாசன்" என, பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள், நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு, 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடைமையாக்கப்பட்டன.

பாரதியார் மீது பற்று

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.[3]

மறைவு

பாரதிதாசன் ஏப்ரல் 21, 1964 அன்று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

  • "எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே"..
  • புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..
  • தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..
  • எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..

காலவரிசை

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1969: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.[3]

பாரதிதாசனின் ஆக்கங்கள்

பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளியிட்டார். அவற்றுள் சில:

  1. அம்மைச்சி (நாடகம்) [4]
  2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948)
  3. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948)
  4. எது பழிப்பு, குயில் (1948)
  5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948)
  6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்) [4]
  7. கலை மன்றம் (1955)
  8. கற்புக் காப்பியம், குயில் (1960)
  9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்) [4]
  10. நீலவண்ணன் புறப்பாடு
  11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967) [4]
  12. பெண்கள் விடுதலை
  13. விடுதலை வேட்கை
  14. வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959)
  15. ரஸ்புடீன் (நாடகம்) [4]

இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிதாசன் நூல்கள்

பாரதிதாசன் படைப்புகள் பல, அவர் வாழ்ந்தபொழுதும், அவரின் மறைவிற்குப் பின்னரும், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்:

வ.எண் நூலின் பெயர் முதற்பதிப்பு ஆண்டு வகை பதிப்பகம் குறிப்பு
01 அகத்தியன்விட்ட புதுக்கரடி 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
02 சத்திமுத்தப்புலவர் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை
03 இன்பக்கடல் 1950 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுவை
04 அமிழ்து எது? 1951 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
05 அமைதி 1946 நாடகம் செந்தமிழ் நிலையம், இராமச்சந்திராபுரம்
06 அழகின் சிரிப்பு 1944 கவிதை முல்லை பதிப்பகம், சென்னை
07 இசையமுது (முதலாம் தொகுதி) 1942 இசைப்பாடல் பாரத சக்தி நிலையம், புதுவை
08 இசையமுது (இரண்டாம் தொகுதி) 1952 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
09 இந்தி எதிர்ப்புப் பாடல்கள் 1948 இசைப்பாடல்
10 இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1939 நாடகம் குடியரசுப் பதிப்பகம் 1934 – செப்டம்பர் 5ஆம் நாள் பெரியார் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.
11 இருண்டவீடு 1944 காவியம் முத்தமிழ் நிலையம், கோனாபட்டு, புதுக்கோட்டை
12 இலக்கியக் கோலங்கள் 1994 குறிப்புகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
13 இளைஞர் இலக்கியம் 1958 கவிதை
14 உலகம் உன் உயிர் 1994 கவிதை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை வெவ்வேறு இதழ்களில் எழுதிய தலையங்கக் கவிதைகள். ச. சு. இளங்கோ பதிப்பு
15 உலகுக்கோர் ஐந்தொழுக்கம் 1994 கட்டுரைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. தலையங்கக் கட்டுரைகள்
16 எதிர்பாராத முத்தம் 1938 கவிதை -
17 எது இசை? 1945 சொற்பொழிவும் பாடல்களும் கமலா பிரசுராலயம், 59 பிராட்வே, சென்னை பாரதிதாசனும் பாடல்களும் அண்ணாதுரையின் கட்டுரையும் சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சர் மு. அண்ணாமலை செட்டியார், ராஜாகோபாலாச்சாரியார் ஆகியோரின் கருத்துகளும் அடங்கிய தொகுப்பு[5]
18 ஏழைகள் சிரிக்கிறார்கள் 1980 சிறுகதைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு.
19 ஏற்றப் பாட்டு 1949 இசைப்பாடல் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
20 ஒரு தாயின் உள்ள மகிழ்கிறது 1978 இசைப்பாடல் பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
21 கடற்மேற் குமிழிகள் 1948 காவியம் பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
22 கண்ணகி புரட்சிக் காப்பியம் 1962 காவியம் அன்பு நிலையம், சென்னை
23 கதர் இராட்டினப்பாட்டு, 1930 இசைப்பாடல் காசி ஈ லஷ்மண் பிரசாத், ஶ்ரீவேல் நிலையம், புதுச்சேரி
24 கவிஞர் பேசுகிறார் 1947 சொற்பொழிவு திருச்சி அன்பு ஆறுமுகம் என்பவரால் தொகுக்கப்பட்டது
25 கழைக்கூத்தியின் காதல் 1951 நாடகம்
26 கற்கண்டு 1945 நாடகம் பாரதிதாசன் நாடகங்கள் தொகுதியில் இடம்பெற்றுள்ளது
27 காதலா? கடமையா? 1948 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
28 காதல் நினைவுகள் 1944 கவிதை செந்தமிழ் நிலையம், இராமச்சந்திரபுரம்
29 காதல் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
30 குடும்பவிளக்கு – முதல் பகுதி: ஒருநாள் நிகழ்ச்சி 1942 காவியம் பாரத சக்தி நிலையம், புதுவை
31 குடும்ப விளக்கு - 2ஆம் பகுதி: விருந்தோம்பல் 1944 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை
32 குடும்ப விளக்கு - 3ஆம் பகுதி: திருமணம் 1948 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை
33 குடும்ப விளக்கு - 4ஆம் பகுதி: மக்கட்பேறு 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை
34 குடும்ப விளக்கு - 5ஆம் பகுதி: முதியோர் காதல் 1950 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை ஐந்துபகுதிகளும் இணைந்த பதிப்பு பின்னாளில் வந்தது.
35 குமரகுருபரர் 1992 நாடகம் காவ்யா, பெங்களூர் 1944ஆம் ஆண்டில் இந்நாடகம் 1992ஆம் ஆண்டில் தமிழ்நாடனால் பதிப்பிக்கப்பட்டது
36 குயில் பாடல்கள் 1977 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
37 குறிஞ்சித்திட்டு 1959 காவியம் பாரி நிலையம், சென்னை
38 கேட்டலும் கிளத்தலும் 1981 கேள்வி-பதில் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
39 கோயில் இருகோணங்கள் 1980 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
40 சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930 காவியம் ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
41 சிரிக்கும் சிந்தனைகள் 1981 துணுக்குகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
42 சிறுவர் சிறுமியர் தேசியகீதம் 1930 கவிதை
43 சுயமரியாதைச் சுடர் 1931 பாட்டு கிண்டற்காரன் என்னும் புனைப்பெயரில் எழுதிய 10 பாடல்களைக் கொண்டது. குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படையல்
44 செளமியன் 1947 நாடகம்
45 சேரதாண்டவம் 1949 நாடகம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
46 தமிழச்சியின் கத்தி 1949 காவியம் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
47 தமிழியக்கம் 1945 கவிதை செந்தமிழ் நிலையம், ராயவரம் ஒரே இரவில் எழுதியது
48 தமிழுக்கு அமிழ்தென்று பேர் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
49 தலைமலை கண்ட தேவர் 1978 நாடகம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
50 தாயின் மேல் ஆணை 1958 கவிதை
51 தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு 1930 பாட்டு ம. நோயேல் வெளியீடு, புதுவை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
52 திராவிடர் திருப்பாடல் 1948 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
53 திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் 1949 கவிதை பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
54 தேனருவி 1956 இசைப்பாடல் பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி 1978ஆம் ஆண்டில் சென்னை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட த. கோவேந்தன் பதிப்பில் புதிய பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
55 தொண்டர் வழிநடைப் பாட்டு 1930 பாட்டு
56 நல்லதீர்ப்பு 1944 நாடகம் முல்லைப் பதிப்பகம், சென்னை
57 நாள் மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
58 படித்த பெண்கள் 1948 நாடகம்
59 பன்மணித்திரள் 1964 கவிதை
60 பாட்டுக்கு இலக்கணம் 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச. சு. இளங்கோ பதிப்பு
61 பாண்டியன் பரிசு 1943 காவியம் முல்லைப் பதிப்பகம், சென்னை
62 பாரதிதாசன் ஆத்திசூடி 1948 கவிதை
63 பாரதிதாசன் கதைகள் 1955 சிறுகதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி சிவப்பிரகாசம் பதிப்பு. புதுவை முரசு இதழில் வெளிவந்த 14 படைப்புகளின் தொகுப்பு
64 பாரதிதாசனின் கடிதங்கள் 2008 கடிதங்கள் ச.சு.இளங்கோ பதிப்பு
65 பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) 1938 கவிதை குஞ்சிதம் குருசாமி, கடலூர்
66 பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) 1949 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி இ.பதிப்பு 1952
67 பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) 1955 கவிதை
68 பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) 1977 கவிதை பாரி நிலையம், சென்னை.
69 பாரதிதாசன் நாடகங்கள் 1959 கவிதை பாரி நிலையம், சென்னை
70 பாரதிதாசனின் புதிய நாடகங்கள் 1994 நாடகங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
71 பாரதிதாசனின் புதினங்கள் 1992 புதினம் ச.சு.இளங்கோ பதிப்பு
72 பாரதிதாசன் பேசுகிறார் 1981 சொற்பொழிவு ச.சு.இளங்கோ பதிப்பு.
73 பாரதிதாசன் திருக்குறள் உரை 1992 உரை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
74 பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் 2012 திரைக்கதை பாரி நிலையம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வளையாபதி ஆகிய திரைப்படங்களின் திரைக்கதை, உரையாடல்கள் பற்றிய ஆய்வும் பதிப்பும்
75 பிசிராந்தையார் 1967 நாடகம் 1970ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
76 புகழ்மலர்கள் 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு
77 புரட்சிக் கவி 1937 கவிதை ஶ்ரீசாரதா பிரஸ், புதுவை பாரதிதாசன் கவிதைகள் - முதலாம் தொகுதியில் காவியங்கள் பகுதியில் இணைக்கப்பட்டு உள்ளது.
78 பொங்கல் வாழ்த்துக் குவியல் 1954 கவிதை பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி
79 மணிமேகலை வெண்பா 1962 கவிதை
80 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 1926 இசைப் பாடல் காசி-லஷ்மண் பிரசாத், வேல் நிலையம், புதுச்சேரி
81 மயிலம் ஸ்ரீ சிவசண்முகக்கடவுள் பஞ்சரத்நம் 1925 கவிதை ஜெகநாதம் பிரஸ், புதுவை
82 மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 1920 இசைப்பாடல் ஜெகநாதம் பிரஸ், புதுவை
83 மானுடம் போற்று 1984 கட்டுரைகள் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
84 முல்லைக்காடு 1948 கவிதை ஞாயிறு நூற்பதிப்பகம், புதுச்சேரி
85 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1980 இலக்கணம் பூம்புகார் பிரசுரம், சென்னை ச.சு.இளங்கோ பதிப்பு
86 வேங்கையே எழுக 1978 கவிதை பூம்புகார் பிரசுரம், சென்னை த.கோவேந்தன் பதிப்பு

திரையுலகில் பாரதிதாசன் [6]

திராவிட இயக்கத் தலைவர்களுள் முதன்முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசனே ஆவார். 1937ஆம் ஆண்டில் திரைப்படத் துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தனது இறுதிநாள் வரை அத்துறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல வடிவங்களில் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டு இருந்தார்.

திரைக்கதை, உரையாடல்

அவ்வகையில் அவர் பின்வரும் படங்களுக்கு திரைக்கதை, உரையாடல், பாடல் எழுதியனார்:

வ.எண். திரைப்படத்தின் பெயர் ஆண்டு இயக்குநர் கதாநாயகன் தயாரிப்பாளர் குறிப்பு
1 பாலாமணி அல்லது பக்காத்திருடன் 1937 - தி. க. சண்முகம் -
2 இராமானுஜர் 1938 வ. ராமசாமி சங்கு சுப்ரமணியம் -
3 கவிகாளமேகம் 1940 எல்லிஸ் ஆர். டங்கன் டி. என். ராஜரத்தினம் -
4 சுலோசனா 1944 டி. ஆர். சுந்தரம் டி.ஆர்.சுந்தரம் மார்டன் தியேட்டர்ஸ்
5 ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 - பி. எஸ். கோவிந்தன் -
6 பொன்முடி 1949 - பி. வி. நரசிம்மபாரதி -
7 வளையாபதி 1952 - ஜி.முத்துக்கிருட்டிணன் -
8 குமரகுருபரர் - - - மாடர்ன் தியேட்டர்ஸ்
8 பாண்டியன் பரிசு - சிவாஜி கணேசன் பாரதிதாசன் பிக்சர்ஸ் தொடக்கவிழாவோடு நின்றுவிட்டது
9 முரடன்முத்து - - - பாரதிதாசன் பிக்சர்ஸ் படமாக உருவாகவில்லை
10 மகாகவி பாரதியார் - - - பாரதிதாசன் பிக்சர்ஸ் படமாக உருவாகவில்லை

இவற்றுள் பாண்டியன் பரிசு, முரடன் முத்து, மகாகவி பாரதியார் ஆகிய படங்களை தானே சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் தனது இறுதிக்காலத்தில் ஈடுபட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

திரைப்படப்பாடல்கள்

பாரதிதாசன் திரைப்படத்திற்கென தானே பல பாடல்களை இயற்றினார். அவர் வெவ்வேறு சூழல்களில் இயற்றிய பாடல்கள் சிலவற்றை சிலர் தத்தம் படங்களில் பயன்படுத்திக்கொண்டனர். அப்பாடல்களும் அவை இடம்பெற்ற திரைப்படங்களும் பின்வருமாறு:

வ.எண் பாடல்கள் திரைப்படம் ஆண்டு பாடகர் இசையமைப்பாளர்
1 அனைத்துப் பாடல்களும் பாலாமணி அல்லது பக்காத்திருடன் 1937 - -
2 அனைத்துப் பாடல்களும் ஸ்ரீ ராமானுஜர் 1938 - -
3 அனைத்துப் பாடல்களும் கவி காளமேகம் 1940 - -
4 வெண்ணிலாவும் வானும் போல... பொன்முடி 1950 - -
5 துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... ஓர் இரவு 1951 - -
6 அதோ பாரடி அவரே என் கணவர்... கல்யாணி 1952 - -
7 வாழ்க வாழ்க வாழ்கவே... பராசக்தி 1952 - -
8 பசியென்று வந்தால் ஒரு பிடி சோறு... பணம் 1952 - -
9 அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?... அந்தமான் கைதி 1952 - -
10 குளிர்த்தாமரை மலர்ப்பொய்கை... வளையாபதி 1952 - -
11 குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி... வளையாபதி 1952 - -
12 தாயகமே வாழ்க தாயகமே வாழ்க... பூங்கோதை 1953 - -
13 பாண்டியன் என் சொல்லை..... திரும்பிப்பார் 1953 - -
14 ஆலையின் சங்கே நீ ஊதாயோ… ரத்தக் கண்ணீர் 1954 - -
15 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என் மகள் 1954 - -
16 நீலவான் ஆடைக்குள் உடல் ... கோமதியின் காதலன் 1955 - -
17 ஆடற்கலைக்கழகு தேடப்பிறந்தவள்... நானே ராஜா 1955 - -
18 தலைவாரி பூச்சூடி உன்னை-பாட... ரங்கோன் ராதா 1956 - -
19 கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே... குலதெய்வம் 1956 - -
20 ஒரே ஒரு பைசா தருவது பெரிசா... பெற்ற மனம் 1960 - -
21 பாடிப் பாடிப் பாடி வாடி... பெற்ற மனம் 1960 - -
22 மனதிற்குகந்த மயிலே வான்விட்டு... பெற்ற மனம் 1960 - -
23 தமிழுக்கும் அமுதென்று பேர்-அந்த... பஞ்சவர்ணக்கிளி 1965 - -
24 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்... கலங்கரை விளக்கம் 1965 - -
25 வலியோர் சிலர் எளியோர் தமை... மணிமகுடம் 1966 - -
26 புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட சந்திரோதயம் 1966 - -
27 எங்கெங்குக் காணிணும் சக்தியடா !... நம்ம வீட்டுத் தெய்வம் 1970 - -
28 சித்திரச் சோலைகளே-உமை நன்கு.... நான் ஏன் பிறந்தேன் 1972 - -
29 புதியதோர் உலகம் செய்வோம் பல்லாண்டு வாழ்க 1975 - -
30 காலையிளம் பரிதியிலே ... கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978 - -
31 அம்மா உன்றன் கைவளையாய் ... நிஜங்கள் 1984 - -
32 கொலை வாளினை எடடா... சிவப்பதிகாரம் - - -
33 அவளும் நானும் அமுதும் தமிழும் அச்சம் என்பது மடமையடா 2016 விஜய் யேசுதாஸ் ஏ.ஆர்.ரகுமான்

பாரதிதாசன் எழுதிய முன்னுரைகள்

  1. வள்ளுவர் கண்ட நாடு, மு.த.வேலாயுதனார், சரோஜினி பதிப்பகம் புதுச்சேரி, 1951 [7]

பாரதிதாசன் பற்றிய நூல்கள்

  1. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ரஜீத், 1945, மின்னல் பதிப்பகம், புஸ்லி வீதி, புதுச்சேரி.[8]

மேற்கோள்கள்

  1. Kōpati Pārati (1988). Pāvēntar pānayam kaṭṭurait tiraṭṭu. Pūṅkoṭi Patippakam. பக். 48. https://books.google.co.in/books?id=ssEuAAAAIAAJ&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+. 
  2. "தராசு". பார்க்கப்பட்ட நாள் 10/03/202. {{cite web}}: Check |archive-url= value (help); Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. 3.0 3.1 "பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு". e-Kalvi (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-05-16. பார்க்கப்பட்ட நாள் 2020-06-14.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "p10243". www.tamilvu.org.
  5. குடிஅரசு, 1945-01-27, பக்.10
  6. பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மையம் விளக்கக்கையேடு, கலை பண்பாட்டுத்துறை, புதுச்சேரி அரசு
  7. திராவிடநாடு (இதழ்) நாள்:10-6-1952, பக்கம் 8
  8. குடிஅரசு, 18-8-1945, பக்.11

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிதாசன்&oldid=3138932" இலிருந்து மீள்விக்கப்பட்டது