சோ. தர்மன்
சோ. தர்மன் | |
---|---|
பிறப்பு | சோ. தர்மராஜ் கோவில்பட்டி |
தேசியம் | இந்தியர் |
சோ. தர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) என்பவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். கி. ராஜநாராயணனின் எழுத்துகள் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். [1] 2019ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, சாகித்ய அகாதெமி விருதுகளைப் பெற்றவர்.
பிறப்பு[தொகு]
விவசாயக்குடும்பத்தைச் சார்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1952 ஆகத்து 8ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார்.[1]
நூல்கள்[தொகு]
இவர் எழுதிய முதற்கதை 1980ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத்தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசைபற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019ஆம் ஆண்டுவரையிலான இவரது படைப்புகள்.[1]
புதினம்[தொகு]
- கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும் "மூங்கா" என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [1]
- சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதெமி விருதையும் பெற்ற நூல்)
- தூர்வை (2017)
- பதிமூனாவது மையவாடி (2020)
சிறுகதைத்தொகுதிகள்[தொகு]
- ஈரம் (சிறுகதைத்தொகுதி)
- சோகவனம்
- வனக்குமாரன்
- அன்பின் சிப்பி (2019)
- நீர்ப்பழி
- சோகவனம்
வாழ்க்கைவரலாறு[தொகு]
- வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)
விருதுகள்[தொகு]
- 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
- கூகை என்னும் புதினத்திற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
- சூல் என்னும் புதினத்திற்காக 2016ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.[2]
- சூல் என்னும் புதினத்திற்காக 2019ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார். [3][4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 நூலக உலகம் மாத இதழ், 2019 திசம்பர், பக்.5
- ↑ பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ‘வாசகர் வட்டம்' வெளியீடு
- ↑ "Press Release sahitya Akademi awards 2019". பார்த்த நாள் 18 December 2019.
- ↑ "சூல் நாவலுக்காக சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதெமி விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html. பார்த்த நாள்: 18 December 2019.