கிறிஸ்தாயனம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்தாயனம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை ஆக்கியவர் ஜான் பால்மர் என்பவர். இதில் இயேசு கிறித்துவின் வரலாறு நான்கு காண்டங்களில் விருத்தப்பாக்களில் பாடப்பட்டுள்ளது.

வெளியீட்டு விவரங்கள்[தொகு]

கிறிஸ்தாயனம் என்னும் நூல் நாகர்கோவிலில் 1865ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை வெளியிட்ட நிறுவனம் இலண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் அமைப்பைச் சார்ந்த இலண்டன் மிஷன் அச்சகம் ஆகும்.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தாயனம்_(நூல்)&oldid=3175854" இலிருந்து மீள்விக்கப்பட்டது