துரியோதனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துரியோதனன் மகாபாரதம் கதையின் முக்கியமான பாத்திரமாவான். இவன் கௌரவர்களில் மூத்த சகோதரனாவான். இவனுக்கு கடைசிவரை கர்ணன் உற்ற தோழனாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவன் குருட்டு அரசனான திருதராஷ்டிரனதும், காந்தாரியினதும் மூத்த மகன். பீமனால் தொடை பிளந்து கொல்லப்படுகிறான்.

பொருளடக்கம்

பிறப்பு[தொகு]

திருதராஷ்டிரனின் மனைவி காந்தாரி வெகு காலம் கர்ப்பமாக இருந்தாள். அவள் பிரசவிப்பதற்கு முன்பே பாண்டுவின் மனைவி குந்தி யுதிஷ்டிரனை பெற்றதால், ஆத்திரமுற்று தனது வயிற்றில் அடித்துக் கொண்டாள். அதனால் அவளது வயிற்றில் (கர்ப்பத்தில்) இருந்து ஒரு சதைப்பிண்டம் வந்து வெளியே விழுந்தது. இதைக் கண்ட காந்தாரி அதிர்ச்சியடைந்தாள். வியாசரை அழைத்தாள். அவர், அந்த சதைப்பிண்டத்தை நூற்றொரு துண்டங்களாக அரிந்து வெண்ணெய்க் குடத்தில் போட்டு மூடி வைத்து ஒரு வருடத்திற்கு மண்ணில் புதைத்து வைத்தார். வருட முடிவில், முதல் பானை திறக்கப்பட்டது, அதிலிருந்து துரியோதனன் உதித்தான்.[1]

முதலில் துரியோதனனுக்கு சுயோதனன் என்ற பெயர்தான் வைக்கப்பட்டது. "பெரும்போர் வீரன்" என்பது அந்தப் பெயரின் பொருள். அந்தப் பெயரைப் பிறகு அவனே துரியோதனன் என்று மாற்றிக் கொண்டான். அதன் பொருள் "வெற்றிகொள்ளப்பட முடியாதவன்" அல்லது "போரில் கடுமையானவன்" ஆகும். பலர், அவனது துர் நடத்தைகளாலேயே அவனுக்கு அந்தப் பெயர் வந்ததாகத் தவறாக நினைக்கின்றனர். அவன் பாம்பை தனது கொடிமரத்தின் கொடியாகப் பயன்படுத்தினான்.

வளர்ச்சி[தொகு]

துரியோதனனது உடல் மின்னலாலானது என்று சொல்லப்படுகிறது. பீமனுக்கு அடுத்தபடியாக அவன்தான் பலவான். தனது சகோதரர்களால், குறிப்பாக துட்சாசனனால் பெரிதும் மதிக்கப்பட்டான். அவன் தனது குருக்கள் கிருபர் மற்றும் துரோணரிடம் போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் அவன் ஒப்பற்றவனாகத் திகழ்ந்தான். கதாயுத்தத்தில் நிபுணத்துவம் பெற பலராமனிடம் சீடனாக இருந்து நற்பெயர் பெற்று, அவனுக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான்.

குடும்பம்[தொகு]

துரியோதனன் பிராக்ஜோதிஷ மன்னன் பகதத்தனின் புதல்வியான பானுமதியை மணந்து கொண்டான். அவனுக்கு லட்சுமணகுமாரன் என்ற மகனும், லட்சுமணா என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். லட்சுமணா கிருஷ்ணனின் மகன் சாம்பனால் கடத்தப்பட்டு, பின்பு அவனையே திருமணம் செய்து கொள்கிறாள். லட்சுமணகுமாரன் குருக்ஷேத்திர யுத்த 13ம் நாளில் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான்.

பாத்திரம்[தொகு]

மகாபாரதக் கதையின் பிரதான வில்லன் துரியோதனன்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sacred-texts.com/hin/m01/m01116.htm

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=துரியோதனன்&oldid=1416526" இருந்து மீள்விக்கப்பட்டது