மயாசுரன்
மயாசுரன்
இந்து தொன்மவியலில் மயா அல்லது மயாசுரன் என்பவன் புவியில் அசுர, தைத்ய மற்றும் இராக்கத இனங்களின் மாபெரும் அரசனாவான்.பாதாள உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன்.
பொருளடக்கம் |
திரிபுரம் [தொகு]
மயாசுரன் தனதாட்சியில் மூன்று பறக்கும் நகரங்களை வடிவமைத்து ஆண்டு வந்தான். அவை திரிபுரம் என அழைக்கப்பட்டது. திரிபுரம் செல்வச் செழிப்பில், அதிகாரத்தில் ஏழுலகிலும் சிறந்து விளங்கியது. ஆயினும் அவனது அட்டூழியங்களுக்காக அவனுக்கு வரமருளிய சிவபெருமானே அவனுடன் போரிட்டு திரிபுரம் எரித்தார். ஆயினும் திரிபுரமெரித்த சிவனே ஐங்கரனை நினைக்காதமையால் அவரது தேரச்சு முறிந்தது. அவ்விடமே அச்சிறுப்பாக்கம் என வழங்கப்படலாயிற்று.
இராமாயணத்தில் [தொகு]
மாயா ராஷ்ட்ரா என்ற தனது தலைநகரைக் கட்டினான். இராவணனின் அழகிய மனைவி மண்டோதரியின் தந்தையாவான்.
மகாபாரதத்தில் [தொகு]
காந்தவ காடு பற்றியெரிந்தபோது தன்னைக் கிருஷ்ணரும் அருச்சுனனும் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்குமுகமாக பாண்டவர்கள் ஆட்சியில் தர்ம மகாராசனுக்கு இந்திரப்பிரஸ்தத்தில் சிறப்புமிக்க அரண்மனை ஒன்று கட்டிக் கொடுக்கிறான். மாயாசபை என பலராலும் புகழப்படும் இந்த அரண்மனையிலேயே நிலத்தை நீரென்றும் நீரை நிலமென்றும் தடுமாறும் துரியோதனனை கண்டு திரௌபதி சிரித்த நிகழ்ச்சி நடந்தது.
மேலும் பார்க்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||||||||
.
|
|||||||||||||||||||||||