ஒன்பதாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் ஒன்பதாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்[தொகு]

ஒன்பதாவது நாள் அபிமன்யுவிற்கும் அலம்பசனுக்கும் பெரும்போர் நடந்தது. அலம்பசன் தனது தேரினை இழந்து போர்க்களத்தை விட்டு ஓடினான்.

சாத்தியகிக்கும் அசுவத்தாமனுக்கும் பெரும்போர் நடந்தது.

துரோணர் அருச்சுனனை எதிர்த்தார்.

பீஷ்மரை எதிர்த்த பாண்டவர்களை விரட்டியடிக்க துச்சாதனனை துரியோதனன் அனுப்பினான். பாண்டவர் படையில் கடும் சேதத்தை பீஷ்மர் விளைவித்தார்.

உசாத்துணை[தொகு]

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.