தருமன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தருமன் மகாபாரதத்தில் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரசுத்தம் ஆகியவற்றின் அரசர்.இவர் அறிவியல்,மதம் மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவராய் திகழ்ந்தவர்.தருமரின் தந்தை பிராமணர் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார்.ஒரு காலத்தில் குந்தி (தருமரின் தாய்) துருவாச முனிவரிடம் வரம் வேண்டியிருந்தாள்.அதை இப்போது தன பதியிடம் தெரிவித்தாள்.அதன்படி அவள் இறைவனிடம் பிள்ளை வரம் வேண்டினாள்.அவ்வாறு பிறந்த பிள்ளை தான் தருமர்.
எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. [1]
அடிக்குறிப்பு[தொகு]
வெளி இணைப்பு[தொகு]
|
||||||||||||||||||||
| பஞ்ச பாண்டவர்கள் | |
|---|---|
| தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன் | |