சௌனகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைமிசாரண்யம் காட்டில் குலபதி சௌனகர் தலைமையில் கூடியிருந்த ரிஷிகளுக்கு சூத பௌராணிகரான உக்கிரசிரவஸ் என்ற சௌதி, மகாபாரதத்தை எடுத்துரைக்கிறார்

சௌனகர் (சமக்கிருதம்: शौनक) அதர்வண வேத கால முனிவர். சமசுகிருத இலக்கண ஆசிரியர்களில் ஒருவர். நால்வகை ஆசிரமங்களை அறிமுகப்படுத்தியவர்.[1] இவர் ரிஷி கூட்டங்களின் தலைவர் என்பதால் குலபதி என்றும் அழைக்கப்படுகிறார்.

மகாபாரதத்தில்[தொகு]

நைமிசாரண்ய காட்டில், குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, கதை சொல்லியான உக்கிரசிரவஸ் என்ற சௌதி (சூதர்) மகாபாரதத்தை எடுத்துரைத்தார். [2]

கௌரவர்களிடம் சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர்கள் காடுறை வாழ்வின் போது, சௌனகர், பாண்டவர்ளைத் தேற்ற அறம் மற்றும் சுய விடுதலையில் முனைப்புடன் இருக்கும் ஞானமுள்ளோர் கையாளும் வழிகள் குறித்து அறிவுரை வழங்கினார். [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. (English)Mangaldeva Śāstri, The Rgveda-prātiśākhya with the commentary of Uvaṭa by Śaunaka.; Vaidika Svādhyāya Mandira, Varanasi Cantt.,1959 ,OCLC: 28723321
  2. (English)Mangaldeva Śāstri, The Rgveda-prātiśākhya with the commentary of Uvaṭa by Śaunaka.; Vaidika Svādhyāya Mandira, Varanasi Cantt.,1959 ,OCLC: 28723321
  3. சௌனகர் உபதேசம் - வனபர்வம் பகுதி 2 அ
  4. சௌனகர் உபதேசம் - வனபர்வம் பகுதி 2 ஆ
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌனகர்&oldid=3725110" இலிருந்து மீள்விக்கப்பட்டது