விருச்சகேது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருச்சகேது (Vrishaketu), கர்ணன் - விருஷாலி இணையர்க்கு பிறந்த ஒன்பது மகன்களில் இரண்டாமவர். குருச்சேத்திரப் போரில் விருச்சகேது தவிர மற்ற அனைத்து சகோதரர்கள், 16ஆம் நாள் போருக்கு முன், பாண்டவப் படைகளால் கொல்லப்பட்டனர். [1]. [2] 17ஆம் நாள் போரில் கர்ணன் இறந்த பின், கர்ணனின் பிறப்பின் இரகசியம், குந்தியின் மூலம் பாண்டவர்கள் அறிந்ததால், குருச்சேத்திரப் போருக்குப் பின் பாண்டவர், விருச்சகேதுவிற்கு அங்க நாட்டின் அரசனாக முடிசூட்டினார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.sacred[தொடர்பிழந்த இணைப்பு] texts.com/hin/m08/m08082.htm
  2. http://www.sacred-texts.com/hin/m08/m08048.htm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருச்சகேது&oldid=3495315" இலிருந்து மீள்விக்கப்பட்டது