அத்தினாபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஸ்தினாபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அத்தினாபுரம் (அஸ்தினாபுரம்) மகாபாரதக் கதையில் குரு வம்சத்தினைச் சேர்ந்த கௌரவர்களின் அரசு மற்றும் தலைநகரம் ஆகும். பாண்டவர்களும் இவ்வம்சத்தின் வாரிசுகளே ஆவர். இந்நாட்டினை ஆள்வதற்கே பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருச்சேத்திரப் போர் நடைபெற்றது.
அஸ்தினாபுரத்தினை ஆண்ட பரத குல மன்னர்களின் பட்டியல் பின்வருமாறு:
- சாந்தனு
- சித்ராங்கதன்-சாந்தனுவுக்கும் சத்யவதிக்கும் பிறந்தவர்
- விசித்திரவீரியன் - சித்ராங்கதனின் தம்பி
- திருதராட்டிரன் - - அம்பிகாவின் மகன் (விசித்திரவீரியனின் முதல் மனைவி)
- பாண்டு - அம்பலிகாவின் மகன் (விசித்திரவீரியனின் இரண்டாம் மனைவி}
- தருமர் - குந்தியின் மகன்
- பரீட்சித்து - அபிமன்யுவுக்கும் உத்தரைக்கும் பிறந்த மகன்
- ஜனமேஜயன் - பரீட்சித்தின் மகன்
வெளி இணைப்பு [தொகு]
|
||||||||||||||