குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்
Appearance
(திருக்கண்ணார்கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கண்ணார்கோயில், திருக்கண்ணார் கோயில் |
அமைவிடம் | |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சகஸ்ர நேத்ராசுவரர்[1] |
தாயார்: | சுகுந்த குந்தளாம்பிகை, முருகுவளர்கோதை |
தல விருட்சம்: | சரக்கொன்றை |
தீர்த்தம்: | இந்திரதீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக் கோயில் |
குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் (திருக்கண்ணார் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 17வது சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]சம்பந்தர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை - சீர்காழி சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கதிராமங்கலம் எனுமிடத்திலிருந்து வலப்புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.
சிறப்புகள்
[தொகு]இந்திரன் வழிபட்டுச் சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கையாகும். திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது. இத்தலத்தின் தலமரம் சரக்கொன்றை.
வழிபட்டோர்
[தொகு]திருமால் வாமன மூர்த்தியாக (குறுமாணி) வழிபட்ட தலம்.[1]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில், தினமலர்-கோயில்கள்
- திருக்கண்ணார்கோயில் (குறுமாணக்குடி) பரணிடப்பட்டது 2014-06-28 at the வந்தவழி இயந்திரம்
திருக்கண்ணார்கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: புள்ளிருக்குவேளூர் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்கடைமுடி |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 17 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 17 |