குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரம் பாடல் பெற்ற
குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கண்ணார்கோயில், திருக்கண்ணார் கோயில்
அமைவிடம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கண்ணாயிரமுடையார், கண்ணாயிரநாதர், சகஸ்ர நேத்ராசுவரர்[1]
தாயார்:சுகுந்த குந்தளாம்பிகை, முருகுவளர்கோதை
தல விருட்சம்:சரக்கொன்றை
தீர்த்தம்:இந்திரதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்

குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் (திருக்கண்ணார் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 17வது சிவத்தலமாகும்.

அமைவிடம்[தொகு]

சம்பந்தர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை - சீர்காழி சாலை வழியில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கதிராமங்கலம் எனுமிடத்திலிருந்து வலப்புறமாக சுமார்

மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.

சிறப்புகள்[தொகு]

இந்திரன் வழிபட்டுச் சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கையாகும். திருமணமாகாதோர் இக்கோயிலுக்கு வந்து மாலைசாத்தி வழிபடும் வழக்கமுள்ளது. இத்தலத்தின் தலமரம் சரக்கொன்றை.

வழிபட்டோர்[தொகு]

திருமால் வாமன மூர்த்தியாக (குறுமாணி) வழிபட்ட தலம்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள் 308; திருமகள் நிலையம்;பக்கம் 128,129

வெளியிணைப்புகள்[தொகு]