சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் திருக்கோயில்[1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருச்சித்ரகூடம் |
பெயர்: | சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் திருக்கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | சிதம்பரம் (சிதம்பரம் நடராசர் கோயில் உள்ளே) |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோவிந்தராஜர் |
உற்சவர்: | தேவாதிதேவன் |
தாயார்: | புண்டரீகவல்லி |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
விமானம்: | சாத்வீக விமானம் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
தொலைபேசி எண்: | +91- 4144 - 222 552, 98940 69422. |
சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் சிதம்பரம் நடராசர் கோயிலின் உள்ளே அமைந்துள்ள திருக்கோயில் ஆகும்.
தல வரலாறு[தொகு]
ஒருமுறை கைலையில் சிவனும் பார்வதியும் திருநடனம் புரிந்தனர் , அதில் யார் சிறந்தவர் என பார்வதி ஒரு போட்டி வைத்து தெரிந்து கொள்ளலாம் என அணைத்து தேவர்களையும் அழைத்தாள் . அனைவரும் சிவன் வென்றார் என்றனர் . உடனே பார்வதி திருமாலை வைகுண்டத்தில் வேண்டினாள் . மனம் இறங்கி திருமால் இப்போட்டியில் கலந்து கொண்டார் . சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார் . பார்வதி பெண் என்பதால் அவளால் ஆடமுடியாமல் வெட்கி நின்றாள் . அதனால் திருமால் சிவனே இப்போட்டியில் வென்றார் என்றார் . இதைக்கேட்ட கோபத்தில் பார்வதி காளியாகி ஓட அவளை தடுக்க சிவன் ஊர் எல்லையில் படுக்க , காளி சிவனின் மார்பில் மிதித்து கோபம் தணித்தாள் . கோபம் தணிந்த பார்வதியும் சிவனும் திருமாலை சிவனின் சந்நிதிக்கு எதிரில் குடிகொள்ளுமாறு வேண்டிக்கொண்டார் .
சன்னதிகள்[தொகு]
இக்கோவிலில் சீதை,இராமர்,இலக்குமணன்,ஆஞ்சநேயன் , புண்டரீகவல்லி தாயார் மற்றும் பிற சந்நிதிகள் உள்ளன .
வழிபட்டோர்[தொகு]
சிவன்,பார்வதி,நந்தி,வாசுகி,கைலாயத்தில் உள்ளவர்கள்
பிரம்மா[தொகு]
திருமாலின் நாபிக்கமலத்தில் பிரம்மா அமர்ந்தபடி இல்லாமல் நின்றபடி உள்ள அமைப்பு வித்தியாசமானது.
இவற்றையும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
[[1]]