திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்பெரும்புலியூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் சோழ நாடு காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஒன்றாகும்.

அமைவிடம்[தொகு]

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 53வது சிவத்தலமாகும்.

இறைவன், இறைவி[தொகு]

இங்குள்ள இறைவன் வியாக்ரபுரீசுவரர் அல்லது பிரியநாதர்; இறைவி சௌந்தரநாயகி.

வழிபட்டோர்[தொகு]

புலிகால் முனிவர் (வியாக்கிரபாதர்) வழிபட்ட தலமெனப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]