ஆல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆலமரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆல்
ஆலமரம்
ஆலமரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு மக்னோலியோப்சிடா
வரிசை: Urticales
குடும்பம்: மொராசியே
பேரினம்: ஆலினம்
துணைப்பேரினம்: உரோஸ்டிக்மா
இனங்கள்

பல

ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.

பொருளடக்கம்

பெயர் [தொகு]

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது.[1] அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[2]

பயன் [தொகு]

  • ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
  • நல்ல நிழல் தரும். [3]
  • இதன் இலைகளைத் தைத்து உண்கல இலையாகப் பயன்படுத்துவர்
  • ஆலம் பழத்தைப் பறவைகள் விரும்பி உண்ணும்
  • பசு கன்று ஈன்றபின் போடும் மாசியை வைக்கோல் தாளில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடுவர்
  • yedu nala karthu tarum

சிறப்பு [தொகு]

  • சிவன் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.[4]
  • திருவாலங்காடு என்னும் ஊர் இம்மரத்தால் சிறப்புப் பெற்றுள்ளது
  • 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க' என வாழ்த்துவர்.

படத்தொகுப்பு [தொகு]

அடிக்குறிப்பு [தொகு]

  1. அகல் > ஆல்
    பகு < பகல் > பால்
    துகள் > தூள்
    விழுது > வீழ்
  2. மரத்தின் உறுப்புகளில் ஒன்று வீழ் - தொல்காப்பியம் மரபியல் 90
    ஐது வீழ் இகுபெயல் (மழை விழுதல்) - சிறுபாணாற்றுப்படை 8
  3. தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒரு விதை
    தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
    நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
    அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
    மன்னரக்கு இருக்க நிழல் ஆகும்மே - வெற்றிவேற்கை
  4. ஆலமர் செல்வன் அணிசல் பெருவிறல் கலித்தொகை - 81
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்&oldid=1343163" இருந்து மீள்விக்கப்பட்டது