நாவல் (மரம்)
| நாவல் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நாவல் (சிசிஜியம் கியுமினி) Syzygium cumini
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| சிசிஜியம் கியூமினி (L.) Skeels. |
நாவல் மரம் ஒரு பசுமை மாறாத, வெப்பமண்டலப் பகுதிக்குரிய ஒரு மரமாகும். இது மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். இது, இந்தியா மற்றும் இந்தோனீசியாவுக்கு உரியது. இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். மேலும் 100 ஆண்டுகள் வரை வாழும்.
பொருளடக்கம் |
நாவல்காடு [தொகு]
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுக்காவில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் நாவல்காடு.ஒரு காலத்தில் அதிகமான நாவல் மரங்கள் இருந்ததால் அப்பெயரினைப் பெற்றது.இன்று ஒரே ஒரு மரம் மட்டும் அக்கிராமத்தின் பேரூந்து நிறுத்தத்தில் மிக பெரிய அளவில் காட்சியளிக்கிறது
படத்தொகுப்பு [தொகு]
மருத்துவப் பயன்கள் [தொகு]
நாவல் மருத்துவ மூலிகைப் பயன்பாடுடையது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர்க்கட்டு போக்க இம்மூலிகை பயன்படுகிறது.
பெயர் விளக்கம் [தொகு]
நாவல் பழத்தைத் தின்றால் நாவின் நிறம் கருமையாக மாறும். நா வறண்டு நீர் வேட்கை மிகும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் 'நா+அல்' (நாவல்) என்றனர். துவர்ப்புச் சுவை உள்ள பழம் நாவல்பழம்.