செவ்வாழை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னியாகுமரி சந்தை
வாழைப்பழங்களில் செவ்வாழைச் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது.
பழுக்காத செவ்வாழைப் பழங்கள் பச்சைநிறமும், மஞ்சளும் நிறமும் கலந்து காணப்படும். சாதரண வெப்ப நிலையிலேயே நன்கு பழுக்கும். நன்கு பழுக்கும் போது, நன்கு சிவப்பாக மாறி விடும். இதனை குளிர்பதனப் பெட்டியில் வைக்கப் பட வேண்டும்.
1870 - 1880 ஆண்டுகளின் இடைப்பட்ட காலங்களில் முதன் முதலாக டொராண்டோ சந்தைகளில் இவ்வகைப்பழங்கள் விற்கப் பட்டன.[1]
பொருளடக்கம் |
பயன்கள் [தொகு]
- இயற்கையியலாளர்களின் கருத்துப்படி வடிவமும், நிறமும் அதற்குரியப் பயன்களைத் தரும். அக்கருத்துப்படி, இது சிவப்பு நிறமாக இருப்பதால் இரத்த மண்டலத்திற்கும், ஆண்மைக்கான ஊட்டச்சத்துகளும் இருப்பதாக கருதப்படுகிறது.
- கண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
- செரிமானக்கோளாறுகள் மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
குறிப்புகள் [தொகு]
- அறிஞர் அண்ணா செவ்வாழை என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ John V McAree (1953) The Cabbagetown Store (Toronto: Ryerson Press) p. 19.