தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991
![]() | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||
|
தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ. ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
தொகுதிகள்[தொகு]
1991 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
அரசியல் நிலவரம்[தொகு]
- 1989 தேர்தலில் இரு பிளவுகளாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக, தேர்தலுக்குப் பின் மீண்டும் ஒன்றிணைந்தது. ஜானகி ராமச்சந்திரன் அரசியலிருந்து ஓய்வு பெற்று கொண்டதால் ஜெயலலிதா அதிமுகவின் தலைவரானார்.
- பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-காங்கிரசு கூட்டணி தமிழகத்தில் பெருவாரியான இடங்களை வென்றது. முந்தைய ஆட்சியில் 1989 நாடாளமன்ற தேர்தலில் மத்தியில் வெற்றி பெற்ற ஜனதா தளத்தின் வி. பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி நடந்து வந்தபோது வி. பி. சிங் அவர்கள் கொண்டுவந்த மண்டல் கமிஷன் பரிந்துரையின் போது அதன் கூட்டணியிலிருந்து ஆதரவு கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் அன்றைய தலைவரான அத்வானியிடம் பரிந்துரை செய்யாமலும் அவர் அப்போது வடநாட்டில் நடத்திய ராமா் யாத்திரையை எதிர்த்ததாலும். ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதால். 12 மாதங்களில் வி. பி. சிங் அரசு கவிழ்ந்தது.
- பின்பு நாடாளமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சந்திரசேகர் வெற்றி பெற்று காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பேராதரவுடன் சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பாக சந்திரசேகர் இடைக்கால பிரதமரானார். ஆனால் சிறிது காலத்திலேயே காங்கிரசில் ராஜீவ் காந்தியும் அக்கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால். மத்தியிலும் ஆட்சி கலைக்கபட்டு 1991 ஆம் ஆண்டு நாடாளமன்றத் தேர்தலை சந்தித்தது.
- மேலும் சந்திரசேகரின் ஆட்சியின் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறைந்துவிட்டது என்று காரணம் காட்டி எதிர்கட்சியான அதிமுகவும் மற்றும் அதனுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் அன்றைய தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அரசைக் கலைக்க வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தினர்.
- அதனால் சூன் 1990 இல் சென்னையில் ஈ. பி. ஆர். எல். ஃப் தலைவர் பத்மநாபா எல். டி. டி. ஈ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி அன்றைய மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியசாமி தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார்.
- இதனால் ஜனவரி 1991 இல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனபடுத்தபட்டு சூன் 1991 இல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. [2][3][4][5][6][7][8]
ராஜீவ் காந்தி படுகொலை[தொகு]
- மே 21 1991 இல் தமிழகத்தில் நாடாளமன்ற/சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த இந்திரா காங்கிரசு தலைவரும் அப்போதைய முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் ஶ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் இந்திய தேசிய காங்கிரசு-அதிமுக கூட்டணிக்கு மக்களிடையே பெரும் அனுதாப அலையின் ஆதரவு கிட்டியது. இதனால் அதிமுகவில் எம். ஜி. ஆர்க்கு பிறகு அதிகாரபூர்வமான தலைவராக ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
- மேலும் ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் இலங்கை தமிழர் ஒப்பந்தம் மற்றும் இந்திய இராணுவத்தை கொண்டு ஈழதமிழர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடத்தியது. மேலும் பிரபாகரனின் பெரும் கொரிக்கையான ஈழதமிழகம் தனிநாடு கொள்கைக்கு எதிராக ராஜீவ் காந்தி செயல்பட்டதால். பிரபாகரன் தனது விடுதலைப் புலிகள் அமைப்பில் சிலருக்கு தற்கொலை படையாக 1990 பிற்பகுதியில் பயிற்சி அளித்து வந்ததாகவும் அவர்களை வைத்து ஏவி ராஜீவ் காந்தியை கொன்றார் என்றும் கூறப்படுகிறது.
- ஆனால் ஒரு பக்கம் இலங்கை தனிநாடு பிரிவினையை ஏற்காத சிங்கள அரசாங்கமும், ராஜீவ் காந்தி மீண்டும் இந்திய பிரதமர் ஆகினால் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு பிரிவினை ஏற்படும் என்ற பகை உணர்வால் தற்கொலைபடையை ஏவி கொன்றது என கூறப்படுகிறது.
- மேலும் திமுக விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரனுக்கும் புகழிடம் கொடுத்த நெருக்கமான கட்சியாக இருந்துவந்தது. அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்களின் ஆட்சியை 1991 ஆம் ஆண்டு ஈழ தமிழர்களுக்கும், விடுதலை புலிகளுக்கும் மறைமுகமாக ஆதரவு அளிப்பதை காரணம் காட்டி அவரது திமுக ஆட்சியை எதிர்கட்சியில் ஜெயலலிதா அவர்கள் மத்திய காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் உதவியால் கலைக்கப்பட்டதால்.
- ராஜீவ் காந்தியின் மேல் உள்ள கடும் கோபத்தால் கருணாநிதி அவர்களும் தற்கொலை படைக்கு உதவினார் என்று காரணம் காட்டப்பட்டது. இதனால் கருணாநிதியின் மீது தவறான காரணங்கள் பரவலாக மக்களிடையே காணபட்டதால் திமுக மீது வாக்காளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
கட்சிகளின் நிலவரம்[தொகு]
அதிமுக ஜே-ஜா அணிகள் ஒன்றிணைந்த போது அதில் சேராமல் இருந்த சு. திருநாவுக்கரசர், கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், கருப்புசாமி பாண்டியன், உகம்சந்த் முதலிய அதிமுக தலைவர்கள் திமுகவிலிருந்து பிரிந்த நடிகர் டி. ராஜேந்தர் தொடங்கிய தாயக மறுமலர்ச்சி கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். 1980 களில், வன்னிய ஜாதியனரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க 1987 ம் ஆண்டு வன்னியர் போராட்டம் நடத்திய வன்னியர் ஜாதி சங்கம், டாக்டர் ராமதாசின் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் தனித்து போட்டியிட்டது.
கூட்டணிகள்[தொகு]
இத்தேர்தலில் அதிமுக-காங்கிரஸ், இந்திய காங்கிரசு (சோஷ்யாலிஸ்ட்) கட்சி ஒரு அணியாகவும் ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணியில் திமுக-ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, டி. ராஜேந்திரனின் தாயக மறுமலர்ச்சிக் கழகம் எதிர் அணியில் போட்டியிட்டன. பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட இந்தியன் காங்கிரசு (சோஷ்யலிஸ்ட்) கட்சி வேட்பாளர் சஞ்சய் ராமசாமி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தார்.[9][10]
தேர்தல் முடிவுகள்[தொகு]
தேர்தல் தேதி – 24 சூன் 1991; மொத்தம் 63.92 % வாக்குகள் பதிவாகின.[9]
அதிமுக+ | இடங்கள் | திமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
அதிமுக | 164 | திமுக | 2 | சுயேட்சைகள் | 1 |
காங்கிரசு | 60 | தாமக | 2 | பாமக | 1 |
இந்திய காங்கிரசு (சோஷ்யலிஸ்ட்) | 1 | இந்திய கம்யூனிஸ்ட் | 1 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 1 | ||||
ஜனதா தளம் | 1 | ||||
மொத்தம் (1991) | 225 | மொத்தம் (1991) | 7 | மொத்தம் (1991) | 2 |
மொத்தம் (1989) | மொத்தம் (1989) | 150 | மொத்தம் (1989) | 57 |
ஆட்சி அமைப்பு[தொகு]
அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்த்த நாள் 27 November 2009.
- ↑ Manivannan, R. (25 January 1992). "1991 Tamil Nadu Elections: Issues, Strategies and Performance". Economic and Political Weekly (Economic and Political Weekly) 27 (4): 164–170. http://www.jstor.org/pss/4397536. பார்த்த நாள்: 20 January 2010.
- ↑ Desikan, Shubashree (19-December-2008). "Grace under fire". Business Line. The Hindu Group. பார்த்த நாள் 19 January 2010.
- ↑ Rajasingham, K. T. (22-January-2002). "Srilanka: The Untold Story; Chapter 45: War continues with brutality". Asia Times. பார்த்த நாள் 19 January 2010.
- ↑ Subramanian, T. S. (14 August 1999). "SRI LANKA: Chronicle of murders". Frontline. The Hindu Group.
- ↑ Desikan, Shubashree (28-November-1997). "THE Jain Commission : A political agenda". Frontline. The Hindu Group. பார்த்த நாள் 19 January 2010.
- ↑ Suresh, V. (17 October 1992). "The DMK Debacle: Causes and Portents". Economic and Political Weekly (Economic and Political Weekly) 27 (42): 2313–2321. http://www.jstor.org/pss/4399030. பார்த்த நாள்: 20 January 2010.
- ↑ Jain, Sumitra Kumar (1994). Party politics and centre-state relations in India. Abhinav Publications. பக். 160. ISBN 8170173094, ISBN 9788170173090. http://books.google.com/books?id=Gm9p_VPDZCgC&pg=PA160.
- ↑ 9.0 9.1 1991 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009
- ↑ Arun, K. N. (18 January 2009). "Integrity of judiciary put to test again". இந்தியன் எக்சுபிரசு. பார்த்த நாள் 20 January 2010.