விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்
தோற்றம்
- பரிந்துரைகளுக்கான தகுதிகள்
- இங்கு பரிந்துரைக்கும் தகவல் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏதாவது ஒரு கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும். குறுங்கட்டுரையாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளப்படும்.
- பரிந்துரைக்கப்படும் தகவல் எந்தத் தலைப்புடன் (துறையுடன்) தொடர்புடையதோ அந்தத் தலைப்பின் (துறையின்) கீழாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
- தமிழ்/தமிழர் சார்ந்த தகவல் ஒன்று ஒவ்வொரு வாரமும் இடம் பெறுவதால் அது குறித்த பரிந்துரைக்கு ஒவ்வொரு வாரமும் முக்கியத்துவமளிக்கப்படுகிறது. பிற தலைப்புகளிலான தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் சிறிது காலதாமதமாகலாம்.
- பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பாகவே உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் இடம் பெற்றிருக்கக் கூடாது. எனவே, பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பு இடம் பெறவில்லை என்பதை உங்களுக்குத் தெரியுமா? காப்பகம் மற்றும் அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையும் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- பரிந்துரைக்கும் தகவல்கள் மாறுபட்ட செய்திகளைக் கொண்டதாக இருப்பது விரும்பப்படுகிறது. ஒரே செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக பல்வேறு தகவல்கள் இருக்கும் நிலையில் அதிலிருந்து ஒரு தகவல் மட்டும் காட்சிப்படுத்தப்படும். தொடர்புடைய பிற தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் அதிகமான காலதாமதம் ஏற்படலாம் அல்லது காட்சிப்படுத்தாமலே விடப்படலாம்.
- பரிந்துரைக்கும் தகவலுக்கான மேற்கோள் அக்கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- பரிந்துரைக்கும் தகவலுக்கான படம் முக்கியத்துவம் பெற்றிருப்பின் அதற்கான படத்தையும் பரிந்துரையில் இணைக்கலாம்.
- தகவல் சுருக்கமாகவும் (1-2 வரிகள்), தெளிவாகவும் இருக்க வேண்டும்.
- முறையான வசன அமைப்புத் தேவை (எழுவாய், பயனிலை).
குறிப்பு: தடித்த எழுத்துக்கள் உள்ள தகுதிகள் கட்டாயமனவை.
தமிழர், தமிழ் சார்ந்தவை
[தொகு]அறிவியல்
[தொகு]கணிதம்
[தொகு]தொழினுட்பம்
[தொகு]- பொது மக்கள் பயன்பாட்டுக்காக அணு சக்தியைப் பயன்படுத்திய முதல் நாடு உருசியா ஆகும்.
உயிரியல்
[தொகு]- அடர் சுருட்டை வால் குரங்குகள் கொட்டகளை உடைக்க கற்களை சுத்தியல் கருவியாக பயன்படுத்துகின்றன.
- சாம்பல் உப்புக் கொத்தி ஆர்க்டிக் பகுதியில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உலகம் முழுக்க வலசை போகும் பறவை ஆகும்.
- உலகில் பறக்கக்கூடிய பறவைகளில் எடை மிகுந்தது கானமயில் ஆகும்.
- சுடலைக் குயில் இந்தியப் பழங்கதையியலில் சாதகப் பறவை என்ற அழைக்கபட்டது
- புடு மான் உலகின் சிறிய மான் இனம்.
- மதுரை வாலாட்டிப்பாம்பு மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் பழநி மலைத்தொடர் உள்ளிட்ட சில இடங்குகளில் மட்டுமே காணும் உள்ளக விலங்கு.
- எண்ணெய்த் திமிங்கிலம் தன் உடலிலின் செரிமாண உறுப்பிலிருந்து வெளியேற்றிய திமிங்கில வாந்தி, அம்பர்கிரிஸ் எனும் வாந்தி நறுமணப் பொருள்களை தயாரிக்க பயனுள்ளதாக இருக்கிறது.
- யானை மூஞ்சூறு, இதனை குதிக்கும் மூஞ்சூறு என்றும் அழைப்பர். இதன் மூக்கு யானையின் தும்பிக்கை போன்று நீண்டு இருப்பதால் இதற்கு யானை மூஞ்சுறு எனப்பெயராயிற்று. இவைகள் தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனம் முதல் தெற்கு ஆப்பிரிக்கா வரை பரவியுள்ளது.
இயற்பியல்
[தொகு]வேதியியல்
[தொகு]பொறியியல் & கட்டிடக் கலை
[தொகு]- தானியங்கி எழுதுகோல்: ஒரு மனிதரின் கையொப்பத்தை நகலெடுத்து இடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு இயந்திர சாதனமாகும்.
வானியல், அண்டவியல், புவியியல்
[தொகு]- ரூப் குண்டம், இமயமலையின் பனி சூழ்ந்த நந்த குந்தி மலை மற்றும் திரிசூலி மலையடிவாரத்திற்கு இடையே அமைந்த மிகச்சிறிய ஏரி ஆகும். இந்த ஏரியைச் சுற்றிலும் பனிமலைகள் சூழ்ந்த இந்த ரூப் குண்டத்தை உள்ளூர் மக்கள் மர்ம ஏரி அல்லது எலும்புக் கூடு ஏரி என்று அழைப்பர்.
- சியாகி முகாய் என்ற யப்பானியப் பெண் மருத்துவரே வெண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் ஆசியப் பெண் ஆவார்.
- பந்து மின்னல் - ஒரு ஒளிரும் மின்னல் பந்து ஆகும். இது சில நேரங்களில் இடியுடன் கூடிய மழைக் காலத்திலும் தோன்றும். ஆனால் பொதுவாக இது மின்னலை விட நீண்ட நேரம் நீடிக்கும் தன்மை உடையது.
மருத்துவம்
[தொகு]- எழுத்தாளரின் தசைப்பிடிப்பு என்பது வயது வந்தோருக்கு தசைப் பிடிப்பினால் ஏற்படும் கை விரல்களில் உண்டாகும் இயக்கக் கோளாறு ஆகும்
- கல் குழந்தை - ஒரு கரு, பெண்ணின் கர்ப்ப காலத்தில் இறந்துவிடுவதால், ஒரு அயல் பொருள் எதிர்வினையின் ஒரு பகுதியாக, கருவின் வெளிப்புறம் கால்சியம் படிந்து படிப்படியாக கல்லாக மாறுகிறது. இது தாயின் உடலை இறந்த கருவின் திசுக்களிலிருந்து பாதுகாத்து நோய்த் தொற்றிலிருந்து தடுக்கிறது.
மொழியியல்
[தொகு]- எம். கே. மேனன் எழுதிய அவகாசிகள் என்ற புதினமே இந்திய மொழிகளில் நீளமான புதினமாகும்.
திரைத்துறை
[தொகு]- தியாகராஜ சுவாமிகள் வாழ்க்கை வரலாறு பக்த ஸ்ரீ தியாகராஜா என்ற பெயரில் திரைப்படமாக 1937ஆம் ஆண்டு வெளியானது.
- 1936ஆம் ஆண்டு ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளியான சதி சுலோச்சனா கன்னட மொழியின் முதல் பேசும் படமாகும்.
- 1939 இல் வெளியான சிரிக்காதே திரைப்படம் இந்தியாவின் முதல் தொகைத் திரைப்படம் ஆகும்.
- 1984 இல் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் இந்தியாவின் முதல் 3டி திரைப்படமாகும்
- 1935 இல் வெளியான மேனகா தமிழில் வெளியான முதல் சமூகத் திரைப்படம் ஆகும்
சமயம் / மெய்யியல் / தத்துவம்
[தொகு]- வில்லியம் தொபியாஸ் ரிங்கல்தௌபே என்பவர் தென்னிந்தியாவின் முதல் சீர்திருத்தத் திருச்சபை மறைப்பணியாளர் ஆவார்.
- நடுத்தலை முடியை மழித்தல், துவக்க கால கிரேக்க-உரோமானிய கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் அருட்சகோதரிகள் தங்களின் சமய பக்தி அல்லது பணிவின் அடையாளமாக உச்சந்தலை நடுவில் உள்ள முடிகளை வட்டமாக மழித்துக் கொள்வர். 1972ஆம் ஆண்டில் திருத்தந்தை தலைமுடியை மழித்தல் என்பது அடிமுறைக்கு அடையாளம் எனக்கருதி நடுத்தலைமுடியை மழித்தலுக்குத் தடை விதித்தார்.
- கிஸ்வா என்பது இசுலாமியர்களின் புனித தலமான சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகரத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் உள்ள கஃபா மீது ஆண்டுதோறும் போர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் திரைச்சீலை ஆகும்
விளையாட்டு
[தொகு]பண்டைய வரலாறு
[தொகு]- இரண்டாம் ராமேசஸ் - புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19வது வம்சத்தின் முன்றாவது பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1279 முதல் கிமு 1213 முடிய 66 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். இவர் 14 சேத் திருவிழாக்களை கொண்டாடியவர். இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை ராமேசியம் காலம் என்பர்.
- பாக்திரியா
வரலாறு, நாடுகள், அரசியல், அமைப்பு
[தொகு]- இந்தியாவின் நிலப்பரப்பில் ஆட்சிசெய்த ஒரே கத்தோலிக்க ஆட்சியாளர் பேகம் சம்ரு ஆவார்.
கலைகள், பண்பாடு, தொல்லியல்
[தொகு]- லலித்கிரி, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரத்தின் அருகில் உள்ள மலையில் அமைந்த பண்டைய பௌத்த தூபிகள், சைத்தியங்கள், விகாரைகள், புத்தரின் சிற்பங்கள் கொண்ட தொல்லியல் வளாகம் ஆகும். உதயகிரி, கந்தகிரி குகைகளுக்கு அருகில் உள்ள லலித்கிரியில் பண்டைய பௌத்த புஷ்பகிரி பல்கலைக்கழகம் அமைந்திருந்தது.
- பர்குட் - இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தின், பர்குட் கிராமத்தில் கிமு 200 - 300க காலத்தில் பௌத்தக் கட்டிடக் கலையில் நிறுவப்பட்ட தூபிகளும், தோரணங்களும், நுழைவு வாயில்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் கொண்டுள்ளது.
- நூத்துபியப் பண்பாடு - மத்திய கிழக்கில் கிமு 12,000 முதல் 9,500 முடிய விளங்கிய கற்காலப் பண்பாடு
- கெபல் எல்-அராக் கத்தி - பண்டைய எகிப்தின் பண்பாட்டை காட்டும் கிமு 3450 காலத்திய தொல்பொருள்
- கௌதம புத்தரின் நினைவுச் சின்னங்கள், கௌதம புத்தரின் பூத உடலை எரியூட்டி கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளைக் கொண்டு அசோகர் இந்தியத் துணைக்கண்டத்தில் பல நினைவுச் சின்னங்களை எழுப்பினார்.
- லும்பினி நேபாளத்தின் லும்பினி மாநிலம், ரூபந்தேஹி மாவட்டத்தில் உள்ள பௌத்த புனிதயாத்திரைத் தலமாகும். இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, சித்தார்த்தன் எனும் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தார்.
- எகிப்தின் பெரிய அருங்காட்சியகம் - பண்டைய எகிப்தின் பண்பாட்டை எடுத்துரைக்கும் உலகின் பெரிய அருங்காட்சியகமாகும்.
- ஊரின் முதல் வம்சம் - சுமேரியாவில் ஊர் நகரத்தின் முதல் அரச மரபை கிமு 26வது-25வது நூற்றாண்டுகளில் மன்னர் மெஸ்காலம்துக் நிறுவினார்
பறப்பியல்
[தொகு]சமூகம்
[தொகு]- நுஜூத் அலி உலகில் மிகச்சிறிய வயதில் (10 வயதில்) மணமுறிவு பெற்ற பெண்
அரசியல்
[தொகு]- மக்களை கவரும் கொள்கை என்பது அரசியல் கட்சிகள் தேர்தல் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மக்களைத் தூண்டும் செயலாகும்.
சிஞ்சியாங் தடுப்பு முகாம்கள், இதனை சீனாவின் முறைசாரா முறையிலான சின்ஜியாங் வதை முகாம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
பிற
[தொகு]- சித்வான் தேசியப் பூங்கா, நேபாள நாட்டின் முதல் தேசியப் பூங்காவான இது 1973ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனம் இப்பூங்காவை இயற்கைச் சார்ந்த உலகப் பாரம்பரிய களமாக அங்கீகரித்துள்ளது.