மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை | |
---|---|
![]() | |
பிறப்பு | சூலை 2, 1958 கோதவாடி, தமிழ்நாடு, இந்தியா |
வாழிடம் | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | இளநிலை பொறியியல், (1980) Govt. College Of Technology, கோயம்புத்தூர், முதுநிலை பொறியியல் (இலத்திரனியல்),1982, பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி கோயம்புத்தூர். |
அறியப்படுவது | சந்திரயான்-1, சந்திரயான்-2, இந்திய விண்வெளித் திட்டம் |
குறிப்புகள் | |
திட்ட இயக்குனர், சந்திரயான்-1 & சந்திரயான்-2 |
மயில்சாமி அண்ணாதுரை[1] (Mylswamy Annadurai)(பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி - பொள்ளாச்சி - கோயம்புத்தூர்) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர். தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும்[2] , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார்[3]. இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்[4] இயக்குனராகப் பணிபுரிந்தார். அது சமயம் முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும்.[5]
இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில்[6] தனது பொறியியல் இளங்கலைக் கல்வியைக் கற்றார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.
அண்ணாதுரை தனது விடுமுறை நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். மாணவர்களும் இவரது பேச்சை மிகவும் ஆவலுடன் கேட்கின்றனர். அதனால் இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
தற்போதைய இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், "கையருகே நிலா" என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள், சந்திரயான் பணி ஆகியவை அடங்குவதான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில், "கையருகே செவ்வாய்" என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.
தமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
பிறப்பும், கல்வியும்[தொகு]
1958ஆம் ஆண்டு சூலைத் திங்கள் இரண்டாம் நாள் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதாவடி கிராமத்தில் மயில்சாமி ஆசிரியருக்கும் பாலசரசுவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தாய்மொழியாம் தமிழில் அரசாங்கப் பள்ளிகளிலேயே படித்தவர். புகுமுக வகுப்பை பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியிலும், பொறியியல் இளநிலையைப் பட்டப்படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரி, பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை பூ. சா. கோ.தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்திலும் பெற்று, முழுக்க முழுக்கத் தமிழகத்திலேயே தனது கல்வியைப் படித்து முடித்தார்.
விண்வெளித் தொழில்நுட்ப ஆய்வு[தொகு]
1982ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் ஒரு அடிமட்ட அறிவியல் ஆய்வராச் சேர்ந்து, தனது உழைப்பாலும் கண்டுபிடிப்புகளாலும் படிப்படியாக உயர்ந்து இன்று இந்திய விண்வெளி ஆய்வின் ஒரு முக்கிய அறிவியலாளராகத் தனது பெயரைப் பதித்துள்ளார். எட்டு இந்திய தேசிய செயற்கைக் கோள்களின் செயல் திட்ட இயக்குனராகச் சிறப்பாற்றியதின், பின் 2004இல் இந்தியாவின் முதல் நிலவுக்கலத்திட்டத்தின் இயக்குனராக உயர்ந்தார். கிட்டத்தட்ட 3000 இந்திய மற்றும் சர்வதேச அறிவியலாளர்களைத் தலைமை தாங்கி நிலவில் நீர்கண்டு பிடித்தது ஒரு வரலாற்று நிகழ்வு.
சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றிக்குப் பின், இந்தியாவின் முதல் நுண்ணலைத் தொலையுணர் செயற்கைக் கோள் உட்பட அனைத்துத் தொலையுணர் செயற்கைக் கோள்கள், இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணச் செயற்கைக்கோள், இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணம் போன்ற அறிவியல் செயற்கைக் கோள்களுடன் இந்தியக் கல்லூரி மாணவர்களின் செயற்கைக் கோள்கள் எனப் பெரிய செயற்கைக் கோள் குழுமங்களின் தலைமைத் திட்ட இயக்குனராக 2010இல் உயர்ந்தார். இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் செயற்கைகோள் மையத்திற்கு இயக்குநராக 2015 ஏபரல் முதல் - 2018 ஆகஸ்ட் வரை பணியாற்றினார்.[7].
தேசிய திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு & தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றம்[தொகு]
தற்போது தேசிய திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மன்றத்தின் உபதலைவராகவும் உள்ளார்[3] .
தமிழ்ப்பணி[தொகு]
தனது அறிவியல் பணிக்கு வெளியில் தாய்த்தமிழ் மீது பற்றும் தணியாத தாகமும் கொண்டவர். 'வளரும் அறிவியல்' என்று தமிழில் வெளிவரும் அறிவியல் மாத இதழின் கௌரவ ஆசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட சிறந்த பேச்சாளர், கவிஞர், கட்டுரையாளர். மனிதநேயம் கொண்ட சிறந்த மனிதர். சனி, ஞாயிறுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஓய்வு நேரங்களில் முகநூலின் மூலம் இளைய சமுதாயத்திடம் தொடர்பு கொண்டு கணிணி வாயிலாய், அறிவியல் பார்வை மற்றும் சமூகப் பணியுடன் தமிழார்வத்தையும் ஊக்குவித்து வருகிறார்.
இந்திய நகரங்களின் பல தமிழ்ச்சங்கங்களிலும், அமெரிக்க மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகளிலும் அறிவியல் தமிழில் சிறப்புரை ஆற்றியுள்ளார். கோவைச் செம்மொழி மாநாட்டில் முப்பது அறிவியலாளர்களைக் கொண்டு தலைலைதாங்கி நடத்திய “அறிவியல் தமிழ் ஆய்வரங்கம்” எல்லோராலும் பேசப்பட்ட ஒன்று. இவரது இளமை, கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு அனுபவங்களடங்கிய “கையருகே நிலா” என்ற புத்தகமும், “அரசுப் பள்ளி பாழல்ல அன்னைத்தமிழும் பாழல்ல” என்ற இவரது கவிதையும் , தமிழகப் பள்ளி மாணவர்களால் அதிகம் படிக்கப்படுகிறது. தமிழகப் பள்ளி இறுதி வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இவரது வாழ்க்கைக் குறிப்பும், அறிவியல் பணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தகங்கள்[தொகு]
மயில்சாமி அண்ணாதுரை தமிழில் ஐந்து நூல்களை எழுதியுள்ளார். அவை:
1. கையருகே நிலா
2. சிறகை விரிக்கும் மங்கள்யான்
3. வளரும் அறிவியல்
4. அறிவியல் களஞ்சியம்
5. விண்ணும் மண்ணும்.
"கையறுகே நிலா" என்ற நூல் 2013ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் இலக்கிய விருதை வென்றுள்ளது.
பெற்ற பட்டங்களும் சிறப்புக்களும்[தொகு]
மயில்சாமி அண்ணாதுரை இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார்[8]. அவற்றில் சில பரிசுகளும் பட்டங்களும்,
- கர்மவீரர் காமராசர் நினைவு விருது
- நான்கு இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள்
- முனைவர் பட்டங்கள் (புதுச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்[9], சென்னைப் பல்கலைக்கழகம்[10], எம். ஜி. ஆர். பல்கலைக்கழகம்[11])
- சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகள்
- ஆஸ்திரேலியா-இந்தியா இன்ஷ்டியூட்டின் மேல்னிலை விருது
- சர். சி. வி. இராமன் நினைவு அறிவியல் விருது
- ஹரி ஒம் ஆஷ்ரம் ப்ரடிட் விகரம் சாராபாய் அறியல் ஆய்வு விருது
- கர்நாடக மாநிலஅரசின் அறிவியலுக்கான விருது (2008)[12]
- எச். கே. ப்ரோடிய தேசிய அறிவியல் விருது (2009)[13]
- தேசிய ஏரோநாட்டிகல் அறிவியல் தொழில் நுட்ப விருது
- ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய அறிவியல் விருது
- அமர பாரதி தேசிய அறிவியல் விருது
- தேசிய தரமையத்தின் பஜாஃஜ் நினைவு விருது
- கொங்குச் சாதனையாளர் விருது
- தமிழ் மாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கம்
- அறிவியல் அண்ணா, கர்நாடகா தமிழ்பேரவை, ஹுப்ளி
- டாக்டர் இரஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசு 2012
- சி. பா. ஆதித்தனார் இலக்கியப்பரிசு-2013
பத்மசிறீ விருது[தொகு]
இந்திய அரசு இவருக்கு 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மசிறீ விருதினை வழங்கியது.[14]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ [http:// https://en.wikipedia.org/wiki/Mylswamy_Annadurai]
- ↑ [1]
- ↑ 3.0 3.1 title= Annadurai has been appointed as Vice President for TamilNadu Sate Council for Science and Technology
- ↑ [2]
- ↑ [3]
- ↑ [4]
- ↑ [5]
- ↑ [6]
- ↑ "Doctorate awarded by Anna University, Chennai for Annadurai". Asiantribune.com. 3 August 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-04-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Doctorate awarded by Madaras University for Annadurai". The Hindu. 2009-01-20. 2016-04-28 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Doctorate for Chandrayaan director". The New Indian Express. http://newindianexpress.com/cities/chennai/article12889.ece.
- ↑ "Rajyotsava awards for space scientists". The Hindu (Chennai, India). 30 October 2008. Archived from the original on 5 நவம்பர் 2012. https://web.archive.org/web/20121105143125/http://www.hindu.com/thehindu/holnus/004200810302033.htm.
- ↑ "HK Firodia award". The Times of India. 6 December 2009. Archived from the original on 2012-10-25. https://web.archive.org/web/20121025131326/http://articles.timesofindia.indiatimes.com/2009-12-06/pune/28067333_1_yash-pal-chandrayaan-1-m-annadurai.
- ↑ "Padmashree award for Mylswamy Annadurai". New Delhi, India. https://commons.wikimedia.org/wiki/File:The_President,_Shri_Pranab_Mukherjee_presenting_the_Padma_Shri_Award_to_Dr._Mylswamy_Annadurai,_at_a_Civil_Investiture_Ceremony,_at_Rashtrapati_Bhavan,_in_New_Delhi_on_March_28,_2016.jpg.
வெளி இணைப்புகள்[தொகு]
- மயில்சாமி அண்ணாதுரை பற்றிய காணொளி
- மயில்சாமி அண்ணாதுரையின் காணொளிப் உரைகள்
- Mylswamy Annadurai in the electronic media
- Chat with India's Moon man
- Mylswamy Annadurai in Tamil Media
- Moon Man
- A Star is born
- The man who will give India the moon
- MOM in Mission Mode
- How ISRO mission gave India the moon it asked for
- அண்ணாதுரை அவர் பிறந்த ஊரில் பரணிடப்பட்டது 2008-12-08 at the வந்தவழி இயந்திரம்
- Chandrayaan director gets hero's welcome பரணிடப்பட்டது 2008-12-12 at the வந்தவழி இயந்திரம்
- அண்ணாதுரை தன்னம்பிக்கை இதழில் பரணிடப்பட்டது 2009-06-25 at the வந்தவழி இயந்திரம்
- அண்ணாதுரை மாணவர்களுடன்
- அண்ணாதுரையும் தமிழ் வழிக் கல்வியும்
- கையருகே நிலா