அ. திருமலைமுத்துசுவாமி
அ. திருமலை முத்துசுவாமி | |
---|---|
![]() நூலகப் பேராசிரியர் | |
பிறப்பு | திருமலை முத்துசுவாமி 1928 |
இறப்பு | மதுரை |
இருப்பிடம் | மதுரை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | கலை முதுவர், ஆய்வு நிறைஞர், நூலக அறிவியல் முதுவர், கல்வியியல் இளவர் |
பணி | நூலகப் பேராசிரியர் |
பணியகம் | நெல்லை ம. தி. தா. இந்து கல்லூரி நெல்லை மாவட்ட நூலக ஆணைக்குழு மதுரை தியாகராசர் கல்லூரி சென்னைப் பல்கலைக் கழகம் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் |
அறியப்படுவது | நூலகவியல் |
பட்டம் | அருங்கலைக்கோன் |
சமயம் | சைவம் |
பெற்றோர் | அருணாசலம் - மங்கையர்க்கரசி |
வாழ்க்கைத் துணை | பகவதி |
உறவினர்கள் | பேராசிரியர் முனைவர் அ. சங்கரவள்ளிநாயகம் |
அ. திருமலைமுத்துசுவாமி (1928 - 1980?) தமிழ் விரிவுரையளராக வாழ்க்கைத் தொடங்கி, பொதுநூலக நூலகராகவும் கல்லூரி நூலகராகவும் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழறிஞர். கவிஞர். அவரது படைப்புகளை தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை நாட்டுடைமையாக்கி இருக்கிறது.[1]
பிறப்பு
[தொகு]திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த தமிழாசிரியர் அருணாசலம் பிள்ளை – மங்கையர்க்கரசி என்னும் இணையருக்குத் தலைமகனாக 1928 - ? - ? ஆம் நாள் பிறந்தார். சங்கரவள்ளி நாயகம், சுப்பிரமணியன், காமாட்சி மற்றும் ஒருவர் இவருடன் பிறந்தவர்கள் ஆவர்.[2]
கல்வி
[தொகு]சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம், முனைவர் மு. வரதராசன் ஆகியோரிடம் பயின்று தமிழிலக்கியத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் (BA - Hons) பெற்றார். இப்பட்டம் கலை முதுவர் பட்டத்திற்கு இணையானதாகும். பின்னர் கல்வியியல் இளவர் (Bachelor of Teaching) பட்டமும் நூலக அறிவியல் பட்டயமும் (Diploma in Library Science) பெற்றார். 1961-92ஆம் கல்வியாண்டில் "பரணியிலக்கியம் - ஓர் ஆய்வு" (Study in Parani Literature) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து சென்னைபல்கலைக்கழகத்தில் இலக்கிய முதுவர் (Master of Literature) பட்டம் பெற்றார். [3] 1973 -74 ஆம் ஆண்டில் கர்நாடகப் பல்கலைக் கழகத்தில் நூலகவியல் முதுவர் பட்டப்படிப்பில் (M.Lib.Sc.) பல்கலைக் கழக முதல்வராகத் தேறி பொற்பதக்கம் பெற்றார்.[4]
பணி
[தொகு]திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5]
1953ஆம் ஆண்டில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் நூலகராகப் பணியாற்றினார்.
1955 சூன் முதல் 1960 ஏப்ரல் வரை மதுரை தியாகராசர் கல்லூரியில் நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
1960 சூலை முதல் 1977 வரை சென்னைப் பல்கலைக்கழக நூலகத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[6]
1977 ஆம் ஆண்டு முதல் தான் மறையும் வரை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
வெளிநாட்டுப் பயணம்
[தொகு]1965 ஆம் ஆண்டில் ஐந்து மாதங்கள் கல்வியுலாவாக அமெரிக்க நாட்டிற்குச் சென்று திரும்பினார். அதனால் கிடைத்த பட்டறிவைக் கொண்டு நூலக நாட்டில் நூற்றியிருபது நாள்கள் என்னும் நூலை எழுதினார்.
படைப்புகள்
[தொகு]தமிழிலும் நூலகவியலிலும் புலமைபெற்ற திருமலை முத்துசுவாமி, இவ்விரு துறைகளிலும் தமிழ். ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியிருக்கிறார். அவை பின்வருமாறு:
வ.எண் | ஆண்டு | நூல் | வகை | பதிப்பகம் | குறிப்பு |
01 | 1955 சூன் | நூல்நிலையம் | நூலகவியல் | பண்புப் பதிப்பகம்,சென்னை | |
02 | 1955 | உரிமைப்போர் | வில்லுப்பாட்டு | திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல் | |
03 | 1955 நவம்பர் | யாப்பருங்கலக் காரிகை (வினா-விடை) | இலக்கணம் | ||
04 | 1956 செப்டம்பர் | அறிவியற்சோலை | தமிழ்க் கட்டுரை | திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல் | |
05 | 1957 | முதலுதவி | மருத்துவம் | திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல் | |
06 | 1957 | நூலக ஆட்சி | நூலகவியல் | திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல் | |
07 | ? | பொற்காலம் | ? | ? | 1957ஆம் ஆண்டில் வெளிவந்த நூலக ஆட்சி நூலின் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் நூலில் இந்நூல் குறிக்கப்படவில்லை. |
08 | ? | புதிய தாயகம் | ? | ? | 1957ஆம் ஆண்டில் வெளிவந்த நூலக ஆட்சி நூலின் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் நூலில் இந்நூல் குறிக்கப்படவில்லை. |
09 | 1958 | இலக்கண வழிகாட்டி (அலங்காரம் – அகப்பொருள் – புறப்பொருள்) | இலக்கணம் | டி.டி.சுந்தரம் | |
10 | 1959 சனவரி | நூலக அமைப்பியல் | நூலகவியல் | ஒளவை நூலகம், சென்னை | |
11 | 1959 சூன் | இலக்கியத்தில் விலங்குகளும் பறவைகளும் | இலக்கியத் திறனாய்வு | ஒளவை நூலகம், சென்னை | |
12 | 1959 சூன் | தமிழ்நாடும் மொழியும் | தமிழக வரலாறும் தமிழ் மொழி வரலாறும் | ஸ்டார் பிரசுரம், சென்னை | |
13 | 1959 ஆகத்து | மலைவாழ் மக்கள் (நீலமலை) | மானுடவியல் | ஒளவை நூலகம், சென்னை | |
14 | ? | தேசிய நூலகங்கள் | நூலகவியல் | ? | 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் என்னும் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது. |
15 | ? | தமிழ் இலக்கிய வரலாறு | இலக்கியம் | 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் என்னும் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது. | |
16 | 1960 | மாணவர் தமிழ் இலக்கணம் – ஐந்தாம் வகுப்பு | இலக்கணம் | அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை | |
17 | 1960 | மாணவர் தமிழ் இலக்கணம் – ஆறாம் வகுப்பு | இலக்கணம் | அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை | |
18 | 1960 | மாணவர் தமிழ் இலக்கணம் – ஏழாம் வகுப்பு | இலக்கணம் | அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை | |
19 | 1960 | மாணவர் தமிழ் இலக்கணம் – எட்டாம் வகுப்பு | இலக்கணம் | அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை | |
20 | 1960 | மாணவர் தமிழ் இலக்கணம் – ஒன்பதாம் வகுப்பு | இலக்கணம் | அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை | |
21 | 1960 | மாணவர் தமிழ் இலக்கணம் – பத்தாம் வகுப்பு | இலக்கணம் | அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை | |
22 | 1960 மே | மறுமலர்ச்சிக் கவிஞர்கள் | வாழ்க்கை வரலாறு | சாந்தி நூலகம், சென்னை | |
23 | 1960 சூன் | உயர்நிலைப்பள்ளி நூலகம் | நூலகவியல் | மங்கை வெளியீடு, சென்னை | |
24 | 1960 | விஞ்ஞானத்தின் கதை | அறிவியல் | சாந்தி நூலகம், சென்னை | இளம்பாரதியுடன் இணைந்து எழுதியது |
25 | 1961 சனவரி | சைவ நன்னெறி | சைவமதம் | மங்கை வெளியீடு, சென்னை | |
26 | 1961 ஆகத்து | அமெரிக்க நூலகங்கள் | நூலகவியல் | சாந்தி பதிப்பகம், சென்னை | |
27 | 1962 | முதல் பொதுநூலக இயக்கம் | நூலகவியல் | மங்கை வெளியீடு, சென்னை | |
28 | 1962 | A Bibliography of Tirukkural | நூலகவியல் | மங்கை வெளியீடு, சென்னை | |
29 | 1967 | நூலக நாட்டில் நூற்றிருபது நாள்கள் | நூலகவியல் | மீனாட்சி புத்தக நிலையம், மதுரை | |
30 | 1969 | ABC of Library Science | நூலகவியல் | அன்னை பதிப்பகம், சென்னை | |
31 | 1970 | தமிழகப் பொதுநூலக வளர்ச்சிக்கு மாதிரித்திட்டம் | நூலகவியல் | அன்னை நிலையம், சென்னை | |
32 | 1974 July | Essays on Library Science | நூலகவியல் | Dhanniram Publications, Dharwar | |
33 | 1975 | நூலகவியல் சிந்தனைகள் | நூலகவியல் | தமிழ்ப்பணி வெளியீடு, சென்னை | |
34 | ? | நூலகவியல் ஓர் அறிமுகம் | நூலகவியல் | ||
35 | ? | An Introduction to Tamil Literature | கட்டுரை | ? | 1975ஆம் ஆண்டில் வெளிவந்த இலக்கிய மலர்கள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது. |
36 | 1975 ஆகத்து | இலக்கிய மலர்கள் | இலக்கியத் திறனாய்வு | அருணா பப்ளிகேஷன்ஸ், தியாகராய நகர், சென்னை | |
37 | 1975 | Public Library System - Local Library Authority Madras - A case study | நூலகவியல் | ? | 1975ஆம் ஆண்டில் வெளிவந்த இலக்கிய மலர்கள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது. |
38 | 1977 | ஆஞ்சநேய புராணம் | கவிதை | ஆதிபராசக்தி வெளியீடு, மதுரை | |
39 | 1979 | கிராம நூலகக் கையேடு | நூலகவியல் | நூலகவியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை | |
40 | 1980 | மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் | மருத்துவம் | என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை |
பட்டங்களும் பாராட்டுகளும்
[தொகு]சைவம், தமிழ், நூலகவியல் ஆகியவற்றில் துறைபோகியவராக இருந்த திருமலை முத்துசுவாமிக்கு பின்வரும் பட்டங்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன:
- அருங்கலைக்கோன் – குன்றக்குடி அடிகளார் வழங்கியது
- நூலகக் கலாநிதி – மதுரை ஆதினம் சோமசுந்தரத் தம்பிரான்
- யுனஸ்கோ மன்ற விருது
- அறநெறிச் செல்வர் – பூவாளூர் சைவ சித்தாந்த சபை
- சைவமணி
குடும்பம்
[தொகு]திருமலை முத்துசுவாமி, பகவதி என்பவரை மணந்தார்.
மறைவு
[தொகு]திருமலை முத்துசுவாமி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும்பொழுது 1980ஆம் ஆண்டில் மஞ்சள் காமாலை நோய்க்கு ஆட்பட்டு மரணமடைந்தார்.
சான்றடைவு
[தொகு]- ↑ புத்தகம் பேசுது 2010 சூன்
- ↑ திருமலை முத்துசுவாமி; முதலுதவி; திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்; முதற்பதிப்பு 1955; பக்.1
- ↑ List of Theses accepted for the Research Degrees (viz. Ph.D. and D.Sc.) from 1957-58 to 1961-62, University of Madras, Page No.4
- ↑ திருமலை முத்துசுவாமி அ; நூலகவியல் சிந்தனைகள்; தமிழ்ப்பணி வெளியீடு, சென்னை; 1975; பின்னட்டை
- ↑ திருமலைமுத்துசுவாமி அ; நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை; 1967; பக். 1
- ↑ திருமலைமுத்துசுவாமி அ; நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை; 1967; பக். 2