அ. திருமலைமுத்துசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. திருமலை முத்துசுவாமி
நூலகப் பேராசிரியர்
பிறப்புதிருமலை முத்துசுவாமி
1928
இறப்புமதுரை
இருப்பிடம்மதுரை
தேசியம்இந்தியர்
கல்விகலை முதுவர், ஆய்வு நிறைஞர், நூலக அறிவியல் முதுவர், கல்வியியல் இளவர்
பணிநூலகப் பேராசிரியர்
பணியகம்நெல்லை ம. தி. தா. இந்து கல்லூரி
நெல்லை மாவட்ட நூலக ஆணைக்குழு
மதுரை தியாகராசர் கல்லூரி
சென்னைப் பல்கலைக் கழகம்
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
அறியப்படுவதுநூலகவியல்
பட்டம்அருங்கலைக்கோன்
சமயம்சைவம்
பெற்றோர்அருணாசலம் - மங்கையர்க்கரசி
வாழ்க்கைத்
துணை
பகவதி
உறவினர்கள்பேராசிரியர் முனைவர் அ. சங்கரவள்ளிநாயகம்

அ. திருமலைமுத்துசுவாமி (1928 - 1980?) தமிழ் விரிவுரையளராக வாழ்க்கைத் தொடங்கி, பொதுநூலக நூலகராகவும் கல்லூரி நூலகராகவும் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழறிஞர். கவிஞர். அவரது படைப்புகளை தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை நாட்டுடைமையாக்கி இருக்கிறது.[1]

பிறப்பு[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த தமிழாசிரியர் அருணாசலம் பிள்ளை – மங்கையர்க்கரசி என்னும் இணையருக்குத் தலைமகனாக 1928 - ? - ? ஆம் நாள் பிறந்தார். சங்கரவள்ளி நாயகம், சுப்பிரமணியன், காமாட்சி மற்றும் ஒருவர் இவருடன் பிறந்தவர்கள் ஆவர்.[2]

கல்வி[தொகு]

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம், முனைவர் மு. வரதராசன் ஆகியோரிடம் பயின்று தமிழிலக்கியத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் (BA - Hons) பெற்றார். இப்பட்டம் கலை முதுவர் பட்டத்திற்கு இணையானதாகும். பின்னர் கல்வியியல் இளவர் (Bachelor of Teaching) பட்டமும் நூலக அறிவியல் பட்டயமும் (Diploma in Library Science) பெற்றார். தமிழிலக்கியத்தில் ஆய்வுசெய்து 1961-92ஆம் கல்வியாண்டில் "பரணியிலக்கியம் - ஓர் ஆய்வு" (Study in Parani Literature) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து சென்னைபல்கலைக்கழகத்தில் இலக்கிய முதுவர் (Master of Literature) பட்டம் பெற்றார். [3] 1973 -74 ஆம் ஆண்டில் கர்நாடகப் பல்கலைக் கழகத்தில் நூலகவியல் முதுவர் பட்டப்படிப்பில் (M.Lib.Sc.) பல்கலைக் கழக முதல்வராகத் தேறி பொற்பதக்கம் பெற்றார்.[4]

பணி[தொகு]

திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[5]

1953ஆம் ஆண்டில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் நூலகராகப் பணியாற்றினார்.

1955 சூன் முதல் 1960 ஏப்ரல் வரை மதுரை தியாகராசர் கல்லூரியில் நூலகத் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

1960 சூலை முதல் 1977 வரை சென்னைப் பல்கலைக் கழக நூலகத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.[6] 1977 ஆம் ஆண்டு முதல் தான் மறையும் வரை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

வெளிநாட்டுப் பயணம்[தொகு]

1965 ஆம் ஆண்டில் ஐந்து மாதங்கள் கல்வியுலாவாக அமெரிக்க நாட்டிற்குச் சென்று திரும்பினார். அதனால் கிடைத்த பட்டறிவைக் கொண்டு நூலக நாட்டில் நூற்றியிருபது நாள்கள் என்னும் நூலை எழுதினார்.

படைப்புகள்[தொகு]

தமிழிலும் நூலகவியலிலும் புலமைபெற்ற திருமலை முத்துசுவாமி, இவ்விரு துறைகளிலும் தமிழ். ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியிருக்கிறார். அவை பின்வருமாறு:

வ.எண் ஆண்டு நூல் வகை பதிப்பகம் குறிப்பு
01 1955 சூன் நூல்நிலையம் நூலகவியல் பண்புப் பதிப்பகம்,சென்னை
02 1955 உரிமைப்போர் வில்லுப்பாட்டு திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்
03 1955 நவம்பர் யாப்பருங்கலக் காரிகை (வினா-விடை) இலக்கணம்
04 1956 செப்டம்பர் அறிவியற்சோலை தமிழ்க் கட்டுரை திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்
05 1957 முதலுதவி மருத்துவம் திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்
06 1957 நூலக ஆட்சி நூலகவியல் திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்
07 ? பொற்காலம் ? ? 1957ஆம் ஆண்டில் வெளிவந்த நூலக ஆட்சி நூலின் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் நூலில் இந்நூல் குறிக்கப்படவில்லை.
08 ? புதிய தாயகம் ? ? 1957ஆம் ஆண்டில் வெளிவந்த நூலக ஆட்சி நூலின் கடைசிப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் நூலில் இந்நூல் குறிக்கப்படவில்லை.
09 1958 இலக்கண வழிகாட்டி (அலங்காரம் – அகப்பொருள் – புறப்பொருள்) இலக்கணம் டி.டி.சுந்தரம்
10 1959 சனவரி நூலக அமைப்பியல் நூலகவியல் ஒளவை நூலகம், சென்னை
11 1959 சூன் இலக்கியத்தில் விலங்குகளும் பறவைகளும் இலக்கியத் திறனாய்வு ஒளவை நூலகம், சென்னை
12 1959 சூன் தமிழ்நாடும் மொழியும் தமிழக வரலாறும் தமிழ் மொழி வரலாறும் ஸ்டார் பிரசுரம், சென்னை
13 1959 ஆகத்து மலைவாழ் மக்கள் (நீலமலை) மானுடவியல் ஒளவை நூலகம், சென்னை
14 ? தேசிய நூலகங்கள் நூலகவியல் ? 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் என்னும் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
15 ? தமிழ் இலக்கிய வரலாறு இலக்கியம் 1959ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்நாடும் மொழியும் என்னும் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
16 1960 மாணவர் தமிழ் இலக்கணம் – ஐந்தாம் வகுப்பு இலக்கணம் அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
17 1960 மாணவர் தமிழ் இலக்கணம் – ஆறாம் வகுப்பு இலக்கணம் அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
18 1960 மாணவர் தமிழ் இலக்கணம் – ஏழாம் வகுப்பு இலக்கணம் அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
19 1960 மாணவர் தமிழ் இலக்கணம் – எட்டாம் வகுப்பு இலக்கணம் அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
20 1960 மாணவர் தமிழ் இலக்கணம் – ஒன்பதாம் வகுப்பு இலக்கணம் அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
21 1960 மாணவர் தமிழ் இலக்கணம் – பத்தாம் வகுப்பு இலக்கணம் அலைடு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை
22 1960 மே மறுமலர்ச்சிக் கவிஞர்கள் வாழ்க்கை வரலாறு சாந்தி நூலகம், சென்னை
23 1960 சூன் உயர்நிலைப்பள்ளி நூலகம் நூலகவியல் மங்கை வெளியீடு, சென்னை
24 1960 விஞ்ஞானத்தின் கதை அறிவியல் சாந்தி நூலகம், சென்னை இளம்பாரதியுடன் இணைந்து எழுதியது
25 1961 சனவரி சைவ நன்னெறி சைவமதம் மங்கை வெளியீடு, சென்னை
26 1961 ஆகத்து அமெரிக்க நூலகங்கள் நூலகவியல் சாந்தி பதிப்பகம், சென்னை
27 1962 முதல் பொதுநூலக இயக்கம் நூலகவியல் மங்கை வெளியீடு, சென்னை
28 1962 A Bibliography of Tirukkural நூலகவியல் மங்கை வெளியீடு, சென்னை
29 1967 நூலக நாட்டில் நூற்றிருபது நாள்கள் நூலகவியல் மீனாட்சி புத்தக நிலையம், மதுரை
30 1969 ABC of Library Science நூலகவியல் அன்னை பதிப்பகம், சென்னை
31 1970 தமிழகப் பொதுநூலக வளர்ச்சிக்கு மாதிரித்திட்டம் நூலகவியல் அன்னை நிலையம், சென்னை
32 1974 July Essays on Library Science நூலகவியல் Dhanniram Publications, Dharwar
33 1975 நூலகவியல் சிந்தனைகள் நூலகவியல் தமிழ்ப்பணி வெளியீடு, சென்னை
34 ? நூலகவியல் ஓர் அறிமுகம் நூலகவியல்
35 ? An Introduction to Tamil Literature கட்டுரை ? 1975ஆம் ஆண்டில் வெளிவந்த இலக்கிய மலர்கள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
36 1975 ஆகத்து இலக்கிய மலர்கள் இலக்கியத் திறனாய்வு அருணா பப்ளிகேஷன்ஸ், தியாகராய நகர், சென்னை
37 1975 Public Library System - Local Library Authority Madras - A case study நூலகவியல் ? 1975ஆம் ஆண்டில் வெளிவந்த இலக்கிய மலர்கள் நூலில் குறிக்கப்பட்டு உள்ளது.
38 1977 ஆஞ்சநேய புராணம் கவிதை ஆதிபராசக்தி வெளியீடு, மதுரை
39 1979 கிராம நூலகக் கையேடு நூலகவியல் நூலகவியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை
40 1980 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் மருத்துவம் என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை

பட்டங்களும் பாராட்டுகளும்[தொகு]

சைவம், தமிழ், நூலகவியல் ஆகியவற்றில் துறைபோகியவராக இருந்த திருமலை முத்துசுவாமிக்கு பின்வரும் பட்டங்களும் பாராட்டுகளும் வழங்கப்பட்டன:

  • அருங்கலைக்கோன் – குன்றக்குடி அடிகளார் வழங்கியது
  • நூலகக் கலாநிதி – மதுரை ஆதினம் சோமசுந்தரத் தம்பிரான்
  • யுனஸ்கோ மன்ற விருது
  • அறநெறிச் செல்வர் – பூவாளூர் சைவ சித்தாந்த சபை
  • சைவமணி

குடும்பம்[தொகு]

திருமலை முத்துசுவாமி, பகவதி என்பவரை மணந்தார்.

மறைவு[தொகு]

திருமலை முத்துசுவாமி மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும்பொழுது 1980ஆம் ஆண்டில் மஞ்சள் காமாலை நோய்க்கு ஆட்பட்டு மரணமடைந்தார்.

சான்றடைவு[தொகு]

  1. புத்தகம் பேசுது 2010 சூன்
  2. திருமலை முத்துசுவாமி; முதலுதவி; திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்; முதற்பதிப்பு 1955; பக்.1
  3. List of Theses accepted for the Research Degrees (viz. Ph.D. and D.Sc.) from 1957-58 to 1961-62, University of Madras, Page No.4
  4. திருமலை முத்துசுவாமி அ; நூலகவியல் சிந்தனைகள்; தமிழ்ப்பணி வெளியீடு, சென்னை; 1975; பின்னட்டை
  5. திருமலைமுத்துசுவாமி அ; நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை; 1967; பக். 1
  6. திருமலைமுத்துசுவாமி அ; நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்; மீனாட்சி புத்தக நிலையம், மதுரை; 1967; பக். 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._திருமலைமுத்துசுவாமி&oldid=3687746" இலிருந்து மீள்விக்கப்பட்டது