உள்ளடக்கத்துக்குச் செல்

அ. சங்கரவள்ளிநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. சங்கரவள்ளிநாயகம்
இறப்பு2008
கோவில்பட்டி
இருப்பிடம்கோவில்பட்டி
தேசியம்இந்தியர்
கல்விகலைமுதுவர்
முனைவர்
நூலகவியற் சான்றிதழ்
பணிதமிழ்ப் பேராசிரியர்
அறியப்படுவதுவ.உ.சி. இயல்
சமயம்சைவம்
பெற்றோர்அருணாசலம்
மங்கையர்க்கரசி
பிள்ளைகள்ச. திருமலைமுத்துகுமாரசாமி
உறவினர்கள்அ. திருமலைமுத்துசுவாமி

அ. சங்கரவள்ளிநாயகம் தமிழ்ப்பேராசிரியர்; சொற்பொழிவாளர்; வ.உ.சி.இயல் அறிஞர்; எழுத்தாளர். தமிழறிஞரான சங்கரவள்ளி நாயகம் எழுதிய நூல்களை தமிழக அரசு நாட்டுடமையாக்கியுள்ளது.[1]

பிறப்பு

[தொகு]

அ. சங்கரவள்ளிநாயகம் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த தமிழாசிரியர் அருணாசலம் – மங்கையர்க்கரசி என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார். நூலகப் பேராசிரியர் திருமலைமுத்துசுவாமி, சுப்பிரமணியன், காமாட்சி மற்றும் ஒருவர் இவருடன் பிறந்தவர்கள் ஆவர். [2]

கல்வி

[தொகு]

தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலகவியற் சான்றிதழும் பெற்றார். வ. உ. சிதம்பரனாரின் படைப்புகளை, வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறும் இலக்கியப் பணிகளும் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். [3]

பணிக்கள வாழ்க்கை

[தொகு]

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகரை அடுத்த நல்லாட்டின்புதூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோ. வே. நா. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். [4]

எழுத்துப்பணி

[தொகு]
வ.எண்ஆண்டுநூல்வகைபதிப்பகம்குறிப்பு
01?நூலகம்நூலகவியல்?
02198?தியாக ஏட்டின் தித்திக்கும் வரலாறுவரலாறுகமலம் பிரிண்டர்ஸ், கோயில்பட்டி
03வ.உ.சி.வாழ்வும் இலக்கியப் பணிகளும்ஆய்வுதி.தெ.சை.சி.நூற்பதிப்புக் கழகம்,சென்னைமுனைவர் பட்ட ஆய்வேடு
041994வ.உ.சி.யும் தமிழும்ஆய்வுஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னைஅறக்கட்டளைச் சொற்பொழிவு
051997திருக்குறள் உரைஉரைநூல்?
062002வள்ளுவப் பேரொளியர்இலக்கியம்அகரம், தஞ்சாவூர்
072005புலத்துரை முற்றிய பொய்யில் புலவர்இலக்கியக் கட்டுரைஅகரம், தஞ்சாவூர்
082006பண்டைத் தமிழரின் பண்பாட்டுத் தளங்கள்[5]சமூகவியல்அகரம், தஞ்சாவூர்
092007தமிழ்க் குமுகாயம்குமுகாவியல்அகரம், தஞ்சாவூர்
10?நாட்டுப்புறத் தமிழ்நாட்டாரிலக்கியம்?
11?சிற்பி சிந்தனையில் சிறைப்பட்ட சீர்திருத்தகவிஇலக்கியக் கட்டுரை?
12அடிகள் அகற்றிய அல்லவை ஏழு??

நாட்டுடைமை நூல்கள்

[தொகு]
  • இந்நூலாசிரியர் ஆறு நூல்கள் நாட்டுடைமை நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.[6] அவை வருமாறு;-
  1. தமிழ் ஆவது..
  2. தமிழ்க் குமுகாயம்
  3. வ. உ. சியும் இலக்கிய பணிகளும் [7]
  4. வ. உ. சியும் தமிழும்
  5. வள்ளுவப் பேரொளியார்

தமிழமைப்பு

[தொகு]

சங்கரவள்ளிநாயகம் தான் வாழ்ந்த கோயில்பட்டியில் திருவள்ளுவர் மன்றம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.[8]

பாராட்டுகளும் விருதுகளும்

[தொகு]

சிராப்பள்ளி மருத்துவ மன்ற அரங்கில் தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார் மகன் மருத்துவர் இரா. கலைக்கோவன் தலைமையிலான அமைப்பு சங்கரவள்ளிநாயகத்திற்கு 2007 ஆம் ஆண்டில் தமிழறிஞர் விருது வழங்கியது.[8]

மறைவு

[தொகு]

சங்கரவள்ளிநாயகம் கோயில்பட்டியில் 2008 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நாட்டுடமையாக்கப்பட்ட நன்னன் நூல்களுக்கு உரிமைத் தொகை:முதல்வர் வழங்கினார்.". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2023/Aug/14/writer-nannan-books-nationalized-money-given-by-chief-minister-4054995.html. பார்த்த நாள்: 13 July 2025.
  2. திருமலை முத்துசுவாமி; முதலுதவி; திண்டுக்கல் பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல்; முதற்பதிப்பு 1955; பக்.1
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-09-01. Retrieved 2021-09-01.
  4. பொக்கிஷம், நாறும்பூநாதன்
  5. பண்டைத் தமிழரின் பண்பாட்டுத் தளங்கள். அன்னம் - அகரம் வெளியீட்டகம்.
  6. இந்த யூடிப்பு பதிவு வழியே ஆறு நூல்களையும் அறியலாம்
  7. வ. உ. சியும் இலக்கிய பணிகளும். பரிசல் வெளியீடு.
  8. 1 2 3 திரும்பிப்பார்க்கிறோம் – 30, கலைக்கோவன் இரா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சங்கரவள்ளிநாயகம்&oldid=4308578" இலிருந்து மீள்விக்கப்பட்டது