தேன் நிலவு (திரைப்படம்)
தேன் நிலவு | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஸ்ரீதர் சித்ராலயா |
கதை | ஸ்ரீதர் |
இசை | ஏ. எம். ராஜா |
நடிப்பு | ஜெமினி கணேசன் வைஜெயந்திமாலா |
வெளியீடு | செப்டம்பர் 30, 1961 |
ஓட்டம் | . |
நீளம் | 15125 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தேன் நிலவு 1961-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நகைச்சுவை மிளிர்ந்த இத்திரைப்படத்தில் ஏ.எம். ராஜாவின் இசையில் கவியரசு கண்ணதாசன் வரியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் பெற்றன. "ஓஹோ எந்தன் பேபி", "பாட்டுப் பாடவா", "காலையும் நீயே" போன்றவை புகழ் பெற்றவை. தமிழ்த் திரைப்படங்களில் அன்றைய நாளில் பெரும் புதுமையாக, இது பெரும்பாலும் காசுமீர் மாநிலத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பாக எடுக்கப்பட்டது.