திருச்செங்கோடு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்செங்கோடு வட்டம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்செங்கோடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 92 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

இவ்வட்டத்தில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 631,507 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 316,604 ஆண்களும், 314,903 பெண்களும் உள்ளனர். 173,932 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 48.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 75.01% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 54625 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 101,029 மற்றும் 491 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.49% , இசுலாமியர்கள் 1.95%, கிறித்தவர்கள் 1.23%, மற்றும் பிறர் 0.32% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்செங்கோடு_வட்டம்&oldid=2986466" இலிருந்து மீள்விக்கப்பட்டது